உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்

இந்தியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரித்த ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இத்தகைய வியத்தகு முன்னேற்றம் தனியார் துறையால் நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலையிலும், பஸ்களை அரசே இயக்கி, அதில் ஏற்படும் நஷ்டத்தை மக்கள் தலையில் கட்டும் கொடுமை நடக்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=guhtenxz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஹைதராபாதை தலைமையிடமாகக் கொண்டு, 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' நிறுவனம் செயல்படுகிறது. 'விக்ரம்- எஸ்' என்ற ராக்கெட்டை 2022ல் வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பிய நம் நாட்டின் முதல் தனியார் நிறுவனம் என்ற சாதனையை இந்நிறுவனம் பெற்றது. அதை தொடர்ந்து தற்போது சிறிய செயற்கைக்கோள்களை புவி சுற்று வட்ட பாதையில் நிலைநிறுத்தும் திறன் கொண்ட 'விக்ரம்- 1' என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது.இதை சோதனை முயற்சியாக ஏவ, அதற்கான பணிகள் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நடந்தன. இந்நிலையில் இன்று (ஜூலை 18) விண்ணில் ஏவப்பட்டது. 11.30 மணிக்கு ஏவ திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், சற்று தாமதமாக 12.05 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.விக்ரம்-1 ராக்கெட் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.இந்த ராக்கெட் 350 கிலோ எடை வரை சுமக்கும் திறன் உடையது. அதிக உந்துவிசை கொண்ட திட எரிபொருள் ராக்கெட் பூஸ்டர்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பெயருக்கான காரணம்!

இந்தியாவின் விண்வெளிப் பயணத்தைத் தொடங்கி வைத்த டாக்டர் விக்ரம் சாராபாயின் நினைவாக விக்ரம்-1 என ராக்கெட்டுக்கு பெயரிடப்பட்டு உள்ளது. ஸ்கைரூட்டின் விக்ரம்-1 வெற்றிகரமாக சுற்றுப்பாதையை அடைந்ததன் மூலம் இந்தியா விண்வெளி துறையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த சாதனை இந்தியாவில் தனியார் விண்வெளித் துறை அபரிமிதமாக வளர்ந்துள்ளது என்பதை விவரிக்கிறது.

2030க்குள் 50 ராக்கெட்டுகள்!

தனியார் ராக்கெட் விக்ரம்- 1 திட்டமிட்ட புவி வட்டப்பாதைக்கு அனுப்பி அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து இந்தியா சாதனை படைத்துள்ளது. இது குறித்து ஸ்கை ரூட் நிறுவனர் பரத் கூறியதாவது: இந்தியாவின் முதல் தனியார் துறை ஏவுதல் வெற்றி அடைந்தது பெருமை அளிக்கிறது. முதல் முயற்சியிலேயே புவி சுற்றுப்பாதைக்கு செல்வது, வெற்றி பெறுவது அவ்வளவு எளிதானது அல்ல. விக்ரம் ராக்கெட் 100 சதவீதம் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டது. வரும் 2030ம் ஆண்டிற்க்குள் எங்கள் நிறுவனம் மூலம் 50 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தியாவில் மேலும் பல எலான் மஸ்குகள் உருவாக வாய்ப்புள்ளது, என்றார்.

பிரதமர் மோடி வாழ்த்து

இது குறித்து பிரதமர் மோடி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய மைல்கல் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம், இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1-ஐ ஏவியது. இந்தத் திட்டம் நமது இளைஞர்களின் திறமையை எடுத்துக்காட்டுகிறது. நமது விண்வெளித் துறை சீர்திருத்தங்கள், புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவுக்கான புதிய வாய்ப்புகளை எவ்வாறு உருவாக்குகின்றன என்பதையும் இது காட்டுகிறது. இந்த வெற்றிகரமான ஏவுதலுக்காக, ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் குழுவினர் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். விக்ரம்-1 வானில் உயர்ந்து, சரித்திரம் படைத்து, வருங்கால தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கட்டும். அனைத்து இந்தியர்களையும், குறிப்பாக எனது இளம் நண்பர்களையும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தைப் பின்தொடருமாறும், #IndiaWithVikram1 என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி ஸ்கைரூட் குழுவின் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

போனில் வாழ்த்து

விக்ரம் 1 ராக்கெட் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, ஸ்கை ரூட் விஞ்ஞானிகள் குழுவினருக்கு பிரதமர் மோடி மொபைல் போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அவர்களது முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தார். விஞ்ஞானி குழுவினர் நேரில் வந்து சந்திக்குமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' தயாரித்த 'விக்ரம்-1' ராக்கெட் விண்ணில் செலுத்தியது மாபெரும் சாதனை. இந்த ராக்கெட் மூலம் நான் அனுப்பிய வந்தேமாதரம் செய்தி விண்வெளிக்கு சென்றதில் மகிழ்ச்சி. பெருமைமிகு தருணத்தை ஏற்படுத்திய இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியையே சாரும்இது குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது: ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரிய தருணம்; கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வாய்ப்பு வழங்கியதன் வாயிலாக இந்த ஏவுதல் சாத்தியம் ஆகி இருக்கிறது. இந்தியாவுக்கு என் வாழ்த்துக்கள்; ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்கிறார்கள். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த ஏவுதலை நிகழ்த்திய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமை பெற்ற ஸ்கை ரூட் நிறுவனத்திற்கு என் வாழ்த்துக்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த பெருமை பிரதமர் மோடியை சாரும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளிக்காவிட்டால், நாம் இன்று இந்த நிகழ்வை கண்டிருக்க முடியாது. இன்று பிரதமர் மோடியின் முடிவு சரியானது என்று நாங்கள் உணர்கிறோம். ஏனெனில் வெறும் ஐந்து ஆண்டுகளில் விண்வெளி பொருளாதாரத்திலும், விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கையிலும் ஒரு மிகப்பெரிய உத்வேகம் ஏற்பட்டுள்ளது இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் கணிசமான வளர்ந்துள்ளது. வரும் ஆண்டுகளில் அது மேலும் வளர்ச்சி அடையும். இந்த திட்டம் வெற்றி இந்தியாவில் வளர்ச்சி அடைந்து வரும் தனியார் விண்வெளித்துறைக்கு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. விண்வெளி துறையில் இந்தியா வளர்ந்து வரும் திறன்களையும் பிரதிபலிக்கிறது. இந்த சாதனை உலக அளவில் சாதனையாக, விண்வெளி துறையில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதற்கு முக்கியமானதாக அமையும். இவ்வாறு ஜிதேந்திர சிங் கூறினார்.

அரசு பஸ் இயக்கத்தில் நஷ்டம்

இப்படி தனியார் துறை நிறுவனங்களின் வளர்ச்சி அசுர வேகத்தில் விண்ணில் பாய்ந்து கொண்டிருக்கும் நிலையில், இன்னும் அரசு தரப்பு பஸ் போக்குவரத்தை தன்வசம் வைத்துக் கொண்டிருக்கிறது. அதில் ஏற்படும் பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை ஈடுகட்ட மக்கள் தலையில் வரி பாரத்தை ஏற்றிக் கொண்டிருக்கிறது. தனியார் முதலீடு இல்லாத காலத்தில் அரசு பஸ் போக்குவரத்தை நடத்த ஆரம்பித்தனர். இப்போது நிலைமை வெகுவாக மாறிவிட்டது. நாட்டு வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு முதல் மின்சாரம் தயாரிப்பது, ராக்கெட் ஏவுவது என அனைத்திலும் தனியார் முன்னிற்கின்றனர். அப்படி இருக்கும் நிலையில் அரசு இன்னும் பஸ் போக்குவரத்தை நடத்தி, அதில் நஷ்டம் காண்பது தேவைதானா? அரசு செய்யும் எந்த ஒரு தொழிலும் லஞ்சம், ஊழல் முறைகேடு, திறனற்ற நிர்வாகத்தால் நஷ்டம் ஏற்படுவது வாடிக்கையாக இருக்கிறது. மொபைல் போன் தொழில் துறையை கண்காணிக்கும் TRAI அமைப்பு போல, அரசு கண்காணிப்பு வேலையை மட்டும் தான் செய்ய வேண்டுமே தவிர, பஸ் போக்குவரத்து போன்ற தொழில்களை செய்யக்கூடாது.தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!விக்ரம்1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்புவீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

raja
ஜூலை 19, 2026 08:17

அரசு போக்கு வரத்து பஸ்ல் திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்டம் புறங்கை நக்கி நக்கியே நஸ்டத்தில் நடந்து கொண்டு இருக்கிறது....


spr
ஜூலை 19, 2026 06:22

இங்கு பாராட்டப்பட வேண்டியது ஒரு இளைஞர் பட்டாளம் சிறப்பான முறையில் திட்டமிட்டபடி விண்வெளியில் ஒரு சாதனை புரிந்திருக்கிறது என்பதுதான் பாராட்டுவோம் எல்லாச் செயல்களிலும் நேர்மறையான விளைவுகளும் எதிர்மறையான விளைவுகளும் இருக்கும் தவிர்க்க இயலாது மத்திய அரசின் தொழில் விஞ்ஞானக் கட்டமைப்புக்கள் யானையைப் போல பராமரிக்க அதிகம் செலவழிக்க வேண்டியுள்ளது அங்கிருக்கும் பலர் உற்பத்தித்திறனைக் குறித்துக் கவலைப்படுவதில்லை எனவே மருத்துவம், கல்வி, குடிநீர் காவற்துறை ராணுவம் போன்ற ஆதாயம் பார்க்கக்கூடாத துறைகளை மத்திய அரசு தன வசம் வைத்துக் கொண்டு இதர செயல்களைத் தனியாரிடம் விட்டுவிடுவதுதான் சிறப்பு செய்ய வேண்டியதெல்லாம் இவர்களைக் கண்காணிப்பு வளையத்தில் வைத்துக் கொள்வது மட்டுமே இவர்கள் "எலான் மாஸ்க்" போன்ற பணக்காரர்களால் விலைக்கு வாங்கப்பட வாய்ப்புள்ளது அது நடக்காமல் பார்த்துக் கொள்வதுதான் அரசுத் தொழில் அனைத்துமே மக்களால்தான் இயங்குகிறது அவர்கள் நேர்மையாக நடந்து கொண்டால் ஊழல், லஞ்சம் இழப்பு இவை இருக்க வாய்ப்பில்லை கெடுத்தது நாமே அரசியல்வியாதிகள் முரடர்கள் ஆனால் முட்டாள்கள் அவர்களுக்கு உதவி செய்வதும் அறிவுரை கூறுவதும் ஊழல் செய்ய உதவுவதும் சிக்காமல் பார்த்துக் கொள்வதும் சிக்கினால் தப்பிக்க வைப்பதுவும் அனைத்தும் நாமே நாம் திருந்தினால் பல குற்றங்கள் குறையும்


Kasimani Baskaran
ஜூலை 19, 2026 05:19

வாழ்த்துகள்.


Mani . V
ஜூலை 19, 2026 03:50

இனி ஒட்டு மொத்த இந்தியாவின் குடுமியும் தனியார் கையில். அவர்கள் அரசுக்கு எந்தெந்த தரவுகளை மட்டும் தர வேண்டும்? வெளிநாட்டுக்கு எந்தெந்த தரவுகளை விற்க வேண்டும்? எந்தெந்த தரவுகள் மூலம் கனிம வளங்களை கொள்ளையடிக்க முடியும்? என்று தெரியும்.


gopi
ஜூலை 19, 2026 07:18

மணி அண்ணா சிங்கப்பூரில் கூட அனைத்தின் தனியாரே... இங்கே கம்பி சுத்தாதே


பல்லவி
ஜூலை 18, 2026 23:00

சுரங்கத்தை , சிமெண்ட் , பெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயு, எரிபொருள் ,தொலைபேசி என்று எல்லாம் வித்தாச்சு ஆகாயம் மட்டுமே இருந்தது இப்போ அதை எல்லாம் விற்று விட்டார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது அதை காப்பாற்ற வேண்டியது அவசியம் .


krish
ஜூலை 19, 2026 07:17

அதே பல்வலி...திமுக ஆட்டைய போட முடியாது பல்லவி அம்மா


ஊர்குருவி
ஜூலை 18, 2026 19:36

ஆல்லாளுக்கு ஆகாயத்தில் பறப்பதால் உண்மையிலேயே உலகுக்கு என்ன பயன் என்பதை முதலில் ஆராய அரசு ஒரு அர்ராவ்ய்ச்சிக்கூடத்தை நிறுவி ஆராயவேண்டும் .விஞான வளர்ச்சி என்ற போர்வையில் நிலத்தை மிகவும் மாசுபடுத்திவிட்டோம் .இப்போது ஆகாயத்தையும் விடமாட்டோம் ஏங்கிறீர்கள் .அரசு இதை கட்டுப்படுத்தும் முறையை ஆராயவேண்டும் .இன்னும் 100 -200 வருடங்களில் இப்போதிருக்கும் மக்கள் தொகையைவிட பாதி மக்கள்தொகைதான் நிலத்தில் இருக்கும் .இப்போதே சில ஆசிய நாடுகளில் மக்கள் தொகை குறைந்துவருவதை இப்போதே அறிகிறோம். ஏன் ஆகாயத்தை ஆராயவேண்டும் .ஆகாயத்தில் முக்கியமான பாதுகாப்பு கவசம் என்று ஒன்று கடவுளால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது .அந்த கவசம்தான் மக்களின் பெரும் பாதிப்பிலிருந்து காப்பாற்றிவருகிறது .அதிதாம் ozone என்னும் oxxizen ஓ3 எனப்படுவது .அந்த கவசம் நீங்கினால் உலகு மொத்தம் அழிந்துவிடும் .ஒரு புல்பூண்டு இருக்காது மனிதஇனம் அழிந்துவிடும் .அது 15 கிலோமீட்டர் உயரத்திலிருந்து 35 கிலோமீட்டர் உயரம்வரையில் இருந்து சூரிய வெப்பத்திலிருந்துவரும் தீக்கதிர்களை நீக்கி சுத்தமான உயிர்கள்வாழ் தகுதியான வெப்பத்தைமட்டுமே பூமிக்கு அனுப்புகிறது .அதில் ஓட்டைவிழுந்தால் உலகுக்கு பேராபத்தாய் முடியும் .அரசு ஆராய்ந்து அதன் தாக்கத்தை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் .


தமிழ்வேள்
ஜூலை 18, 2026 19:34

பஸ் போக்குவரத்து தனியார் மயமாக்கினால் குறைந்தது நூறு பஸ்களோடு இயங்கும் லிமிடெட் கம்பெனிகளுக்கு மட்டுமே அனுமதி தரவேண்டும்.. ஒன்றிரண்டு பஸ் வைத்துள்ள ஓனர்களின் பஸ்கள் மட்டுமே விதிமுறைகள் மீறி விபத்து ஏற்படுத்துகின்றன. மேலும் அப்படி அனுமதி வழங்கப்படும் கம்பெனிகள் 30 சதவீத பஸ்களை உட்புற கிராமங்களுக்கு கண்டிப்பாக இயக்க வேண்டும் என்ற நிபந்தனை வேண்டும்... திருப்பூர் பகுதி போல பெண்களை முன்புறம் ஏற்றி டூயட் பாடி வண்டி ஓட்டும் டிரைவர் கண்டக்டர் கும்பல் பணி நீக்கம் செய்யப்படுவதுடன் மீண்டும் போக்குவரத்து தொழிலுக்கே வரமுடியாதவாறு கடுமையான தண்டனைகளை தரவேண்டும்....


V.Mohan
ஜூலை 18, 2026 18:11

இத்தனை பேர் கருத்து போடுகிறார்கள், நல்லது பாராட்டுங்கள். ஆனால் விஞ்ஞான உலகம் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதை அறிய முயற்சியுங்கள் நண்பர்களே. பத்து வருடங்களுக்கு முன் பிரதமர் பெருமை பட்டது என்ன? ஹாலிவுட் பட தயாரிப்பு செலவை விட குறைவான செலவில் செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்பினோம் என்று பெருமை பட்டோம். நாம் வியாபார ரீதியில் ராக்கெட் பல நாடுகளுக்காக அனுப்பினோம். இந்த சூழலில் இந்தியாவின் "இஸ்ரோ" பின் தங்கிவிட்டது. சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், சற்று லேட்டாக ரஷ்யா- இவர்கள் தற்சமயம் செலவையும், விண்வெளி குப்பைகளை குறைக்கும் விதமாக செயற்கை கோளை அனுப்பும் ராக்கெட் திரும்பவும் பூமிக்கு வந்து அடுத்து பல முறைகள் ஏவக்கூடிய வகை ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றின் மூலம் செயற்கை கோள்களை அனுப்புவதால் செலவு கணிசமாக குறைந்துவிட்டது. இஸ்ரோ அந்த முறையைப் பற்றி சற்றும் சிந்திக்காமல் பின் தங்கிவிட்டது. இனி இஸ்ரோ ராக்கெட்கள் விண்ணில் பாய மிக அதிக செலவாகும். இந்த முன்னேற்றத்தை ஏற்படுத்த தவறியவர்கள் யார்??? 100 க்கு மேல் இஸ்ரோ விஞ்ஞானிகள் இஸ்ரோ வேலையை உதறிவிட்டு தனியாருக்கு சென்றுவிட்டனர். - காரணம் இஸ்ரோ விண்ணில் சென்று மறுபடி பூமிக்கு வரும் ராக்கெட்டுகளுக்கான தொழில் நுட்பத்தை தொடங்கவேயில்லை, அது கண்டிப்பாக பல வருடங்கள் ஆகும். நாம் தற்பெருமை அடித்துக் கொண்ட நேரத்தில் விண்வெளி விஞ்ஞானம் சீறிப் பாய்ந்துவிட்டது. இஸ்ரோ ஏமாந்ததா அல்லது மோடி ஏமாந்தாரா ????


KUMAR BABY
ஜூலை 18, 2026 17:26

அருமை


Nancy
ஜூலை 18, 2026 15:09

make all PRIVATE


SANKAR
ஜூலை 18, 2026 18:43

Cool.pvt sector to reach pslv level of ISRO will take atleast 4 decades .ISRO still makes the cheapest launch vehicle and mangalyan done with in the budget of a Hollywood film and even NASA praised us.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை