வாசகர்கள் கருத்துகள் ( 29 )
நீட் தேர்வு எழுதாத பணியில் உள்ள மருத்துவர்களுக்கு???
நல்ல தீர்ப்பு. கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்ளுக்கும் தேவை. கல்லூரிகளில் பெரும்பாலும் தகுதியற்ற பேராசிரியர்களே உள்ளார்கள்.
அரசு பள்ளிகளுக்கு ஒரு தீர்ப்பு, அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு வேறு மாதிரியான தீர்ப்பு? ஒரே பிரச்சனைக்கு இரு வெவ்வேறு தீர்ப்புகள் .நல்லா இருக்கு உங்க நியாயம். நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு.
மாணவர்கட்கு நீட் தேர்வு போல ஆசிரியர்கட்கும் தேர்வை வைப்பதில் தவறில்லை. இது ஏற்கனவே சிலதுறையில் நடைமுறையில் இருப்பதுதான். கவுன்சிலர்கள், எம.எல்.ஏ, எம்.பி, சபாநாயகர், பிரதமர், ஜனாதிபதி, உதவி ஜனாதிபதி ஆகிய அனைவருக்குமே அரசியல் விழிப்புணர்வு, அரசியல் தெளிவு, சரித்திரம், அரசியல் சட்டம் ஆகியவைகளை பாடமாக வைத்து தேர்வை வைக்கனும். கோடிஸ்வரர்கள் வேஸ்ட். தத்திகள்.
ஒரு தடவை 1980 களில் 2 வகுப்பில் தொழில் முறை படிப்புகளில் ஆசிரியர் பயிற்சி படிப்பு என்று ஒன்று அதிமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த இரண்டாண்டு படிப்பை முடித்தவர்களுக்கு உடனே அரசு ஆசிரியர் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்கள். எப்படியென்றால் காசு கொடுத்து எம்.எல்.ஏ சிபாரிசு, எம்.பி.சிபாரிசு, அமைச்சர்கள் சிபாரிசு, அரசு அதிகாரிகள் சிபாரிசு என்று அவ்வளவு பேரும் வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அதன் பிறகு ஒரு போராட்டம் BA, BSc, B.Com, பட்டம் பெற்றவர்களால் முன்னெடுக்கப்பட்டது. வேலை கிடைக்காமல் பைத்தியகாரர்களாக சுற்றிக் கொண்டிருந்த நேரம். அதற்கு அடுத்த வருடமே அந்த 2 ஆசிரியர் படிப்பை அரசாங்கம் நிறுத்தி விட்டது. இப்போது 2025 ஆம் வருடம் பாருங்கள்...... அந்த 2 தேர்வர்கள் இப்போது அரசுப் பள்ளிகளில் ஹெட் மாஸ்டர்களாக பணியாற்றி மாதா மாதம் ஒரு லட்சம் வரைக்கும் சம்பாதிக்கிறார்கள். அதே மாதிரி தான் திமுகவின் 1990 களில் ஆட்சியிலும் பட்டம் பயின்றவர்களுக்கு காசு வாங்கிக்கொண்டு சிபாரிசின் அடிப்படையில் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். அதில் பாதி பேர் நன்றாக சொத்து சுகத்துடன் செட்டில் ஆகி ஓய்வும் பெற்று விட்டார்கள். இது தான் நம் தமிழ்நாடு அரசு ஆசிரியர்களின் நிலைமை. இதை ஒரு ஆசிரியரே சொன்ன விஷயம்.....!!
ஏதும் சரியில்லை.. 57 வயதில் வேலைக்கு வந்தா.... கல்வி கோவிந்தா
எங்களுக்கு நீட் போன்ற தகுதி தேர்விற்குதான் பிரச்சனை? மற்ற தகுதி தேர்வுகள் எங்களுக்கு"பிரச்சனை இல்லை ஏற்றுக்கொண்டு பேசாமல் இருப்போம்? அதான? அதே தான்?
பை நிறைய சம்பளம் மட்டும் வேண்டும் தேர்வு எழுத கூடாது... இவர்களை உடனடியாக நீக்க வேண்டும்
தத்தி வாத்தி களுக்கு ஆப்பு ஆங்கிலம் சரியாக பேச படிக்க தெரியாத ஆயிரக்கணக்கான வாத்திங்க வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
இந்த உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பினை அனைத்து மக்களும் ஆதரவளிக்க வேண்டும். அனைத்து ஆசிரியர்களும் தேர்வு எழுதி தங்களது திறமையை நிரூபிக்க வேண்டும். நாட்டின் பெரும் செலவு ஆசிரியர்களின் சம்பளத்தில் தான் கொட்டப்படுகிறது. ஆனாலும் இன்னும் சம்பளம் போதவில்லை என்று போராடுகிறார்கள். முதலில் உங்களை தகுதியானவர்கள் என்று நிரூபியுங்கள்....