உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரு நாளைக்கு, 40 முதல் 50 வீடுகளுக்கு ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செல்ல வியூகம்: கோபாலசாமி

ஒரு நாளைக்கு, 40 முதல் 50 வீடுகளுக்கு ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செல்ல வியூகம்: கோபாலசாமி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''கணக்கெடுப்பு படிவத்துடன் வரும் ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம், அதை வாக்காளர்கள் இன்று பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு, 40 முதல் 50 வீடுகளுக்கு ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செல்லும் வகையில் வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது,'' என, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசாமி கூறினார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை, இந்திய தேர்தல் ஆணையம் இன்று துவங்க உள்ளது. இதன் முதல் கட்டமாக, வாக்காளர்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகளில், ஓட் டுச்சாவடி அலுவலர்கள், இன்று முதல் ஈடுபட உள்ளனர். இதற்காக, வீடு வீடாக வரும் ஓட்டுச்சாவடி அலுவலர்களை அணுகுவது தொடர்பாக, பல்வேறு கேள்விகள் வாக்காளர்கள் மத்தியில் எழுந்துள்ளன. முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசாமி அளித்த பேட்டி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் முதல் நாளான இன்று என்ன நடக்க போகிறது? கடந்த, 2002ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலுடன், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வாக்காளர்களின் வீடுகளுக்கு வருவர். இதற்கான பட்டியல், தேர்தல் கமிஷன் வாயிலாக, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அவர்கள் கொண்டு வரும் படிவத்தில், தொடர்புடைய வாக்காளரின் பெயர், முகவரி விபரம் இடம்பெற்று இருக்கும். அதை வாக்காளர்கள் வாங்கி கொள்ள வேண்டும். அந்த வாக்காளர், 2002ம் ஆண்டு அதே இடத்தில் வசித்திருந்தால், மற்ற விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அந்த வாக்காளர், தொகுதி அல்லது வீடு மாறி இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஒருவேளை, 2002ம் ஆண்டு வேறு ஒரு தொகுதியில், வேறு ஒரு இடத்தில், அந்த வாக்காளர் இருந்தால், அதை ஓட்டுச்சாவடி அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். ஓட்டுச்சாவடி அலுவலர், அந்த தொகுதியில், 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை பார்த்து, அவரது இருப்பை உறுதி செய்வார். அதன்பின், குடும்பத்தில் உள்ள மற்ற வாக்காளர்களின் விபரத்தை படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். ஓட்டுச்சாவடி அலுவலர் அடுத்தமுறை வரும்போது, மீண்டும் சமர்பிக்க வேண்டும். எத்தனை நாட்களில் கணக்கெடுப்பு பணி நிறைவு பெற வாய்ப்புள்ளது?ஒவ்வொரு ஓட்டுச்சா வடிக்கும், 1,200 வாக்காளர்கள் இருக்கும்படி, இந்திய தேர்தல் ஆணையம் வரையறை நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி, கிராமங்களில் குறைந்தபட்சம், 250 வீடுகள் வரை இருக்கும். நகரப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில், மொத்தமாக பல வாக்காளர்கள் இருக்கவும் வாய்ப்புள்ளது. ஒரு நாளைக்கு, 40 முதல் 50 வீடுகளுக்கு ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செல்லும் வகையில் வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஒரு வாரம் அல்லது, 10 நாட்களுக்குள் கணக்கெடுப்பு விண்ணப்பம் வினியோகம் செய்யும் பணிகள் நிறைவு பெறும். அடுத்தகட்ட சுற்றின்போது, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் கேட்கும் ஆவணங்களை, வாக்காளர்கள் வழங்க வேண்டும். படிவத்தை பூர்த்தி செய்வதில், ஏதாவது சந்தேகம் இருந்தால், அதற்கு தேவையான உதவிகளை, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வழங்குவர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

Padmasridharan
நவ 05, 2025 15:10

வோட்டு.மட்டும் போட மக்கள் தேவை. ஆனால் பயனில்லாத NOTA வை எடுக்க மாட்டார்கள். அநீதி காவல் காக்கும் . அரசியலை 5 ஆண்டுகளில் நடுவிலேயே இறக்க மட்டும் மக்களுக்கு உரிமை இல்லயே சாமி.


Venkatesan Srinivasan
நவ 04, 2025 23:48

பதிவாகும் ஒவ்வொரு வாக்கும் உண்மையான, இந்திய நாட்டின் பிரஜைகள் மட்டுமே என்பது உறுதிபட வேண்டும். கண்டிப்பாக கள்ளக்குடியேறிகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை முன் வைத்து பார்க்கும்போது எந்த உண்மை இந்திய பிரஜைக்கும் இந்த "சிறப்பு சீர்திருத்தம்" பெரிய தடையாக தோன்றாது. மேலும் எந்தவொரு உண்மை வாக்காளரும் தங்கள் மற்றும் தங்கள் உறவுகள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்த எந்த தயக்கமும் இருக்க போவதில்லை. கள்ளக்குடியேறிகள் மட்டுமே தங்கள் உறவுகள் பற்றிய தகவல்களை பதிவிட இயலாது. அப்படியே பொய்யாக பதிவிட்டாலும் குட்டு வெளிப்பட்டு விடும்.


Rahim
நவ 05, 2025 12:08

அந்த கள்ளக்குடியேறி உங்க 10 சதவிகிதம்தான்


Iyer
நவ 04, 2025 13:50

தற்போதைக்கு - வெளிநாடுகளை இருக்கும் இந்தியர்களுக்கு ONLINE VOTING அல்லது DIRECT VOTING FACILITIES ஏதும் இல்லை. இந்தியாவுக்கு வந்துதான் வோட்டளிக்கவேண்டும். அது எல்லோருக்கும் சாத்தியமில்லை. ஆனால் மோதி அரசு வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஓட்டளிக்க ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக செய்திகள் வந்தன. நாம் - வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் சேர்ந்து - அரசுக்கு விண்ணப்பிக்கவேண்டும்.


தலைவன்
நவ 04, 2025 14:08

ரொம்ப தாமதம். இப்போ அதுக்கு அவசியம் இல்லை என்றே நினைக்கிறன்.


Rahim
நவ 04, 2025 14:13

ஒட்டுபோடுவதை பற்றி பிறகு பார்க்கலாம் சார் ஆனால் ஓட்டுரிமையை தக்கவைக்க எப்படி என்ன செய்யவேணும் நமது தாயோ தந்தையோ மனைவியோ இவர்களால் நமக்காக குறைவில்லாமல் படிவத்தை பூர்த்தி செய்தால் மட்டுமே நாம் ஓட்டளிப்பதை பற்றி சிந்திக்க முடியும் நமது ஓட்டுரிமையே தற்போது கேள்வி குறியாகி நிற்கிறது.


ஜெய்ஹிந்த்புரம்
நவ 05, 2025 03:56

கவலையே வேண்டாம் உங்க வோட்டை வோட் சோர் கட்சி என்னிக்கோ திருடியிருப்பாங்க.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 04, 2025 13:34

வெளிமாநிலங்களில் வசிக்கும் வாக்காளர்கள் பற்றி >>>>


திகழ்ஓவியன்
நவ 04, 2025 13:22

அய்யா மெத்த படிச்சவரே காலியில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் தொடங்கும் பனி ஒரு நாளில் 50 வீடு , நீங்கள் சொல்லுவது அப்ப்ர்ட்மென்ட் ஓகே village இல் ஸாத்யமா , கனவு தான் என்றாலும் அதிலும் ஓவர் தர்மம் வேணாம்மா , அதுவும் 7 கோடி வாக்காளர்கள் வெறும் 30 நாட்களில் முடியுமா


Balaji
நவ 04, 2025 18:24

30 நாட்கள் என்று எங்கும் சொல்லப்பட வில்லை. சென்னை போன்ற நகரங்களில், 4 முதல் 5 மணி நேரம் 50 வீடுகள் முடிக்கலாம்


Rahim
நவ 04, 2025 12:42

எழுதும் இவரு ஈரேழு 14 உலகையும் சுற்றி வந்த அறிவாளி போல....


Vasan
நவ 04, 2025 10:32

Similar to Demonetization, all the existing voter ID to be made invalid overnight and fresh Voter ID to be issued to all citizens based on their Aadhaar ID.


Ramesh Sargam
நவ 04, 2025 10:25

இந்த நேரத்தில் வாக்காளர்கள் வெளி நாடுகளில் இருந்தால், அவர்கள் என்ன செய்யவேண்டும்?


Rahim
நவ 04, 2025 11:30

இப்பத்தான்யா சரியான பாயிண்டை பிடிச்சிருக்க ..ஹா ஹா ஹா ,நானும் கேட்கலாம் னு இருந்தேன் நம்ம ஒட்டு என்னாகுமோ


duruvasar
நவ 04, 2025 14:37

அதெல்லாம் அவிக பூத் ஏஜென்ட்கள் பார்த்துக்கொள்வார்கள்.


baala
நவ 04, 2025 10:19

உண்மையான வாக்காளர்களை நீக்கும் எண்ணம் இருக்க கூடாது. போலியான வாக்காளர்களை நீக்கலாம்.


Iyer
நவ 04, 2025 13:56

BOOTH LEVEL ல் - அலுவலர்கள் சென்று VOTER LIST சரிபார்ப்பதால் - உண்மையான வாக்காளர்களை நீக்க முடியாது. ஆனால் BIRTH CERTIFICATE அல்லது ADDRESS PROOF அல்லது SCHOOL CERTIFICATE இல்லாத வோட்டர்கள் மாட்டிக்கொள்வார்கள் சட்டவிரோத குடியேறிகள் மாட்டிக்கொள்வார்கள் இறந்தவர் பெயரில் இனி கள்ள வோட்டு போடமுடியாது.


Rahim
நவ 04, 2025 10:13

2002 ஆண்டுக்கும் பிறகு தற்போது 23 வருடங்கள் முடிந்து விட்டது அப்பாவி ஏழைகள், விவசாய கூலிகள், அன்றாடம் காய்ச்சி தெருவோர மக்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்களுக்கு முந்தைய ஆவணங்களை சேமித்து வைப்பதிலும் தகவல்களை சொல்வதற்கும் முடியாமல் போகும் மேலும் 2002 இல் வாக்குரிமை இல்லாத ஒருவர் தற்போது பதிவு செய்ய 2002 ஆண்டு அவரது குடும்பத்தில் யார் ஓட்டுரிமை பெற்றவர் அவர் எங்கே இருக்கிறார் எந்த வாக்குச்சாவடியில் ஒட்டு போட்டார் என்ற விபரங்களை தரவேண்டி இந்த படிவத்தில் நிரப்பி தரவேணும் இதை தர முடியாத படிக்காதவர்கள் ஏழைகள் தொழிலாளர்களின் ஓட்டுரிமை நீக்கப்படும் மேலும் 2002 இல் ஒட்டு போட்ட குடும்ப உறுப்பினர் இறந்திருந்தால் அவரது இறப்பு சான்றிதழை தரவேணும் அவருக்கும் நமக்குமான உறவை இரூபிக்க பிறப்பு சான்றிதழை தரவேண்டும் அதோடு இந்த படிவத்தை நகல் எடுக்கவும் முடியாது சிறிய தவறு செய்தாலும் படிவம் நிராகரிக்கப்படும், தற்போது ஒருவரது வாக்குரிமையை உறுதிசெய்ய 2002 ஆண்டு தரவுகளை, குடும்ப உறுப்பினர் விபரங்களை கேட்பதற்கு தேர்தல் கமிஷனுக்கு உரிமை இல்லை இது உள்துறை அமைச்சகத்தின் வேலை அதாவது இவர்கள் கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தில் உள்ள அதே குறுக்குவழி சிறப்பு வாக்காளர் சீர்திருத்தத்தை ஏன் தேர்தலுக்கு ஒருவருடம் காலஅவகாசம் இருக்கும் மாநிலங்களில் தொடங்காமல் 6 மாதங்கள் மட்டுமே உள்ள மாநிலங்களில் தொடங்க வேண்டும், இது ஓட்டுரிமையை பறிப்பதற்கு மட்டுமல்ல பாஜகவிற்கு ஓட்டுபோடாத சில மாநிலங்ககளில் உள்ள மக்களை மறைமுக குடியுரிமை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தி அவர்களை வெளியேற்றும் ஹிட்லரிஷ சதிகார நடவடிக்கை இதற்க்கு பாஜகவின் நண்பன் தேர்தல் ஆணையம் துணை போகிறது.


ஜெய்ஹிந்த்புரம்
நவ 05, 2025 04:04

நீங்க என்ன சொன்னாலும் செல்லாது. உங்க பேரை நீக்கிடுவாங்க.


சமீபத்திய செய்தி