உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கட்டாயமாகிறது ஆசிரியர் தகுதி தேர்வு!

கட்டாயமாகிறது ஆசிரியர் தகுதி தேர்வு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'ஆசிரியர்கள் பணியில் தொடர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும், ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு எழுத விருப்பம் இல்லாதவர்கள் உடனடியாக வேலையை ராஜினாமா செய்யலாம். அவர்கள் ஓய்வு பெறும் போது கிடைக்கும் சலுகைகளை, இப்போதே பெற்றுக்கொண்டு கட்டாய ஓய்வுக்கு எழுதிக் கொடுக்கலாம்' என, உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமா என்பது தொடர்பாக, உச்ச நீதிமன்ற நீதிபதி திபங்கர் தத்தா தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடந்து வந்தது. ஏற்கனவே வழக்கு விசாரணை நடந்த போது, 'அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் சங்கம் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பு அளித்தனர். அதன் விபரம்: அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற வேண்டும் என்றால், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதே நேரத்தில், ஓய்வு பெறும் வயதை எட்டுவதற்கு ஐந்தாண்டுகள் மட்டுமே இருக்கக்கூடிய ஆசிரியர்கள் பணியில் தொடரலாம். ஐந்து ஆண்டுகளுக்கு அதிகமாக இருக்கக்கூடிய அத்தனை ஆசிரியர்களும் தொடர்ந்து ஆசிரியராக பணியில் தொடர, ஆசிரியர் தகுதித் தேர்வில், நிச்சயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.தேர்வு எழுத விருப்பமில்லை என்றால், தாராளமாக அவர்கள் ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்து விட்டு வெளியேறலாம்.அவர்கள், ஓய்வு பெறும் போது கிடைக்கும் சலுகைகளை பெற்று, இப்போதே கட்டாய பணி ஓய்வு பெற்றுக் கொள்ளலாம். மேலும் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில், ஆசிரியர் தகுதித் தேர்வை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கட்டாயப்படுத்த முடியுமா என்பதை விசாரிப்பதற்காக அரசியல் சாசன அமர்விற்கு மாற்ற, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறோம்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 85,000 பேருக்கு சிக்கல்

ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால், தமிழகத்தில் அரசு பணியில் உள்ள, 85,000 ஆசிரியர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது:நீதிமன்ற தீர்ப்பால், ஆசிரியர் தகுதித்தேர்வான, 'டெட்' தேர்ச்சி பெற்று, 2012க்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட 20,000 ஆசிரியர்களுக்கு பாதிப்பு இல்லை. அதேபோல, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஓய்வு பெற உள்ள ஆசிரியர்களுக்கும் பாதிப்பில்லை. இவர்கள் தவிர்த்து, 2011க்கு முன் பணி நியமனம் செய்யப்பட்டு, அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் 85,000 பேர் தகுதித் தேர்வு எழுதவில்லை. அவர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவர். நீதிமன்ற தீர்ப்பு குறித்தும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு நடத்துவது குறித்தும், வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது. நிதித்துறை செயலர், பள்ளிக்கல்வித் துறை செயலர் மற்றும் அதிகாரிகள் நேற்று மாலையில் அவசர ஆலோசனையும் நடத்தினர். இவ்வாறு அவர்கள் கூறினர். தமிழக உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவன தலைவர் மாயவன் கூறுகையில், ''உச்ச நீதிமன்ற தீர்ப்பால், தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உத்தரவு, அனைவரையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்,'' என்றார்.இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்ககத்தின் மாநில பொதுச் செயலர் ராபர்ட் கூறுகையில், ''நீதிமன்ற உத்தரவு, ஆசிரியர்களிடம் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், ஒரு லட்சம் ஆசிரியர்கள் வரை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தமிழக அரசு இதற்கு சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும்,'' என்றார்.இதற்கிடையில், இந்த தீர்ப்பை எதிர்த்து ஆசிரியர் சங்கங்கள் சார்பில் மேல்முறையீடு செய்ய தீர்மானிக்கப் பட்டுள்ளது.

டில்லி சிறப்பு நிருபர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Ramki
அக் 14, 2025 09:01

நீட் தேர்வு எழுதாத பணியில் உள்ள மருத்துவர்களுக்கு???


Nujra
செப் 07, 2025 10:19

நல்ல தீர்ப்பு. கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்ளுக்கும் தேவை. கல்லூரிகளில் பெரும்பாலும் தகுதியற்ற பேராசிரியர்களே உள்ளார்கள்.


Sun
செப் 02, 2025 23:22

அரசு பள்ளிகளுக்கு ஒரு தீர்ப்பு, அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு வேறு மாதிரியான தீர்ப்பு? ஒரே பிரச்சனைக்கு இரு வெவ்வேறு தீர்ப்புகள் .நல்லா இருக்கு உங்க நியாயம். நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு.


சாமானியன்
செப் 02, 2025 22:47

மாணவர்கட்கு நீட் தேர்வு போல ஆசிரியர்கட்கும் தேர்வை வைப்பதில் தவறில்லை. இது ஏற்கனவே சிலதுறையில் நடைமுறையில் இருப்பதுதான். கவுன்சிலர்கள், எம.எல்.ஏ, எம்.பி, சபாநாயகர், பிரதமர், ஜனாதிபதி, உதவி ஜனாதிபதி ஆகிய அனைவருக்குமே அரசியல் விழிப்புணர்வு, அரசியல் தெளிவு, சரித்திரம், அரசியல் சட்டம் ஆகியவைகளை பாடமாக வைத்து தேர்வை வைக்கனும். கோடிஸ்வரர்கள் வேஸ்ட். தத்திகள்.


Saai Sundharamurthy AVK
செப் 02, 2025 22:29

ஒரு தடவை 1980 களில் 2 வகுப்பில் தொழில் முறை படிப்புகளில் ஆசிரியர் பயிற்சி படிப்பு என்று ஒன்று அதிமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த இரண்டாண்டு படிப்பை முடித்தவர்களுக்கு உடனே அரசு ஆசிரியர் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்கள். எப்படியென்றால் காசு கொடுத்து எம்.எல்.ஏ சிபாரிசு, எம்.பி.சிபாரிசு, அமைச்சர்கள் சிபாரிசு, அரசு அதிகாரிகள் சிபாரிசு என்று அவ்வளவு பேரும் வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அதன் பிறகு ஒரு போராட்டம் BA, BSc, B.Com, பட்டம் பெற்றவர்களால் முன்னெடுக்கப்பட்டது. வேலை கிடைக்காமல் பைத்தியகாரர்களாக சுற்றிக் கொண்டிருந்த நேரம். அதற்கு அடுத்த வருடமே அந்த 2 ஆசிரியர் படிப்பை அரசாங்கம் நிறுத்தி விட்டது. இப்போது 2025 ஆம் வருடம் பாருங்கள்...... அந்த 2 தேர்வர்கள் இப்போது அரசுப் பள்ளிகளில் ஹெட் மாஸ்டர்களாக பணியாற்றி மாதா மாதம் ஒரு லட்சம் வரைக்கும் சம்பாதிக்கிறார்கள். அதே மாதிரி தான் திமுகவின் 1990 களில் ஆட்சியிலும் பட்டம் பயின்றவர்களுக்கு காசு வாங்கிக்கொண்டு சிபாரிசின் அடிப்படையில் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். அதில் பாதி பேர் நன்றாக சொத்து சுகத்துடன் செட்டில் ஆகி ஓய்வும் பெற்று விட்டார்கள். இது தான் நம் தமிழ்நாடு அரசு ஆசிரியர்களின் நிலைமை. இதை ஒரு ஆசிரியரே சொன்ன விஷயம்.....!!


KRISHNAN R
செப் 02, 2025 20:51

ஏதும் சரியில்லை.. 57 வயதில் வேலைக்கு வந்தா.... கல்வி கோவிந்தா


nagendhiran
செப் 02, 2025 20:36

எங்களுக்கு நீட் போன்ற தகுதி தேர்விற்குதான் பிரச்சனை? மற்ற தகுதி தேர்வுகள் எங்களுக்கு"பிரச்சனை இல்லை ஏற்றுக்கொண்டு பேசாமல் இருப்போம்? அதான? அதே தான்?


முருகன்
செப் 02, 2025 20:05

பை நிறைய சம்பளம் மட்டும் வேண்டும் தேர்வு எழுத கூடாது... இவர்களை உடனடியாக நீக்க வேண்டும்


Bhaskaran
செப் 02, 2025 17:35

தத்தி வாத்தி களுக்கு ஆப்பு ஆங்கிலம் சரியாக பேச படிக்க தெரியாத ஆயிரக்கணக்கான வாத்திங்க வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.


Raj Kumar
செப் 02, 2025 13:34

இந்த உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பினை அனைத்து மக்களும் ஆதரவளிக்க வேண்டும். அனைத்து ஆசிரியர்களும் தேர்வு எழுதி தங்களது திறமையை நிரூபிக்க வேண்டும். நாட்டின் பெரும் செலவு ஆசிரியர்களின் சம்பளத்தில் தான் கொட்டப்படுகிறது. ஆனாலும் இன்னும் சம்பளம் போதவில்லை என்று போராடுகிறார்கள். முதலில் உங்களை தகுதியானவர்கள் என்று நிரூபியுங்கள்....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை