உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சினிமாவை அச்சுறுத்தும் சமூக வலைத்தள கொள்ளையர்கள்: ஐஎப்டிபிசி காட்டம்

சினிமாவை அச்சுறுத்தும் சமூக வலைத்தள கொள்ளையர்கள்: ஐஎப்டிபிசி காட்டம்

சமூக வலைத்தளங்களின் அசுர வளர்ச்சியால் இந்திய திரைப்படத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தங்களது சமூக வலைத்தளங்களில் அதிக பாலோயர்களை வைத்துள்ள சிலர் திரைப்படத் தயாரிப்பாளர்களை விமர்சனங்கள் என்ற பெயரில் அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சில சங்கங்கள் இது குறித்து நீதிமன்றத்தை நாடும் நிலை வரை ஏற்பட்டது. பாரம்பரியம் மிக்க ஊடக நிறுவனங்கள் இருந்தவரையில் இப்படிப்பட்ட அச்சுறுத்தல் திரையுலகில் வந்ததில்லை. ஆனால், சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு பலரும் 'பிளாக்மெயில்' செய்யும் விதமாக நடந்து கொள்வதாகவும் பலர் கூறி வருகிறார்கள்.

இது குறித்து, இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கவுன்சிலான ஐஎப்டிபிசி(IFTPC) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,

“இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கவுன்சில் (IFTPC), இந்தியாவில் 375-க்கும் மேற்பட்ட முன்னணி திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதன்மையான அமைப்பு. கடந்த சில ஆண்டுகளாக சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்களில் சிலர் திரைப்படங்களுக்கு எதிராக தீங்கிழைக்கும் மற்றும் இழிவான விமர்சனங்களை வெளியிடுகின்றனர். இதை வைத்து தயாரிப்பாளர்களிடமிருந்து மிரட்டி கொள்ளையடிக்கும் போக்கும் அதிகரித்துள்ளது.IFTPC மற்றும் அதன் உறுப்பினர்கள் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானவர்கள் அல்ல. உண்மையான, ஆக்கபூர்வமான விமர்சனங்களை வரவேற்கின்றனர். ஆனால், சில நேர்மையற்ற நபர்களின் இந்த செயலால் இந்திய திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் பொருளாதார நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முடிவு கட்டுவதற்கு அனைத்து வகையான சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள IFTPC முடிவு செய்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர்.இந்திய அளவில் உள்ள அனைத்து மொழி திரைப்பட சங்கங்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் இப்படியான சில சமூக வலைத்தள கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்க முடியும் என சில மூத்த தயாரிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ManiMurugan Murugan
செப் 02, 2025 23:23

அருமை பொழுதுபோக்கு செயலி என்பது அதற்கு மட்டும் பயன்படவேண்டும் ஆனால் இவை அத்தி யா வசம் என்ற நீரை க்கு வந்துள்ளது திரை துறையினர் இதை தடுப்பது நன்றே


நிக்கோல்தாம்சன்
செப் 02, 2025 21:32

தமிழகத்தில் சினிமா ஒரு கார்பொரேட் குடும்பத்திடம் சிக்கியுள்ளதே அதற்கு என்ன தீர்வு


Jagan (Proud Sangi )
செப் 02, 2025 18:37

சினிமா ஒழிந்தால் நல்லதே. பேச்சுரிமை எல்லாருக்கும் உண்டு. சமூக வலைத்தளங்களில் பதிவிடத்தான் செய்வோம். புலம்பல் நல்ல படம் எடுக்க பாருங்கள்


ராமகிருஷ்ணன்
செப் 02, 2025 17:06

சினிமா துறையால் நாடு நாசமா போனது போதும் அறிவு கெட்ட தமிழர்கள் கண்ட கண்ட நடிகர்கள் பின் செல்வதை நிறுத்த சினிமா முழுவதும் ஒழிய வேண்டும். நடிகர்கள் சம்பாதிக்க உதவும் ரசிகர்கள் என்ற கிறுக்கு பசங்க கூட்டம் நாடு முன்னேறும் வழியில் செல்ல வேண்டும்


ASIATIC RAMESH
செப் 02, 2025 15:46

நாட்டையே நாசப்படுத்தும் இன்றைய பெரும்பாலான திரைப்படங்கள்... தீயவற்றையெல்லாம் 95 சதவீதம் காட்டிவிட்டு கடைசி ஐந்து சதவீதம் மட்டும் நல்ல முடிவு சொல்வதுபோல் படங்களில் காட்டுவதே நம் நாட்டின் கலாச்சார மற்றும் அரசியல் சீரழிவிற்கு முக்கிய காரணம். சோசியல் மீடியா அதையும் மிஞ்சுகிறது.... இரண்டுமே தேவையில்லாத ஆனிதான். இந்த சென்சார் போர்டு என்பது எதற்கு என்றே தெரியவில்லை.


ஆரூர் ரங்
செப் 02, 2025 15:44

சமூக வலைதள இன்புளுயன்சர்களை சரிகட்டி மொக்கையான படங்களையும் ஆஹா ஓஹோ சூப்பர் என உருக வைக்கும் தயாரிப்பாளர்களை என்ன செய்வீர்கள்? 90% தயாரிப்பாளர்கள் அந்த வேலையைதானே செய்கிறார்கள்?


அன்பு
செப் 02, 2025 17:36

சமூகச் சீரழிவை ஊக்குவிக்கும், சாதி மத கலவரங்களை தூண்டி விடும், சாதி மத வெறுப்புகளை விதைக்கும், உண்மைக்கு புறம்பாக திரிபு படுத்தி உண்மைகதை என்று புரட்டு, உருட்டுக்களை மக்கள் முன் வைக்கும் படங்கள்தான் வெளிவருகின்றன. இவை அழிவதால் மக்களுக்கு எந்த வகையான நஷ்டமும் இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை