உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு திட்ட விளம்பரங்களில் முதல்வர் பெயருக்கு தடை; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு

அரசு திட்ட விளம்பரங்களில் முதல்வர் பெயருக்கு தடை; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அரசு திட்டங்களில் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை விதித்த ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக, சுப்ரீம்கோர்டடில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.தமிழக அரசு துவங்க உள்ள புதிய திட்டங்கள் மற்றும் அமலில் உள்ள பழைய திட்டங்கள் தொடர்பான விளம்பரங்களில், முதல்வரின் புகைப்படம் இடம் பெற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது பெயரை பயன்படுத்த தடை விதித்துள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக, அ.தி.மு.க., தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசு துவங்கும் திட்டங்களில், முன்னாள் முதல்வர் படத்தையோ, ஆளுங்கட்சியின் கொள்கை, சித்தாந்த தலைவர்களின் புகைப்படங்களையோ பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 04) அரசு திட்டங்களில் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை விதித்த ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக, சுப்ரீம்கோர்டடில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.இந்த வழக்கை விசாரணைக்கு சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு ஏற்றுக்கொண்டது. நாளை மறுதினம் ஆகஸ்ட் 6ம் தேதி நீதிபதிகள் விசாரிக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

தமிழ்வேள்
ஆக 04, 2025 21:06

பப்ளிக் ஃபண்ட், அதாவது அரசு பணம், மக்கள் வரிப்பணத்தில் நடைபெறும் திட்டத்துக்கு எப்படி முதல்வர் தனது சொந்த பெயரை வைத்து கொள்ளலாம்.. திட்ட செலவு முதல்வரின் சொந்த பணமா? ஆளுங்கட்சியின் பணமா? உயர்நீதிமன்ற உத்தரவு சரியான ஒன்று...இதனை சுப்ரீம் கோர்ட் விசாரிக்க வேண்டிய தேவை இல்லை..மாநில அரசு வழக்கை அபராதம் விதித்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.


vbs manian
ஆக 04, 2025 18:25

பொது வாழ்வில் அரசு பணத்தில் சுய விளம்பரம் தவறான நடைமுறை. வரிப்பான துஷ் பிரயோகம். நீதிமன்றம் சரியான தீர்ப்பு வழங்க வேண்டும்.


என்றும் இந்தியன்
ஆக 04, 2025 17:42

ஸ்டாலின் மம்தா ராகுல் ........இவர்களை பார்த்தால் மிக மிக பரிதாபமாக இருக்கின்றது நல்ல பதவியில் இருக்கும்போதே இப்படி இந்தியாவிற்கு எதிராக உளறிக்கொண்டே இருக்கின்றார்கள் அவர்கள் சொல்வதை கேட்க சப்போர்ட் செய்ய சிலர் இருக்கின்றார்கள் இவர்கள் பதவி இழந்து விட்டால் பைத்தியம் பிடித்து வீதி வீதியாக அலைவார்களே அவர்கள் வார்த்தையை கேட்க ஒருவரும் இருக்க மாட்டார்களே என்று பரிதாபமாக இருக்கின்றது


KRISHNAVEL
ஆக 04, 2025 16:42

விளம்பர மோகம் தலைக்கு மேல் போய்விட்டது , ஹை கோர்ட் தீர்ப்பை இன்னும் பின்பற்ற வில்லை , இன்னும் நலம் காக்கும் சுடாலின் என்று தான் விளம்பர படுத்துகிறார்கள் , தனக்கு தானே பெருமை பேசுவதில் என்ன இருக்கு


ஆரூர் ரங்
ஆக 04, 2025 16:32

அரசு செலவில் சுயவிளம்பரம். அதற்காக வழக்கு நடத்த கோடி கணக்கில் அரசு செலவு. கடனளவு விரைவில் 20 லட்சம் கோடியாகும். ஆனா ஆளுக்கு வெறும் 500 ரூபாய் கொடுத்து மறக்கடிக்க முடியும்.


தியாகு
ஆக 04, 2025 15:21

உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின் அடிப்படையிலேயே இந்த தடையை விதித்துள்ளது உச்சநீதிமன்றம் அபராதத்துடன் இந்த மனுவை தள்ளுபடி செய்தால் சிறப்பாக இருக்கும்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 04, 2025 15:09

இந்த திமுக ஆட்சியில் இருக்கும் வரை மாவட்டத்திற்கு நான்கு சட்டக் கல்லூரிகள் வேண்டும். அப்பொழுது தான் வக்கீல்கள் பற்றாக்குறை இன்றி கோர்ட்களில் தினம் தினம் ஏதாவது வழக்கில் வாதாட முடியும்.


ponssasi
ஆக 04, 2025 14:56

கோர்ட்டுக்கு போவதை தவிர இந்த அரசுக்கு வேறு வேலை எதுவும் இல்லை. ஆணவக்கொலை, கள்ளச்சாராயம், செயின் பறிப்பு, கொலை கொள்ளை என எதுவம் இல்லாமல் தமிழக மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் போலும். நலத்திட்ட உதவியில் போட்டோ வரணுமாம் இதுக்கு மக்கள் வரிப்பணத்தில் நீதிமன்றம் செல்கிறது தமிழக அரசு.


அருண் பிரகாஷ் மதுரை
ஆக 04, 2025 14:06

திட்டங்கள் அனைத்தும் யார் பணத்தில் செய்கிறார்கள்..


SUBRAMANIAN P
ஆக 04, 2025 13:48

சுப்ரீம் கோர்ட்டுக்கு போய்ட்டாங்களா? தீர்ப்பு திமுகவுக்கு சாதகமாகவே வரும் என்பது உறுதி. நான்தான் ஒவ்வொரு கருத்துலயும் சொல்றேனே. அங்க ஆள் கரெக்ட்டு பண்ணியாச்சு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை