உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜாபர் சேட் மீதான அமலாக்க துறை வழக்கு: தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்

ஜாபர் சேட் மீதான அமலாக்க துறை வழக்கு: தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி, ஓய்வுபெற்ற தமிழக டி.ஜி.பி., ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள பணப்பரிமாற்ற மோசடி வழக்கு விசாரணைக்கு தடை விதித்து, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.ஜாபர் சேட், தமிழக டி.ஜி.பி.,யாக கடந்த 2006 - 11 தி.மு.க., ஆட்சியில் பதவி வகித்தவர். அந்த காலகட்டத்தில், சென்னை திருவான்மியூரில் வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டுமனையை, இவர் முறைகேடாக பெற்றதாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் 2011ல் வழக்குப்பதிவு செய்தனர்.சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை, 2019 மே 23ல் ரத்து செய்தது. லஞ்ச ஒழிப்புத் துறை பதிவுசெய்த வழக்கின் அடிப்படையில், பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ஜாபர் சேட் மீது, அமலாக்கத்துறையினர் 2020 ஜூன் 22ல் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாபர் சேட் மனு தாக்கல் செய்தார்.

ஆக., 21ல் உத்தரவு

அதில், 'எனக்கு எதிரான ஊழல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் 2019-ல் ரத்து செய்த நிலையில், அமலாக்கத் துறை வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதிக்கக் கூடாது. 'என் மனைவிக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவுசெய்த வழக்கு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, என் மீதான வழக்கையும் ரத்து செய்ய வேண்டும்' எனக் கோரி இருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் அமர்வு, ஜாபர் சேட்டுக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்து ஆக., 21ல் உத்தரவிட்டது.பின்னர் திடீர் திருப்பமாக, ஆக., 23ல் அந்த உத்தரவை திரும்ப பெற்ற சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் சில விளக்கங்கள் பெறவேண்டி இருப்பதால் மறுவிசாரணைக்கு உத்தரவிட்டது.

செப்., 30ல் கருத்து

இதை எதிர்த்து, ஜாபர் சேட் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அமர்வு, வழக்கு தொடர்பான விபரங்களை சென்னை உயர் நீதிமன்ற பதிவாளரிடம் கேட்டு பெற்றது.அதை ஆய்வு செய்த நீதிபதிகள், 'விசாரணைக்கு ஏற்கனவே தடை விதித்த நிலையில், மறுவிசாரணைக்கு மீண்டும் உத்தரவிட்டது முற்றிலும் தவறானது' என, செப்., 30ல் கருத்து தெரிவித்தனர்.இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:ஜாபர் சேட் வழக்கில் உச்ச நீதிமன்றம் விரிவாக விசாரணை மேற்கொள்ள உள்ளது. நவ., 22ல் அடுத்தக்கட்ட விசாரணை துவங்கும். அதுவரையில் அனைத்து விசாரணைக்கும் தடை விதிக்கப்படுகிறது.நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற்று, மறுவிசாரணைக்கு உத்தரவிடும் போக்கு குறித்து சில சட்டங்கள் வகுக்கப்படும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

venugopal s
அக் 05, 2024 16:52

என்று நமோ நிரபராதி என்று தீர்பளித்தார்களோ அன்றே எனக்குக் கூட நீதித்துறை மீது நம்பிக்கை போய் விட்டது!


Tetra
அக் 10, 2024 18:07

ஏன்? கூட இருந்து பார்த்தீர்களா? வழக்கில் போய் சாட்சி சொல்லியிருக்கலாமே. மனம் என்று ஒன்று இல்லாதவர்கள்


ஆரூர் ரங்
அக் 05, 2024 10:33

ராடியா டேப்பில் கனிவுடன் உற்சாகமாக பேசினாரே. இப்படிப்பட்ட உத்தமமான ஆபீசர் மீது வழக்கு போடலாமா ?தடை விதித்த நீதிபதிகளுக்கு கலைமாமாமணி விருது பார்சல்.


Shekar
அக் 05, 2024 09:46

பொதுவாகவே நம் நாட்டில் குற்றங்கள் பெருக காரணம் நீதிமன்றங்களே, குற்றவாளிகளுக்கு காட்டப்படும் கரிசனம் பாதிக்க பட்டவர்களிடம் காட்டுவதில்லை. குற்றவாளிகள் மனிதஉரிமை காப்பாற்றபட வேண்டும், ஆனால் பாதிக்கப்பட்டவன் எக்கேடும் கெடட்டும் என்ற மனநிலையில் உள்ளது


Kasimani Baskaran
அக் 05, 2024 08:42

பணம் பாதாளம் வரை பாயும் என்பதற்கு நல்ல ஒரு அத்தாட்சி.


sridhar
அக் 05, 2024 08:31

Even in an ' and shut ' case it is dragging on for years. Our courts deliver speedy justice only in small cases like pickpocket , Eve teasing , burglary etc involving ordinary criminals. Against vvip criminals our judges shiver.


KATHIR ANAND
அக் 05, 2024 07:58

ஜாபர் சேட், தமிழக டி.ஜி.பி.,யாக கடந்த 2006 TO 2011 ல் பதவி வகித்தவர். வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டுமனையை, இவர் முறைகேடாக பெற்றதாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் 2011ல் வழக்குப்பதிவு செய்தனர். சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை, 2019 மே 23ல் ரத்து செய்தது. புதிதாக பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ஜாபர் சேட் மீது, அமலாக்கத்துறையினர் 2020 ஜூன் 22ல் வழக்குப்பதிவு செய்தனர் . இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அமலாக்கத் துறை வழக்கை 2024 ஆக., 21ல்ரத்து செய்தது . பின்னர் திடீர் திருப்பமாக, ஆக., 23ல் அந்த உத்தரவை திரும்ப பெற்றது . இதை எதிர்த்து, ஜாபர் சேட் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதை ஆய்வு செய்த நீதிபதிகள், விசாரணைக்கு ஏற்கனவே தடை விதித்த நிலையில், மறுவிசாரணைக்கு மீண்டும் உத்தரவிட்டது முற்றிலும் தவறானது என, செப்., 30ல் கருத்து தெரிவித்தனர்.இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் உச்ச நீதிமன்றம் விரிவாக விசாரணையை வரும் நவ., 22 முதல் மேற்கொள்ளும் என கூறியுள்ளனர் . சட்டப்படி ஆணைகள் , ஆவணங்கள், பண பரிமாற்றங்கள் அனைத்தும் பதிவுகளுடன் கூடிய இந்த வழக்கு 2011 ல் தொடங்கி 13 ஆண்டுகளாகியும் இன்னும் நடைபெற்று கொண்டிருப்பது IPC சட்டங்கள் குறித்த நீதிபதிகளின் முரண்பட்ட கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறது . ஒரே சட்டம் வெவ்வேறு புரிதல் . மக்கள் திகைப்பு


VENKATASUBRAMANIAN
அக் 05, 2024 07:56

நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. நீதிபதி விருப்பு வெறுப்புகளுக்கு அப்பார்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆனால் இப்போது அதில் தொய்வு உள்ளதாக சமீபத்திய தீர்ப்புகள் மூலம் தெரிகிறது. ஒரு சில நீதிபதிகளினால் எல்லோருக்கும் கெட்ட பெயர்


Jysenn
அக் 05, 2024 05:38

சூப்பர் கோர்ட் .நாடு வெளங்கும் .


Sathyanarayanan Sathyasekaren
அக் 05, 2024 04:05

வரவர இந்த நீதிபதிகளின் மீது நம்ம்பிக்கை போகிறது.


யுவராஜன்
அக் 05, 2024 03:44

வழக்கு 2011 ல் தொடரப்பட்டு எல்லோரும் தூங்கி, நாலு முறை ஆட்சி மாறி , ரெண்டு தலைமுறை நீதிபதிகள் மாறி இன்னிக்கி முழிச்சிக்கிட்டு குற்றன் சாட்டப்பட்டவருக்கு சதாபிஷேகமும் முடிஞ்ச நிலையில் அதிரடி ஆணை பிறப்பித்த உச்சநீதிமன்றத்துக்கு ஏகோபித்த பாராட்டுக்கள். எனக்கு சதாபிஷேகம் முடியறதுக்குள்ளாற தீர்ப்பு வந்துரும்னு நினைக்கிறேன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை