உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானுடன் உறவு மேம்படாததற்கு முக்கிய காரணம் பயங்கரவாதம்: என்.சி.இ.ஆர்.டி., புதிய பாடத்திட்டத்தில் பதிவு

பாகிஸ்தானுடன் உறவு மேம்படாததற்கு முக்கிய காரணம் பயங்கரவாதம்: என்.சி.இ.ஆர்.டி., புதிய பாடத்திட்டத்தில் பதிவு

புதுடில்லி: என்.சி.இ.ஆர்.டி., வெளியிட்ட புதிய 7ம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில், பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன் நடக்கும் பயங்கரவாத தாக்குதல்கள் தான், இந்தியா - பாகிஸ்தான் உறவை முன்னேற்ற விடாமல் தடுக்கின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.என்.சி.இ.ஆர்.டி., ( தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில்) வெளியிட்டுள்ள புதிய பாட புத்தகங்களில் சில பாடங்கள் மறு சீரமைக்கப்பட்டுள்ளன. அதில் 7ம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில், 'இந்தியா - அண்டை நாடுகளின் உறவு' என்ற பகுதியில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் பாகிஸ்தான் ராணுவத்தால் ஆதரிக்கப்படும் பயங்கரவாத தாக்குதல்களால், இந்திய - பாகிஸ்தான் உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையின்மை :

மேலும் இப்பாடத்தில், இந்தியா பலமுறை அமைதி முயற்சிகளை எடுத்துள்ளதாகவும் பேச்சுவார்த்தை நடத்த முனைப்பு காட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் மீது, இந்தியாவுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இப்பாடத்தில் கார்கில் போருக்கு பின்னர் ஏற்பட்ட பதற்றம், எல்லை பாதுகாப்பு சவால்கள் மற்றும் இரு நாடுகளின் உறவின் ஏற்ற தாழ்வுகள் போன்ற விவரங்களும் தரப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களுக்கான புத்தகத்தில் பயங்கரவாதத்தின் தாக்கம் குறித்து விவரித்திருப்பது, அடுத்த தலைமுறைக்கு சரியான புரிதலை வழங்கும் என கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
டிச 10, 2025 06:25

பள்ளி புத்தகத்தில் தெருவையும், ஊரையும் சுத்தமா வெச்சிக்கணும்னு சொல்லிக்.குடுக்க மாட்டாங்க.


அப்பாவி
டிச 10, 2025 06:24

ஆனா கிரிக்கெட்டை மட்டும் உரம் போட்டு வளர்ப்பாங்க. காசு வருதே...


Rathna
டிச 09, 2025 17:05

ரொம்ப தேவையானது. மாணவர்கள் தங்கள் நாட்டை பற்றி படிக்க விட்டால் எப்படி தேச பக்தி வளரும். தன்னை தெரிந்து கொள்வதை விட எதிரிகளை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.


Suppan
டிச 09, 2025 16:46

நம் நாட்டில் உள்ள சில கட்சிகளும் காங்கிரஸ் , முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் ...பாகிஸ்தானுக்கு நேர்முக, மறைமுக ஆதரவு அளிப்பதும் ஒரு காரணம். முன்பு நடந்த திவீரவாத செயல்களுக்கு உதாரணம் > 2008 மும்பை தாக்குதல் பதிலடி கொடுக்காமல் அது காவி பயங்கரவாதம் என்று திசை திருப்ப முயற்சி செய்ததும் ஒரு காரணம்


Barakat Ali
டிச 09, 2025 12:44

சரியான அணுகுமுறை....... பள்ளிப்பிள்ளைகள் உண்மையை உணரவேண்டும் ......


Alphonse Mariaa
டிச 09, 2025 12:27

Please focus on environmental damages issue and nate ways to combat it rather than teaching kids about terrorism at 13 age. This is BS syllabus.


Saamaanyan
டிச 09, 2025 10:00

உண்மைதானே


Ramesh
டிச 09, 2025 07:52

Nice initiative by Central Govt


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை