உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எடியூரப்பாவுடன் தாவணகெரே பா.ஜ., குழு சந்திப்பு

எடியூரப்பாவுடன் தாவணகெரே பா.ஜ., குழு சந்திப்பு

பெங்களூரு- தாவணகெரே லோக்சபா தொகுதிக்கு தகுதியான வேட்பாளரை பரிந்துரை செய்யும்படி, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிடம் அந்தத் தொகுதியின் பா.ஜ., குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர்.தாவணகெரே பிரபலமான லோக்சபா தொகுதி. இந்த தொகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ரவீந்திர நாத், ரேணுகாச்சார்யா, கருணாகர ரெட்டி, முன்னாள் எம்.எல்.சி., சிவயோகி சாமி உட்பட, 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள், பெங்களூரின் டாலர்ஸ் காலனியில் எடியூரப்பாவை நேற்று காலை சந்தித்தனர்.தாவணகெரே தொகுதிக்கு தகுதியான வேட்பாளரை தேர்வு செய்யும்படியும், தொண்டர்களின் கருத்தை கேட்டறிந்த பின்னரே வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்றும், வேண்டுகோள் வைத்தனர்.இதை ஏற்றுக்கொண்ட எடியூரப்பா, இது குறித்து மேலிடத்துடன் பேசி, முடிவு செய்வதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ