உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கவர்னருக்கு எதிரான தமிழக அரசு வழக்கு: பிப்.,4ல் இறுதி விசாரணை

கவர்னருக்கு எதிரான தமிழக அரசு வழக்கு: பிப்.,4ல் இறுதி விசாரணை

புதுடில்லி: கவர்னர் ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு பிப்.,4ம் தேதிக்கு ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட், அன்றைய தினம் இறுதி விசாரணை நடக்கும் என அறிவித்து உள்ளது.சென்னை, பாரதியார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பதவி காலம் நிறைவடைந்ததை அடுத்து, புதிய துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவை 2023ல் தமிழக அரசு அமைத்திருந்தது.அந்த குழுவில் பல்கலை மானிய குழுவின் உறுப்பினரையும் சேர்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு, கவர்னர் ரவி அறிவுறுத்தல் கொடுத்திருந்தார். இது விதிமுறைகளுக்கு எதிரானது என கூறி, கவர்னரின் முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், வேறு காரணங்களுக்காக வழக்கின் விசாரணை நடைபெறவில்லை.இந்நிலையில், இதே விவகாரத்தில் தமிழக அரசு சார்பாக இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: அண்ணா பல்கலை மற்றும் அண்ணாமலை பல்கலை ஆகியவற்றின் துணைவேந்தர்களின் பதவி காலம் கடந்த ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களில் முடிவுக்கு வந்துள்ளது. பாரதிதாசன் மற்றும் பெரியார் பல்கலைகளில் துணைவேந்தர்களின் பணி நீட்டிப்புக் காலமும், வரும் பிப்ரவரி மற்றும் மே மாதங்களுடன் நிறைவுக்கு வருகிறது.இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழக அரசு தேடுதல் குழுவை அமைத்துள்ள சூழலில், ஏற்கனவே செய்தது போலவே பல்கலை மானிய குழுவின் உறுப்பினரை இந்த குழுவில் சேர்க்க வேண்டும் என்று கவர்னர் ரவி மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.ஏற்கனவே இதே விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, மீண்டும் கவர்னரின் புதிய அறிவுறுத்தல் விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே இந்த விவகாரத்தில் மூல வழக்கை விசாரிக்கும்போது, இந்த புதிய தகவல்களையும் கருத்தில் கொண்டு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை பிப்.,4ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் அன்றைய தினம் இறுதி விசாரணை நடக்கும் என அறிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

T.sthivinayagam
ஜன 22, 2025 21:48

நீதிபதிகள் நியமனத்தில் சமுகநீதி கடைபிடிக்கவில்லை என்று சில கட்சிகள் கூறுவது ஏன் என்று மக்கள் கேட்கிறார்கள்


vivek
ஜன 22, 2025 23:11

மக்கள் கேக்குறாங்கோ,மக்கள் கேக்குறாங்கோ...... இப்படி எவ்ளோ நாள் ஓட்டுவே நாயகம்..... சொந்த மூளை எப்போ வேலை செய்யும்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 22, 2025 19:40

அரசு நோஸ்கட் வாங்கவே வாய்ப்பு .... ஆனால் எத்தனை முறை குட்டுப்பட்டாலும் திருந்தாத ஜென்மங்கள் ....


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 22, 2025 19:40

வழக்கு சம்பந்தமாக கவர்னருக்கு எழுத்து மூலம் நோட்டீஸ் அளிக்கப்படாத பட்சத்தில் அவர் தனது கோரிக்கையை அரசுக்கு விடுக்கலாம் ..... இந்த அடிப்படை அம்சம் கூட தெரியாமல் கழக அடிமை வழக்குரைஞர்கள் கோர்ட்டுக்கு மறு மனு கொடுத்ததுதான், அதுவும் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்படாத நிலையிலேயே மறு மனு கொடுத்ததுதான், கோர்ட்டை அவமதிக்கும் செயல் .....


Dharmavaan
ஜன 22, 2025 19:28

ஜனாதிபதி ஆணையால் இவற்றை தடுக்க முடியாதா ?


ManiK
ஜன 22, 2025 19:02

சுபரீம் கோர்ட் தேச நலன் காக்க வேண்டிய முக்கியமான நேரம் இது. திமிர்பிடித்த திமுக அரசை தண்டிக்க வேண்டும். வைஸ் சான்லர் நியமனங்கள் மீது தீவிர லஞ்ச ஒழிப்பு விசாரனை நடத்த உத்தரவிட வேண்டும்.


திகழ்ஓவியன்
ஜன 22, 2025 18:54

இவரும் அண்ணாமலையும் ஒன்று தான் இரண்டும் IPS , ஒன்று பதவி காலம் முடிந்தும் இருக்கு , இன்னொன்று WAIT LIST WATER GLASS CARRY BOY ஆனா இரண்டும் ஆடுவது கொஞ்சம் ஓவர் தான்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 22, 2025 19:42

சமூக விரோதிகள் என்றாலே இருவருக்கும் அலர்ஜி ......


Dharmavaan
ஜன 22, 2025 20:48

சமூக விரோதிகளுக்கு இவர்களை கண்டால் அலர்ஜி


joe
ஜன 22, 2025 18:26

தமிழன் திருந்தனும்..ஜனநாயகம் என்பது சாதிவெறி அரசியல் வாதிகளின் கூடாரமல்ல .கவர்னரை மதிக்காத ஜனநாயக போக்கு தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல .ஆளும் ஊழல்வாதிகள் உண்மையான ஜனநாயகத்தை குறை கூறி ஊழல் ஆட்சியை தருகிறார்கள் .உண்மையை புரிந்துகொள்.கவர்னரை குறை கூறாதே.. தமிழக கவர்னர் ரவி அவர்கள் நல்ல கல்வி அறிவு கொண்ட உண்மையான அதிகாரி .மறவாதே .மறவாதே . நன்றி


Ray
ஜன 22, 2025 19:48

நாட்டிலுள்ள நாலைந்து IPS களில் இவர் முதல் ராங்க் இவ்வளவு பெரிய பட்டமும் கல்வி அறிவும் படைத்தவர்கள் வேறு யாருமில்லையே என்கிறார். பல்கலைக்கழகங்களை முதல் போட்டு உருவாக்கி பன்னெடுங்காலமாக மேம்படுத்தி வளர்த்தெடுத்த மாநில கல்வியாளர்கள், ஆட்சியாளர்களுக்கு அதன் நிர்வாக உரிமை பல்கலைக்கழக மானிய குழுவிற்காம் பேர்தான் மானியக்குழு மானியம் தருமா என்றால் அதுதான் இல்லை உன் வீட்டுக்கு ஊரன் என்ன நாட்டாமை? ஒரு தனிமனிதன் சொல்வதெல்லாம் ஜன நாயகமா? பைசா தரமாட்டேன் என்பதுதான் ஜனநாயகமோ? துணை வேந்தராக கல்வியாளர்கள்தான் இதுநாள் வரை நியமிக்கப் படுகிறார்கள். இனி யார் வேண்டுமானாலும் வரலாம் என்கிறது மோடி அரசு. அவர்களுக்கும் ஆளுநருக்கு தருவதைப்போல மாநில அரசு நம் வரிப்பணத்திலிருந்து சம்பளம் தரவேண்டும்


Kasimani Baskaran
ஜன 22, 2025 21:24

கட்சிக்காரர்களை பதவியில் நியமிக்க அல்லது ஒரு குறிப்பிட்ட விலையில் பதவிகளை விற்க இப்படி ஒரு உருட்டு. யுஜிசி பல்கலைக்கழகத்தை மேம்படுத்துவதில், குறிப்பிட்ட திட்டங்களுக்கு அள்ளிக்கொடுக்கிறது.


Ray
ஜன 23, 2025 03:07

முன்பு கல்வியாளர்களைத்தான் துணை வேந்தர்களாக நியமித்தார்கள் அல்லது எலாம் விட்டார்கள் பிஜேபியோ இப்போது கிரிக்கெட் சங்க BCCI தலைவராக நியமித்தது போல கல்வித் துறைக்கு ஸ்நானப் பிராப்தியும் இல்லாத சங்கிகளை / கட்சிக்காரர்களை பதவியில் நியமிக்க அல்லது ஒரு குறிப்பிட்ட விலையில் பதவிகளை விற்க இப்படி ஒரு உருட்டு. இதை செய்யத்தான் பிஜேபி முயல்கிறது. ஆளுனரா போடறதுக்கே கட்சில ஆளில்லையாம்


joe
ஜன 22, 2025 18:15

சாதி வெறியை உண்டாக்கும் அரசியல் வாதிகளை ஆதரித்தால் தமிழ் நாடு கண்டிப்பாக மோசமான நிலைக்கே செல்லும்.திராவிடம் என்று சொல்லி தமிழர்களை அடிமையாக்கும் அரசியல் வாதிகளை நம்பும் தமிழர்களால் அடிமையாகத்தான் வாழமுடியும் .கண்டிப்பாக முன்னேறமுடியாது. கவர்னர் ரவி அவர்களும் தன்னால் முயன்ற அளவு கருத்துரைகள் சொல்லியும் தமிழர்கள் திருந்தவில்லை என்றால் அது ஊழல் அரசியல் வாதிகளுக்கு அடித்தளமான ரவுடி அரசியலையே சமுக பணி என சொல்லி தமிழனை அடிமையாக்கிக்கொண்டே போவானுங்க .இது உறுதி ..தமிழன் எவனும் திராவிடன் அல்ல .இந்த தமிழ்நாடு திராவிட பூமி அல்ல.திராவிட பூமி பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது .இது தெரியாத ஒவ்வொரு தமிழனும் முட்டாளே .இனியாவது உன்னை நீயே அறிந்து கொள்ள முயற்சி செய் .ஊழல் அரசியல் வாதிகளை நம்பாதே.திராவிடம் என்ற சொல் தமிழனுக்கு சொந்தமானதல்ல. கீழ் சாதி அரசியல் வாதிகளை நம்பாதே.கவர்னர் ஆட்சி அதிகாரம் படைத்த ஒரு ஜனநாயக உயர் அதிகாரி .அவரை குறை சொல்பவர்கள் ஊழல் அரசியல் வாதிகள் என்பது 100% உண்மை .ஜனநாயகத்தை மதித்து ,மக்களை மதித்து உண்மை பேசுபவர்களே உண்மையான அரசியல் வாதிகள் .சாதியை தூண்டிவிடும் அரசியல் வாதிகள் உண்மையான அரசியல் வாதிகள் அல்ல.புரிந்து கொள்.அடிமையாக வாழாதே .அரசியல் வாதிகளுக்கு அடிமையாகாதே .


Dharmavaan
ஜன 22, 2025 17:56

ஆளுநர் செயல்பாடுகள் பற்றி கோர்ட் விசாரிக்கலாமா நிபுணர்கள் விளக்கம் வேண்டும் எந்த விதத்தில் நீதிகள் ஆளுநரைவிட உயர்ந்தவர்கள்?


Ray
ஜன 23, 2025 19:09

பல நாடுகளில் பிரதமரும் ஜனாதிபதி அல்லது அதிபர்களும் நீதிமன்ற விசாரணை முடிவில் ஜெயிலுக்கு போவதை பார்க்கிறோம் இந்த நிலையில் ஆளுநர் எல்லாம் ஒரு ஆளுன்னு நினைச்சுக்கிட்டா எப்படி? தன்னை வானளாவிய அதிகாரம் படைத்தவன்னு சொல்லிக்கிட்ட ஒரு சபாநாயகர் பின்னர் நாடாளு மன்றத்தில் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ள பயந்து ரெஸ்ட் ரூமுக்குள் ஓடி ஒளிந்த கதையை கண்டோமே.


joe
ஜன 22, 2025 17:46

கவர்னருக்கு எதிரான வழக்கில் ,வேறு கவர்னரை மாற்றினாலும் அல்லது கொண்டு வந்தாலும் இந்த ஆளும் ஊழல் "டப்பா தலையன்" ஆட்சியில் அந்த கவர்னரையும் குறை கூறி மாற்றுவான் .ஊழலே ஜனநாயகம் என்பது இந்த தமிழகத்தின் நிலைப்பாடாக உள்ளதே .காரணம் சாதி வெறியர்கள் .இந்த சாதி ஊழல் வெறியர்கள் பட்டியலில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் வாதிகளும் அடைக்கலமாகிறார்கள்.தமிழும் வளராது .தமிழனும் வளரமாட்டான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை