உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி செங்கோட்டை அருகே காரை வெடிக்க செய்து பயங்கரவாத தாக்குதல்; 12 பேர் பலி

டில்லி செங்கோட்டை அருகே காரை வெடிக்க செய்து பயங்கரவாத தாக்குதல்; 12 பேர் பலி

புதுடில்லி : தலைநகர் டில்லி செங்கோட்டை அருகே நேற்று காரை வெடிக்கச் செய்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 12 பேர் உயிரிழந்துள்ளனர்; பலத்த காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியானாவில், 2,900 கிலோ வெடிபொருட்கள் சிக்கிய அதே நாளில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z9c2ugra&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பஹல்காம் தாக்குதலுக்கு எதிரான, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு பழிதீர்க்கும் வகையில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு, சதித் திட்டம் தீட்டி வருவதாக சமீபத்தில் உளவுத் துறை எச்சரித்திருந்தது.அதே வேளையில் கடந்த அக்., 19ம் தேதி ஜம்மு - காஷ்மீரின் பன்போரா, நவ்காம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் மற்றும் நம் பாதுகாப்பு படைகளுக்கு மிரட்டல் விடுத்து, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு போஸ்டர்களை ஒட்டியிருந்தது.

அம்மோனியம் நைட்ரேட்

அப்பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஜம்மு - காஷ்மீர் போலீசார் ஆராய்ந்ததில், 'ஒயிட் காலர்' பயங்கரவாத முறைக்கு பயங்கரவாதிகள் மாறி இருக்கும் திடுக்கிடும் தகவல் கிடைத்தது.அந்த போஸ்டர்களை ஒட்டியவர் டாக்டர் அடில் அகமது என்பது தெரிந்தது. உத்தர பிரதேசத்திற்கு தப்பிச் சென்ற அவரை, பின் தொடர்ந்த ஜம்மு - காஷ்மீர் போலீசார், ஷஹாரன்பூரில் உள்ள மருத்துவமனையில் வைத்து கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணை மூலம் ஜம்மு - காஷ்மீரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 2,500 கிலோ வெடிப்பொருட்கள், ஏ.கே.56, ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், டைமர்கள், ரிமோட் கன்ட்ரோல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.டாக்டர் அடில் அகமதுவுடன், ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள அல் பலா பல்கலையில் மருத்துவ விரிவுரையாளராக பணியாற்றி வரும் டாக்டர் முபாஸில் ஷகீலுக்கும் இந்த சதியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.இதையடுத்து அவரையும் கைது செய்த ஜம்மு - காஷ்மீர் போலீசார், தாவுஜ் கிராமத்தில் அவர் தங்கியிருந்த வாடகை வீட்டில் வெடிகுண்டு தயாரிக்க பயன்படும், 'அம்மோனியம் நைட்ரேட்' என்ற மூலப்பொருள், 350 கிலோ வரை இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் அருகே நிறுத்தியிருந்த காரில் இருந்தும் சிறிய ரக ஏ.கே.47 துப்பாக்கிகள், 83 தோட்டாக்கள், ஒரு கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதக் குவியலையும் பறிமுதல் செய்தனர்.இது தவிர வாக்கி டாக்கிகள், எலெக்ட்ரிக் வயர்கள், பேட்டரிகள், மெட்டல் ஷீட்கள், வெடிகுண்டு தயாரிப்பை விளக்கும் குறிப்பேடுகள் ஆகியவையும் சிக்கின.டாக்டர் ஷகீலுக்கு கார் கொடுத்து உதவிய பெண் டாக்டர் ஷகீன் என்பவரையும் போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். இதுவரை மூன்று டாக்டர்கள் உள்பட எட்டு பேர் கைதாகியுள்ளனர்.

விசாரணை

இந்த சதித் திட்டத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. பயங்கரவாத நெட்வொர்க்கில் டாக்டர்களும் சேர்ந்திருப்பது போலீசாரை அதிர வைத்துள்ளது.ஜம்மு - காஷ்மீர், ஹரியானா, உத்தர பிரதேச மாநிலங்களில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதால் நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், டில்லியில் நேற்று மாலை மற்றொரு பயங்கர தாக்குதல் அரங்கேறியது. டில்லி செங்கோட்டை அருகே, மாலை 6:52 மணிக்கு, சிக்னலில் மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்த கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.இதில் அருகில் இருந்த ஆறு கார்கள், இரண்டு இ - ரிக் ஷாக்கள், ஒரு ஆட்டோ ஆகியவை தீப்பற்றி எரிந்தன. இதனால், அப்பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்து ஓடினர்.இந்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர்; 25க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், சில மணி நேர போராட்டத்துக்கு பின், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கார் வெடித்தது குறித்து டில்லி போலீஸ் கமிஷனர் சதீஷ் கோல்சா கூறியதாவது:செங்கோட்டை அருகே மாலை 6:52 மணி அளவில், சிக்னலில் மெல்ல ஊர்ந்து சென்ற, 'ஹூண்டாய் ஐ20' கார் வெடித்தது. அதில் சில பயணியரும் இருந்தனர். காருக்கு அருகே நின்றிருந்த சில வாகனங்களும் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன. டில்லி போலீஸ், தடயவியல் குழு, என்.ஐ.ஏ., என்.எஸ்.ஜி., ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன.

ஆறுதல்

முதற்கட்ட விசாரணையில், ஹரியானா பதிவு எண் கொண்ட அந்த கார் நதீம் என்பவர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொடர்பு கொண்டு அவ்வப்போது விவரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பின், பாதுகாப்பு நிலவரம் குறித்து டில்லி போலீஸ் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அமைச்சர் அமித் ஷாவை தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நிலைமையை கேட்டறிந்தார்.

நேரில் பார்த்தவர்கள் மிரட்சி!

சம்பவத்தை நேரில் பார்த்த ஆட்டோ ஓட்டுநர் கூறும்போது, 'என் ஆட்டோவுக்கு முன்பாக, ஒரு கார் நின்று இருந்தது. அந்த காரில் இருந்து ஏதோ ஒரு பொருள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது' என்றார். கார் வெடித்து சிதறிய இடத்திற்கு அருகே கடை நடத்தி வரும் சாந்தினி சவுக் வர்த்தக சங்கத் தலைவர் சஞ்சய் பார்கவ் கூறும்போது, ''வெடி சத்தம் கேட்டதும் ஒட்டுமொத்த கட்டடமும் சில நிமிடங்கள் வரை அதிர்ந்தது. மார்க்கெட் பகுதியில் இருந்த மக்கள் அங்குமிங்கும் அலறியடித்து ஓடினர். என்ன நடந்தது என்றே எங்களுக்கு தெரியவில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 65 )

surya krishna
நவ 11, 2025 20:48

மனிதவடிவில் பிறந்த கொடூரர்கள் காட்டுமிராண்டி கூட்டம்....இவர்களின் மதம் கடவுள் அப்பாவிகளை கொல்ல சொல்லுதா


காஷ்மீர் கவுல் பிராமணன்.ஷோபியன்.
நவ 11, 2025 18:28

இப்போ வருவாங்க பாருங்க தீவிரவாதத்திற்கு மதம் இல்லை என்று.ஆனால் இப்படி குண்டு வைப்பவன் மட்டும் குல்லா மற்றும் தாடியுடன் வருவார்கள்.


SUBBU,MADURAI
நவ 11, 2025 16:30

1. Dr Adeel Ahmad Rather caught with 360 kg RDX, assault rifles 2. Dr. Muzamil Shakeel caught with 360 kg RDX, assault rifles 3. Ahmed Mohiyuddin Saiyed caught with ricin poison 4. Zubair Hangargekar caught with IED manuals, links to AL Qaeda Educated, yet radicalised. The problem isnt a lack of degrees its the poison fed through extremist texts and networks. No profession protects a mind consumed by hate.


மனிதன்
நவ 11, 2025 16:29

அதெப்படி, இந்தியாவில நடந்த முக்கியமான தீவிரவாத தாக்குதல்கள் பாஜக ஆட்சியில் மட்டுமே நடக்கிறது? "கார்கில்" தொடங்கி புல்வாமா, அமர்நாத், பதன்கோட், URI தாக்குதல்,பார்லிமென்ட் தாக்குதல்,காந்தகார், பக்லகாம், ரெட் போர்ட் இப்படி எல்லாமே பாஜக ஆட்சியில்தானே??? பாஜகவின் உள்துறையும், உளவுத்துறையும் எந்த ஆவணத்தை கிழித்துக்கொண்டிருந்தார்கள்...இந்த லட்சணத்துல நாங்கதான் நாட்டுக்கு பாதுகாப்புன்னு உருட்டல் வேற....


ஆரூர் ரங்
நவ 11, 2025 18:01

கோவையில் சிலிண்டர் எனும் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது யார் ஆட்சியில்? பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு, மும்பைத் தாக்குதல் etc யார் ஆட்சியில் நடந்தது?.


Muralidharan S
நவ 11, 2025 18:34

கான்-cross உடைய ஹிந்து வெறுப்புணர்வும்... உம்முடைய கான்-cross அபிமானமும் தான் காரணம்.. வேற என்ன ...


Barakat Ali
நவ 11, 2025 18:49

மன்மோகன் பத்தாண்டுகள் பிரதமராக இருந்த பொழுது நடந்த குண்டுவெடிப்புகள் குறித்து ஏதும் அறியாதவரா ????


Rathna
நவ 11, 2025 19:06

உம்முடைய பாகிஸ்தானிய கொண்டை வெளியில் தெரிகிறது. மறைத்து கொள்.


Raman
நவ 11, 2025 22:26

First of all anti-national elements hiding in TN must be interrogated..third class comment..


Raman
நவ 11, 2025 22:27

Paki mindset..


சத்யநாராயணன்
நவ 11, 2025 15:01

இத்தகைய கொடூர செயல்களையும் கொடூரமான தாக்குதல்களையும் நிகழ்த்திவிட்டு அதற்கு எல்லாம் அரசியல் சாயம் பூசி விட்டால் தாங்கள் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் மனிதர்கள் தான் உண்மையான மத அடிப்படை வாதிகள் அவர்கள் முழுமையாக அழித்தொழிக்க பட வேண்டியவர்கள்


Rahim
நவ 11, 2025 14:46

தைரியம் இருந்தால் தொட்டுப்பாரு உங்க டிராமா குறூப்பின் தோழ்வியை ஒப்புக்கொள்ள துப்பில்லாமல் எதிர்த்து கேள்வி கேட்பவர்களை தேசதுரோகி ஆக்குகிறீர்களா எப்படி உள்ளே வந்தானுங்க உங்க உளவுத்துறையும் உள்துறையும் என்ன புல்லு புடுங்கிட்டு இருந்தார்களா இதுதான் உங்க டபுள் என்ஜினின் ஆட்சி லட்சணமா என்னைய விசாரிக்கிறது இருக்கட்டும்


Ragupathi
நவ 11, 2025 15:08

தேச விரோதிகள் தயவில்தான் வந்திருப்பார்கள்.


SUBBU,MADURAI
நவ 11, 2025 15:14

தமிழகத்தில் தமிழ் பாடத்தில் தோல்வியடைந்த நாற்பதாயிரம் மாணவர்களில் இவரும் ஒருவர் என்பதை நினைக்கும் போது மனதுக்கு கஷ்டமாக அதாவது பாரமாக இருக்கிறது...


Muralidharan S
நவ 11, 2025 18:45

மதச்சார்பு நாடு பிரித்து-வாங்கிக்கொண்டு போனபிறகும், இங்கேயே இருந்து கொண்டு எப்பொழுதும் தேசத்திற்கு எதிரான சிந்தனையிலேயே, தேசத்துரோகம் செயல்களிலேயே தொடர்ந்து ஈடுபட்டு கொண்டு இருக்கும் தீவிரவாதிகளும், ஹிந்து வெறுப்பு அரசியல்வாதிகளும் - வெளியே இருந்து வரவில்லை என்பது உமக்கும் நல்ல தெரியும்.... ஆக்கபூர்வமாக உழைத்து முன்னேறமுடியாதவர்கள் மூளை சலவை செய்யப்பட்டு செய்யும் அழிவுப்பூர்வமான செயல்கள்....உமது விதண்டா வாதத்தையும் சேர்த்துதான்...


சத்யநாராயணன்
நவ 11, 2025 19:09

தொட்டுக்கூட பார்க்காமலே மருத்துவர்கள் உண்மையைக் கக்கி இருக்கிறார்கள் தொட்டுப் பார்ப்பதிலிருந்து யாரும் அவ்வளவு எளிதில் தப்பி விட முடியாது இது மோடி இந்தியா


Rathna
நவ 11, 2025 14:04

இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்படும் ஒரு மர்ம நபர் - ஒரு பெண் டாக்டர். ஷாஹீன் சயீத் என்ற பெயர். இந்த நபர்தான் கிட்டத்தட்ட 35-40 லக்ஷம் டொனேஷன் காஷ்மீரில், உத்தரபிரதேசத்தில் அந்த சமூக மக்களிடம் இருந்து வாங்கி இந்த கொடுமையான குற்றத்தை பைனான்ஸ் செய்து இருக்கிறார் என்பது செய்தி.


Ramesh
நவ 11, 2025 13:07

எந்த ஊரில் எலெக்ட்சன் நடை பெற உள்ளது என்ற குறைந்தபட்ச அறிவையாவது உபயோகியுங்கள் நண்பரே. இப்படி சொல்ல ஒன்று நீங்கள் உ பி யாக இருக்கவேண்டும்.


Karthikeyan
நவ 11, 2025 13:19

அவ்வளவுதான் உங்க அரசியல் அறிவு.


Muralidharan S
நவ 11, 2025 13:42

ஹிந்துக்களுக்கு எதிராக எப்பொழுதும் செயல்படும் கட்சிகளுக்கும், மார்கங்களுக்கும், தொடர்ந்து இந்த போலி ஹிந்துக்கள் துணைபோவதால்தான், ஹிந்துக்களுக்கும் தேசத்திற்கும் தேசநலனுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கிறது..


Karthikeyan
நவ 11, 2025 12:39

என்னென்ன நாடகம் ஆடுறானுக.. தேர்தல் வந்தா எங்கேர்ந்துதான் வருவானுகளோ இந்த திடீர் தீவிரவாதிகளும், தற்கொலைப்படைகளும்.. நாட்டை நாசமாக்கிட்டானுக இந்த ஆளும் கும்பல்..


Muralidharan S
நவ 11, 2025 13:21

உண்மை வெளிவரும்..


Muralidharan S
நவ 11, 2025 14:03

குண்டு வெடிப்பு நிகழ்த்திய இஸ்லாமிய ஜெய்ஷ்-e- முகமது இயக்கத்தின் பெண்கள் பிரிவு தலைவி ஷாகின் என்ற பெண்ணின் புகைப்படத்தை வெளியாகி இருக்கிறது... உன் சொந்த கருத்தை திணிப்பதற்கு முன் எச்சரிக்கையாக யோசித்து செய் இனிமேல்.. இப்படி அவதூறாக செய்தி பரப்புவதற்காக நீயும் கைது செய்யப்படலாம்..


RK
நவ 11, 2025 11:22

இஸ்ரேல் பாணியில் இந்தியா நடக்க வேண்டும். தீவிரவாதிகளை கண்டதும் சுட்டு பொசுக்க வேண்டும்.


புதிய வீடியோ