உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமைச்சர் மீதான முறைகேடு வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றலாம்; சுப்ரீம் கோர்ட் யோசனை

அமைச்சர் மீதான முறைகேடு வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றலாம்; சுப்ரீம் கோர்ட் யோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டில்லி சிறப்பு நிருபர்

தமிழக அமைச்சர் சுப்பிரமணியன் முறைகேடு வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.'சிட்கோ' எனப்படும், சிறு தொழில்கள் மேம்பாட்டு கழக நடைமுறையின் கீழ், அதில் பணிபுரிந்த தொழிலாளி கர்ணன் என்பவருக்கு, கடந்த 1995ல் அரசு இடம் ஒதுக்கியது. அவ்வாறு ஒதுக்கிய இடத்தை யாருக்கும் விற்க கூடாது; குறிப்பிட்ட அந்த தொழிலாளருக்கு இடம் தேவையில்லை என்றால் அரசுக்கு திருப்பி வழங்க வேண்டும்.

சபாநாயகர் அனுமதி

ஆனால், அந்த இடத்தை தி.மு.க., அமைச்சர் சுப்பிரமணியன், அவரது மனைவி சட்டவிரோதமாக வாங்கியதாகவும், இதில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக, பார்த்திபன் என்பவர் அளித்த புகாரில், கடந்த 2019ல், சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக எப்.ஐ.ஆர்., பதிவானது.அப்போது, தி.மு.க., -எம்.எல்.ஏ.,வாக இருந்த சுப்பிரமணியனை விசாரிக்க, அப்போதைய சபாநாயகர் தனபால் அனுமதி அளித்ததையடுத்து, மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை துவங்கியது. இதற்கு எதிராக, சுப்பிரமணியன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், முதலில் இடைக்கால தடை விதித்தது. பின், அந்த தடையை கடந்த மாதம் 28ல் நீக்கியது.சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, சுப்பிரமணியன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி சுதான்சு துலியா தலைமையிலான அமர்வில் நேற்று நடந்தது.அப்போது அமைச்சர் சுப்பிரமணியன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ''சென்னை மேயராக சுப்பிரமணியன் பதவி வகித்த போது, அவர் மீது எழுந்த குற்றச்சாட்டில் விசாரணை நடத்த சபாநாயகர் ஒப்புதல் அளித்த நடைமுறை தவறானது. மேயரிடம் விசாரணை நடத்த, மாநில அரசிடம் தான் அனுமதி பெற வேண்டும். எனவே, வழக்கை ரத்து செய்யவேண்டும்,'' என, வாதிட்டார்.

நோட்டீஸ்

இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது: இந்த விவகாரத்தில் மனுவில் உள்ள அம்சங்களையும், இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்புகளையும் ஆராய்ந்தோம். பொது ஊழியர் ஒருவர், இத்தகைய முறைகேட்டில் ஈடுபடும்போது, அவர் முறைகேட்டில் ஈடுபட்டபோது என்ன பதவி வகித்தாரோ, அது தொடர்பான உரிய நபரிடம் அனுமதி பெற வேண்டுமா?அல்லது அவர் தற்போது வகிக்கும் பதவியின் அடிப்படையில், யாரிடம் அனுமதி பெற வேண்டுமோ, அவர்களை அணுக வேண்டுமா என்ற அரசியல் சாசன கேள்வி எழுகிறது.எனவே, இதை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி விசாரிக்க நினைக்கிறோம். இது தொடர்பாக, எதிர் மனுதாரர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அதன் பிறகு விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை இரண்டு வார காலத்திற்கு ஒத்தி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

rama adhavan
ஜூலை 30, 2025 18:51

அது என்ன மேயருக்கு, எம்எல்ஏக்கு, மந்திரிக்கு, எம் பி க்கு, ஆளும் கட்சிக்கு, எதிர்கட்சிக்கு, கவுன்சிலருக்கு தனித்தனி சட்டம், அதற்கு அரசியல் அமைப்பு பெஞ்ச், ஸ்டூல். உலகத்திலேயே பெரிய எழுத்து வடிவத்தில் உள்ள அரசியல் அமைப்பு சட்டத்திலா இவ்வளவு குறைபாடு? 27ஏ பிரிவுகள் உள்ள அமெரிக்கா சட்டத்தில் எந்த குறைபாடும் இல்லையே? எவ்வளவோ நாட்டில் அரசியல் அமைப்பு சட்டங்கள் எழுத்து வடிவில் இல்லையே? அங்கெல்லாம் நிதி எப்படி நிர்வகிக்கப் படுகிறது?


xxxx
ஜூலை 29, 2025 22:10

நாதியற்ற மன்றமே தேவை இல்லை . இதில அவமதிப்புவழக்குகள் வேற ....


c.mohanraj raj
ஜூலை 29, 2025 21:01

அதில் 10 வருடம் விசாரிக்க பத்து வருடம் தண்டனைக்கு 10 வருடம் இப்பவே 77 அதற்குள் அவன் இறந்தும் விடுவான்


K.SANTHANAM
ஜூலை 29, 2025 17:05

நீங்க முடிவு செய்யறதுக்குள்ள அவருக்கு பதவி மறுபடியும் போயிருச்சுன்னா..அப்பவும் யோசிப்பீங்களா..ஒரு சுப்பனும், குப்பனும் தவறு செய்தால் உடனடியாக தண்டனை கொடுக்கிறீர்களே அது எப்படி


rama adhavan
ஜூலை 30, 2025 18:11

இந்த பதவி இல்லாவிட்டாலும் தண்டனை அல்லது வைகுண்ட பதவியில் கட்டாயம் கிடைக்கும். இறைவன் ஏமாற மாட்டான்.


D.Ambujavalli
ஜூலை 29, 2025 16:59

வழக்கைப் பதியவே inky pinky pinky போட்டு ஆற அமர வழக்குப்பதிந்து அந்தத் தீர்ப்பில் மேல்முறையீடு முடிந்து….. ஆஹா, இதல்லவோ பக்கா திராவிட மாடல் ஒரு சாமானியனுக்கு இத்தனை வசதிகள் சலுகைகள் கிடைக்குமா? இதற்குள் கேஸ் முடிந்து, சிறையிலேயே அவன் செத்திருப்பான் ஹூம், அரண்மனைக்கோழி, அம்மிக்கல், ஆட்டுக்கல் மட்டுமில்லை, மழையே கொத்தி உடைக்கும்


A viswanathan
ஜூலை 29, 2025 20:13

ஒரு சாதாரண குடி மகன் தவறுசெய்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்குவார்கள். அமைச்சர் அரசியல்வாதி தவறு செய்தால் அரசியல் சாசன அமர்வு என்று வருடக் கணக்கில் எடுத்துக் கொண்டு அவரை விடுவித்து விடுவார்கள்.இது தான் இங்குள்ள நடை முறை.


M S RAGHUNATHAN
ஜூலை 29, 2025 15:37

என்ன பைத்தியக்காரத்தனம். குற்றம்.நடந்து இருக்கிறது என்பது உண்மை. அதை செய்தவர் யார்வென்று தெளிவாக தெரிகிறது. புகார் கொடுக்கப் பட்டு இருக்கிறது. ஆனால் இப்போது அரசிற்கு சந்தேகம் அரசின் உயர்ந்த பதவியில் உள்ள ஒருவர் தவறு செய்தவர் மேல் விசாரணை நடத்த அனுமதி அளிக்கிறார். ஆனால் உயர் நீதி மன்றமோ விசாரணை நடத்த அனுமதிக்கொடுத்தவர் தகுதியானவரா, சரியானவரா ? குற்றம் நடந்ததா இல்லையா என்று கேள்வி இல்லை. விசித்திரம். நாளை குற்றம் சுமத்தப்பட்டவர் விசாரணையின் முடிவுக்கு பிறகு இந்த விசாரணையை ஆண் நீதிபதி நடத்தியது தவறு, அல்லது தமிழை தாய் மொழியாக கொள்ளாதவர் நடத்தியது தவறு, நீதிபதி இந்த சமுதாயத்தை சேர்ந்தவர் அவர் நடத்தியது தவறு, குறைந்தது 15 வருடமாவது உயர் நீதி மன்ற நீதிபதியாக இருந்து இருக்க வேண்டும். அவருடைய தீர்ப்புகள் தவறுகள் என்று இருந்ததில்லை என்றெல்லாம். மாசு அவர்கள் வாதாடுவார்கள். பின் அதற்கு ஒரு அரசியல்சாசன அமர்வு அமைக்கப் படவேண்டி இருக்கும். யார் சொன்னது இந்த நாட்டில் அனைவரும் சமம் என்று. இதெல்லாம்.பித்தலாட்டமான பேச்சு.


ஆரூர் ரங்
ஜூலை 29, 2025 15:21

டான்சி வழக்கில் ஜெயா வுக்கு விடுதலை தந்த மன்றம் சிட்கோ வழக்கில் இவரைத் தப்பிக்க விடுமா? என்ன இருந்தாலும் இவரும் ஒரு VIP இல்லையா?. வழக்கை சட்டுபுட்டுன்னு முடிங்கப்பா.


lana
ஜூலை 29, 2025 13:08

சூப்பர் கொலை கொள்ளை அடித்தார் ஆ என்று பார்ப்பதில்லை. இவர் மேயர் ஆ mla வா முந்திரி ஆ ன்னு விசாரணை நடத்தி முடிப்பதற்குள் அந்த ஆள் போய் சேர்ந்து விடுவார். நீதி நிலை நாட்ட படும். நம்புங்கள் இளிச்சவாயர்கள் மீது மட்டும்


Ramesh Sargam
ஜூலை 29, 2025 13:00

இந்தியாவிலேயே தமிழக அமைச்சர்கள் மீதுதான் அதிக வழக்குகள் இருப்பதாக தோன்றுகிறது. என்ன ஒரு சாதனை. வியக்கிறேன் தமிழக அமைச்சர்களின் சாதனையை அறிந்து. எல்லாம் மக்களுக்கு சோதனை, வேதனை.


Sesh
ஜூலை 29, 2025 12:03

Why this much urgent. Better ask same minister to proceed the case or not. Good comedy law tem.


சமீபத்திய செய்தி