உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதெல்லாம் முடியாதுங்க! அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்த மம்தா மருமகன் மனு தள்ளுபடி

அதெல்லாம் முடியாதுங்க! அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்த மம்தா மருமகன் மனு தள்ளுபடி

புதுடில்லி: ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கில், அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மம்தா மருமகனுமான அபிஷேக் பானர்ஜி தாக்கல் செய்ய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டுகளில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து, முதல்வர் மம்தா பானர்ஜி மருமகனும், திரிணமுல் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவருமான அபிஷேக் பானர்ஜியிடம் விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் நேரில் ஆஜர் ஆகுமாறு அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.இதனை எதிர்த்து, அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி ருஜிரா பானர்ஜி சுப்ரீம் கோட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள், திரிவேதி மற்றும் சந்திர சர்மா ஆகியோர் அடங்கி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அபிஷேக் அமலாக்கத்துறை சம்மனை பல முறை தவிர்த்துள்ளார். இதனால் நீதிபதிகள் அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

M Ramachandran
செப் 09, 2024 20:05

திராவிட திருடர்களுக்கும் வணங்காத திருடர்களுக்கு பல ஒற்றுமை.


sankaranarayanan
செப் 09, 2024 17:20

இருவரையும் சும்மா உள்ளெ போடுங்கப்பா உண்மைகள் வெளிவரும்


Sridhar
செப் 09, 2024 15:06

நிலைமை கெஜ்ரிவால் ரேஞ்சுக்கு போயிருக்கே பலே அத்தையும் அவுட்டு, மருமகனும் அவுட்டு வங்காளம் சுதந்திரபிரகடனம் செய்யுமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை