உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., பெண் நிர்வாகிகள் அறைகளில் நள்ளிரவில் போலீசார் சோதனை

காங்., பெண் நிர்வாகிகள் அறைகளில் நள்ளிரவில் போலீசார் சோதனை

பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காடு காங்., - எம்.எல்.ஏ., ஷாபி பரம்பில், லோக்சபா தேர்தலில் வடகரை தொகுதி எம்.பி.,யானார். இதையடுத்து, வரும் 20ம் தேதி பாலக்காடு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.இந்த தேர்தலில் காங்., வேட்பாளராக ராகுல் மாங்கூட்டம், பா.ஜ., வேட்பாளராக கட்சியின் மாநில பொதுச் செயலர் கிருஷ்ணகுமார், மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளராக சரின் போட்டியிடுகின்றனர்.இந்நிலையில், இடைத்தேர்தலுக்காக காங்., கட்சியினர் கருப்பு பணம் கொண்டு வந்துள்ளதாக, திடீரென வதந்தி பரவியது. அதையடுத்து, நேற்று அதிகாலை 1:00 மணிக்கு, மாநில காங்., பெண் நிர்வாகிகளான பிந்து கிருஷ்ணா, ஷானிமோள் உஸ்மான் ஆகியோர் தங்கியிருந்த ஹோட்டல் அறைகளில் போலீசார் சோதனை நடத்தினர். எனினும், இந்த சோதனையில் பணம் எதுவும் கிடைக்கவில்லை.தகவல் அறிந்து, காங்., கட்சியினர் ஹோட்டல் முன் திரண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூ., மற்றும் பா.ஜ., கட்சியினரும் ஹோட்டல் முன் திரண்டு, காங்கிரஸ் நிர்வாகிகள் தங்கி இருக்கும் அனைத்து அறைகளையும் சோதனையிட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால், மூன்று கட்சியினர் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, கட்சியினர் அனைவரையும் அங்கிருந்து போலீசார் வெளியேற்றினர்.இந்நிலையில், போலீஸ் நடத்திய சோதனையை கண்டித்து, நேற்று காலை 11:30 மணிக்கு பேரணியாக வந்த காங்., கட்சியினர், பாலக்காடு மாவட்ட எஸ்.பி., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

வைகுண்டேஸ்வரன்
நவ 07, 2024 10:57

இரவு 1 மணிக்கு மகளிர் அறைகளில் சோதனை என்று புகுந்ததால், வயநாட்டில் கிடைக்கவிருந்த கொஞ்சநஞ்ச ஓட்டுகளையும் பாஜக வும் கம்யூனிஸ்ட் கட்சியும் இழந்து விட்டது.


வாய்மையே வெல்லும்
நவ 07, 2024 07:02

தொண்டை கிழிய ராவுளு மோடி பஜனை பாடி அழுது புலம்புவார் என எதிர்பார்க்கலாம். இவங்க அப்பழுக்கற்ற ஆட்கள் என வேஷம் கலையும் முன்னே கூப்பாடு போடவேண்டிய கட்டாயத்தில் கான் க்ராஸ் ஆட்கள் .


நிக்கோல்தாம்சன்
நவ 07, 2024 06:20

வேலையத்தவங்க கடைசியில் தூக்கத்தை கெடுத்தது தான் மிச்சம் , I.N.D.i கூட்டணியின் மற்றுமொரு அவலம்


புதிய வீடியோ