உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழ் மாணவி கழுத்து அறுத்து கொலை: பெங்களூரில் பட்டப்பகலில் பயங்கரம்

தமிழ் மாணவி கழுத்து அறுத்து கொலை: பெங்களூரில் பட்டப்பகலில் பயங்கரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீராமபுரம்: பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஸ்ரீராமபுரம் சுதந்திரபாளையா, 1வது மெயின் ரோட்டில் வசிப்பவர் கோபால். இவரது மனைவி வரலட்சுமி. இந்த தம்பதிக்கு பிரசாந்த், 22, என்ற மகனும், யாமினி பிரியா, 20, என்ற மகளும் இருந்தனர். கோபாலின் சொந்த ஊர் தமிழகத்தின் வேலுார் மாவட்டம், படவேடு கிராமம். பல ஆண்டுகளாக பெங்களூரில் குடும்பத்துடன் வசிக்கிறார். பனசங்கரியில் உள்ள தனியார் கல்லுாரியில், யாமினி பி.பார்ம் 2ம் ஆண்டு படித்தார். இவரை, எதிர்வீட்டில் வசிக்கும் விக்னேஷ், 25, என்பவர் ஒருதலையாக காதலித்தார். பல முறை தன் காதலை வெளிப்படுத்தியபோதும், அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் ஸ்ரீராமபுரத்தில் நடந்த திரவுபதி கோவில் கரக ஊர்வலத்தின்போது, யாமினி கழுத்தில், விக்னேஷ் வலுக்கட்டாயமாக மஞ்சள் கயிறை கட்டி உள்ளார். பின், அந்த கயிறை அவர் கழற்றிவிட்டார். இதுகுறித்து தெரிய வந்ததும், விக்னேஷை பிடித்து போலீசார் விசாரித்தனர். ஆனால் அவர் மீது யாமினி குடும்பத்தினர் புகார் செய்யவில்லை. 'இனி யாமினியின் பின்னால் செல்ல மாட்டேன்' என்று விக்னேஷ் கூறியதால், போலீசார் எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக மீண்டும் யாமினியின் பின்னால் விக்னேஷ் சென்றார். தன்னை காதலிக்கும்படி மீண்டும் வற்புறுத்த ஆரம்பித்தார். யாமினி கண்டுகொள்ளவில்லை. நேற்று காலை வழக்கம்போல கல்லுாரி சென்ற யாமினி, கல்லுாரி முடிந்ததும் மெட்ரோ ரயிலில் வந்து, மல்லேஸ்வரம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி, வீட்டிற்கு நடந்து சென்றார். அவரை பின்தொடர்ந்து சென்ற விக்னேஷ், வழிமறித்து தகராறு செய்தார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை எடுத்து யாமினியின் கண்ணில் துாவி, அவரது கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு, அங்கிருந்து தப்பினார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய யாமினி, சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்த பெற்றோர், சம்பவ இடத்திற்கு வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். தலைமறைவாக உள்ள விக்னேஷை போலீசார் தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

jkrish
அக் 22, 2025 00:58

மிக வருத்தமாக உள்ளது.. பெண்ணின் பின்னால் போவதை ஒரு சாதனையாக காட்டும் கலாசாரம் ஒழியும் வரை இந்த பலிகள் தொடரும்.


Rathna
அக் 19, 2025 12:17

சினிமா சமுதாயத்தை குட்டி சுவர் ஆக்கி உள்ளது. நீதியும் அக்கிரமங்களுக்கு சரியான தண்டனை வழங்காமல் இது போன்ற செயல்களை ஊக்குவிக்கிறது.


Kulandai kannan
அக் 17, 2025 19:22

சினிமாக்கள் படுத்தும் பாடு


Techzone Coimbatore
அக் 17, 2025 18:14

இதை விட தெரு நாய்கள் தான் மிகவும் முக்கியம் வாய்ந்த பிரச்சனை. இந்த மாதிரி பெண்கள், குழந்தைகள் மனிதர்களை விட தெரு நாய்களால் தான் மிக பெரிய ஆபத்தைக் சந்திக்கின்றனர்.


RAMESH KUMAR R V
அக் 17, 2025 14:31

அட பாவி


Natchimuthu Chithiraisamy
அக் 17, 2025 11:46

சோசியல் மீடியாவில் பிரேக் அப் மேலும் EX என்கிற வார்த்தைகளும் விளையாட்டாக பயன்படுத்திகிறார்கள் அது அவர்கள் வாழ்க்கையை நாசமாக்காது பிறர் வாழ்க்கையை நாசப்படுத்துவிடும். சமுதாயம் நன்றாக இருந்தால் மட்டுமே மக்கள் மற்றும் தனி மனிதன் நன்றாக இருக்க முடியும்.


ஆரூர் ரங்
அக் 17, 2025 11:24

நாவரசு கொலை கு‌ற்றவா‌ளி விடுதலை பெற்றது போல.....


Natchimuthu Chithiraisamy
அக் 17, 2025 10:43

கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு வராது. பிரச்னை ஆனபொழுதே கண்டிப்புடன் பெற்றோர் இருந்திருக்க வேண்டும் போலீஸ் கோர்ட் கடைசியானது அது நல்ல தீர்வை தராது. அன்று பொது மக்கள் நல்ல தீர்வை கொடுத்தார்கள். தப்பு செய்தால் மக்கள் கூடி கேள்வி கேற்ப்பார்கள் என்று பயம் இருந்தது. இன்று பிள்ளைகள் செய்யும் தவறை தட்டி கேட்க பெற்றோரால் முடிவதில்லை மற்றவர்களும் தலையிட மாட்டார்கள். ஒற்றுமை இல்லமால் ஒவ்வொன்றாக சாகவேண்டி உள்ளது. இது மற்ற பெண்களுக்கு உதாரணம். ஒழுக்கமே மேன்மை தரும்


Anand
அக் 17, 2025 10:42

அவனை பிடிக்கவேண்டாம், என்கவுண்டர் செய்துவிடுங்கள்.


Venkatesh
அக் 17, 2025 10:22

தேடி பார்த்து சொல்லுங்கோ..


சமீபத்திய செய்தி