உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எஸ்ஐஆர், ஓட்டு திருட்டே தோல்விக்கு காரணம்: பீஹார் தோல்விக்கு எதிர்க்கட்சிகள் சப்பைக்கட்டு

எஸ்ஐஆர், ஓட்டு திருட்டே தோல்விக்கு காரணம்: பீஹார் தோல்விக்கு எதிர்க்கட்சிகள் சப்பைக்கட்டு

புதுடில்லி; எஸ்ஐஆர், ஓட்டு திருட்டு போன்றவையே பீஹார் சட்டசபை தேர்தல் தோல்விக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் கூறி இருக்கின்றன.பீ'ஹார் சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றிருக்கிறது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் படுதோல்வியை சந்தித்து இருக்கின்றன. வெற்றிக்கான காரணங்களை பாஜ, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் அடுக்கி, ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0ifl4dsc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இப்படியான சூழலில் தோல்விக்கு எஸ்ஐஆரும், ஓட்டுத் திருட்டுமே காரணம் என்று எதிர்க்கட்சிகள் புகார் கூறி இருக்கின்றன. இதுகுறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியதாவது;கூட்டணி மீது நம்பிக்கை வைத்த பீஹார் வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் முடிவு உண்மையிலேயே ஆச்சரியம் தருகிறது. தொடக்கம் முதலே நியாயமற்ற முறையில் நடந்த தேர்தலில் நம்மால் வெற்றி பெற முடியவில்லை. எங்கள் போராட்டம் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கானது ஆகும். காங்கிரசும், இண்டி கூட்டணியும் தேர்தல் முடிவை ஆழமாக பகுப்பாய்வு செய்து ஜனநாயகத்தை காக்க எங்கள் முயற்சிகளை மேற்கொள்ளும் வகையில் திறம்பட செயல்படுவோம். இவ்வாறு ராகுல் கூறினார்.காங்கிரசின் பீஹார் பார்வையாரும், மூத்த தலைவருமான அசோக் கெலாட் கூறியதாவது;பீஹார் தேர்தல் முடிவு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. தேர்தல் பிரசாரத்தின் போதும் கூட பெண்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.10,000 தரப்பட்டது. தேர்தல் கமிஷன் இதை பார்த்துக் கொண்டு வாய் மூடி மவுனியாக இருந்தது.ஏன் இதுபோன்ற செயல்களை தேர்தல் கமிஷன் தடுக்கவில்லை? இதை தான் ராகுல் ஓட்டுத் திருட்டு என்றார். ஆளும்கட்சியுடன் தேர்தல் கமிஷன் இணைந்து செயல்படுகிறது என்றார். பவன்கெரா, செய்தித் தொடர்பாளர், காங்கிரஸ், கூறுகையில், இந்த தேர்தலானது தலைமை தேர்தல் கமிஷனுக்கும், பீஹார் மக்களுக்குமான நேரடி போட்டி. தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், பீஹார் மக்களை விட அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறார் என்றார்.அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாடி கட்சி கூறுகையில், பீஹாரில் எதிர்க்கட்சிகள் மோசமாக தோற்க எஸ்ஐஆர் காரணம். இது ஒரு தேர்தல் சதி. பீஹாருக்கு பின்னர், தமிழகம், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் அல்லது வேறு எந்த மாநிலத்திலும் சாத்தியமில்லை. தேர்தல் சதி அம்பலாகிவிட்டது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

முதலை ஆதவ்
நவ 15, 2025 19:33

இவர் குடும்பம் ஊ பி யை கொள்ளை அடித்து கொள்ளை ராஜ்யம் செய்ததது... முலாயம் சிறிது காலமே ஆரம்ப பள்ளி ஆசிரியர். ஆனால் பல பல லட்சம் கோடிக்கு உங்க குடும்பம் அதிபதி...எப்படி? வெள்ளை அறிக்கை விடவும் துணிவு இருந்தால்...


Satish NMoorthy
நவ 15, 2025 16:59

As long as you play appeasement politics, you will never come to power. Secondly, Rahul Gandhi should resign as LOP and give that role to someone who is capable.


duruvasar
நவ 15, 2025 10:38

வரும் 5 மணிலா தேர்தல் முடியும் வரை இதை சொல்லிகொண்டுருக்கவேண்டிய அவசியம் புள்ளி கூட்டணிக்கு இருக்கிறது. வெளிநாட்திலிருந்து வரும் கட்டளைப்படி இது தொடரும். தமிழ்நாட்டில் கூடுதலாக பிஜேபி உள்ளவந்துடும் என்ற கோஷமும் இன்னும் பலமாக இருக்கும் .பாராளுமன்ற கூட தொடர் ஆர்பிம்பதற்கு முன் அதானி பெயர் வரும் அதை6உம சேர்த்து கூறுவார்கள். அது போக இதுவரை டெல்லி பயங்கரவாத தாக்குதலுக்கு இவர்களில் ஒருவரும் கணடனம் கூட தெரிவிக்கவில்லை.


Raj
நவ 15, 2025 10:19

தோல்விக்கான காரணத்தை ஆராயமல் எஸ் ஐ ஆர் யை குறைக்கூறுவது தோல்விக்கான காரணம் அல்ல. ராகுல் இந்திய அரசியலை பற்றி அயல்நாடுகளில் மிகவும் தவறாக பேசுவது கேவலம். காங்கிரஸ் கட்சி அவரது குடும்பத்தாரால் தொடங்கப்பட்டு, அந்த கட்சிக்கு ஏன் தலைமை பொறுப்பை ஏற்கமாட்டிங்கிறார், அது அவரது திறமையின்மை. சரியான முடிவுகளை எடுக்க தகுதியான தலைவர் கிடையாது, அதனால் இப்பொழுது காங்கிரஸ் தொண்டர்கள் எல்லாம் வெளியேற தொடங்கி விட்டார்கள். இப்படி போனால் காங்கிரஸ் இல்லாமல் போய்விடும். விழித்து கொள்ள வேண்டும் ராகுல்.


chennai sivakumar
நவ 15, 2025 09:58

வேலை இல்லாத நாவிதர் பூனைக்கு க்ஷவரம் செய்தாராம். அது போல இருக்குது தோற்றவர்களின் புலம்பல்.


vbs manian
நவ 15, 2025 09:56

ஊழல் வன்முறை தவிர வேறு எதுவும் தெரியாத இவர்களுக்கு வோட்டு எப்படி விழும். மக்கள் விழித்துக்கொண்டு விட்டார்கள். நாட்டை எல்லாவிதத்திலும் வளர்க்கும் மோடிக்கு கிடைத்த பரிசு. டி கடை தள்ளு வண்டி எங்கும் குயு ஆர் code ஜொலிக்கிறது.


kjpkh
நவ 15, 2025 09:28

எத்தனை வாக்காளர்கள் என் ஓட்டை திருடி விட்டார்கள் என்று புகார் அளித்து இருக்கிறார்கள்.


SIVA
நவ 15, 2025 08:36

நல்ல வேலை ஓட்டு திருட்டு தேர்தல் கமிஷன் உடந்தை என்று அப்படியே உளறி கொண்டு இருகாங்க , எங்க தோல்விக்கு சரியான காரணத்தை கண்டு பிடுச்சு அடுத்த தேர்தலில் கடும் போட்டி வரும் என்று நினைத்தேன் , இனி எந்த தேர்தல் வந்தாலும் பிஜேபிக்கு ராகுல் இருக்க பயமேன் ....


Velan Iyengaar, Sydney
நவ 15, 2025 08:19

ஆதார் இணைப்பு மட்டும் போதாது. கருவிழி, கை ரேகை முதலியவற்றையும் பதிவு செய்து அதனை ஒப்பிட்டு பார்த்து ஓட்டு போட அனுமதிக்க வேண்டும். இல்லையேல் இந்த ஓட்டு கொள்ளை கும்பல் ஆள் மாறாட்டம் செய்து தேர்தலில் புது திருமங்கலம் பார்முலா மாதிரி ஒன்றை கண்டுபிடிக்கும் ...


Kasimani Baskaran
நவ 15, 2025 07:18

வாக்காளர் பட்டியல் தொடர்ந்து சீரமைக்கப்பட்டு வேண்டும். தேசிய அடையாள அட்டைமாக ஆதாரை அங்கீகரித்து அணைத்து விபரங்களையும் சரிபார்க்க வேண்டும். பிறப்பு, இறப்பு போன்றவை டிஎன்ஏ ஆய்வு ஆதாரங்கள் மூலம் பதிவு செய்யப்பட வேண்டும். உண்மையான வாக்குரிமை உள்ள இந்தியர்கள் மட்டும் வாக்களித்தால் அனைத்தும் சரியாக இருக்கும்.


முக்கிய வீடியோ