உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிபதி பணியில் சேர 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி கட்டாயம்; சுப்ரீம் கோர்ட் உத்தரவு

நீதிபதி பணியில் சேர 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி கட்டாயம்; சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி: ''நீதிபதியாக பணியாற்ற, குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும்'' என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக, இந்திய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் ஏ.ஜி. மாசிஹ் மற்றும் கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவு:* நீதித்துறையில் பணியாற்ற குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும்.* இந்த தீர்ப்பு ஏற்கனவே தொடங்கி தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் நீதித்துறை பணியமர்த்தலுக்கு பொருந்தாது. * அடுத்த முறை தொடங்கப்படும் நியமன நடைமுறையில் இருந்து இந்த தீர்ப்பு பொருந்தும். * சிவில் நீதிபதிகள் தேர்வு எழுதும் எந்தவொரு விண்ணப்பதாரரும் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய அனைத்து மாநில அரசுகளும் விதிகளை திருத்தம் செய்ய வேண்டும்.* மூன்றாண்டுகள் பயிற்சி பெற்றிருப்பதை, 10 ஆண்டுகள் வழக்கறிஞர் பதவியில் உள்ள ஒரு வழக்கறிஞரால் சான்றளிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட வேண்டும்.* நீதிபதிகளுக்கு சட்ட எழுத்தராக இருந்த அனுபவமும் கணக்கிடப்படும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.வழக்கறிஞர் பணி அனுபவம் இல்லாத புதிய சட்ட பட்டதாரிகளை நீதித்துறை பணியில் நியமிக்கும் போது பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. எனவே நீதித்துறை பணிக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் உத்தவிட்டுள்ளது. தலைமைநீதிபதி கவாய் உத்தரவில் கூறுகையில், 'ஒரு நாள் கூட வழக்கறிஞர் பணி அனுபவம் இல்லாதவர்களை நீதிபதிகளாக நியமிக்கும் நடைமுறை 20 ஆண்டுகளாக இருந்தது. இந்த நடை முறை வெற்றிகரமான அனுபவமாக இல்லை. * நீதிபதிகளாக நியமிக்கப்படுவோர் தங்கள் முதல் பணி நாளில் இருந்தே வாழ்க்கை, சுதந்திரம், சொத்துக்கள் தொடர்பான வழக்குகள், வழக்கு நடத்துவோரின் நற்பெயர் ஆகியவற்றை கையாள வேண்டி உள்ளது. வழக்கறிஞராக பணியாற்றுவதன் மூலம் கிடைக்ககூடிய அனுபவத்தை வெறும் சட்ட புத்தகம் மூலம் கிடைக்கும் அறிவும், பயிற்சியும் கொடுத்து விட முடியாது என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

mohanakrishnan G
மே 20, 2025 21:46

SC/ST advocates should be reduced one year practising as advocate enough.... Because of there is no reservation following in the judiciary department so we request to relax kr exempt from 3 years practicing to 1 year for SC and ST advocates


MUTHU
மே 20, 2025 17:42

பொதுவாய் போலீஸ் இன்ஸ்பெக்டர் சப் இன்ஸ்பெக்டர் பணிகளில் சேருவதற்கு கட்டாயம் வழக்கறிஞர் பயிற்சி இருத்தல் வேண்டும்.


Singaram
மே 21, 2025 05:12

3 வருடம் போதாது. என்றொல் செய்த தேதியிலிருந்து 10 வருடமும் தனியாக 3 சீனியர் கீழ் இல்லாமல் 3 வருடமும் பணி புரிந்திருக்க வேண்டும். அரசியல் தொடர்பு கட்டாயம் இருக்க கூடாது அவர்களை மட்டுமே நீதிபதிகளாக நியமிக்க வேண்டும்.


Singaram
மே 21, 2025 05:21

காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் சட்ட பயிற்சி எடுத்து இருக்க வேண்டும் என்பதைவிட ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் ஒரு வாங்கிலை நி ய ம னம் செய்தால் பொருத்தமாக இருக்கும்..


அப்பாவி
மே 20, 2025 13:49

தீர்ப்பு அளிக்காவிட்டாலும் சம்பளம் வந்துரும்.


Ramesh Sargam
மே 20, 2025 12:59

இதேபோல அரசியலுக்கு வர வேண்டுமென்றால், குறைந்த பட்சம் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்கவேண்டும் என்றும், குறைந்தது மூன்று வருடம் மக்கள் பணி செய்திருக்கவேண்டும் என்றும், அவர்கள் மீது ஒரு குற்ற வழக்குகளும் இருக்க கூடாது என்றும் சட்டம் இயற்றவேண்டும்.


SUBBU,MADURAI
மே 20, 2025 12:52

அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் உயர்நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் கட்டுக் கட்டாக கோடிக் கணக்கான பணம் கைப்பற்றப் பட்டதே அந்த விவகாரம் என்னாச்சு? முதலில் அந்த நீதிபதியின் மேல் FIR வழக்கு பதிய சொல்லி போலீஸுக்கு உத்தரவு போட்டீர்களா? அந்த நீதிபதிக்கு இடமாற்றம் மட்டுமே தண்டனையா? இது உச்சநீதிமன்றத்திற்கு அழகா? தவறு செய்த நீதிபதிக்கு கண்டனம் தெரிவித்து அவரை பதவிநீக்கம் பண்ணாதது ஏன்? இப்படி இருந்தால் பொது மக்களுக்கு நீதிமன்றங்களின் எப்படி நம்பிக்கை வரும்


ஆரூர் ரங்
மே 20, 2025 12:51

முதன்முறையாக எம்எல்ஏ ஆன அனுபவமில்லாத கத்துக்குட்டி வாரிசு அடிப்படையில் துணை முதல்வர் ஆகியுள்ளார். இது பரவாயில்லையா?.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை