உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுதொழில் முனைவோருக்கு ஆதரவான கொள்கை இல்லை: ராகுல்

சிறுதொழில் முனைவோருக்கு ஆதரவான கொள்கை இல்லை: ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' இந்தியாவில் சிறு தொழில்முனைவோர் உற்பத்தி செய்யவே விரும்புகிறார்கள். ஆனால், அவர்களுக்கு ஆதரவான கொள்கை இல்லை,'' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான டிவிக்களின் 80 சதவீத உதிரிபாகங்கள் சீனாவில் இருந்து தான் வருகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? மேக் இன் இந்தியா என்ற பெயரில், நாம் வெறும் பொருட்களை பொருத்த தான் செய்கிறோம். உண்மையில் தயாரிக்கப்படவில்லை. ஐபோன்கள் முதல் டிவிக்கள் வரை, பாகங்கள் வெளிநாட்டில் இருந்து தான் வருகின்றன. நாம் அவற்றை ஒன்றாக இணைக்கிறோம்.சிறு தொழில்முனைவோர் உற்பத்தி செய்ய விரும்புகிறார்கள். ஆனால், அவர்களுக்கு ஆதரவான கொள்கை இல்லை. மாறாக, கடுமையான வரிகளும், நாட்டின் தொழில்துறையை கைப்பற்றிய குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏகபோகமும் மட்டுமே உள்ளது.உற்பத்தியில் தன்னிறைவு பெறும் வரை, வேலைவாய்ப்புகள், வளர்ச்சி மற்றும் ' மேக் இன் இந்தியா' பற்றிய பேச்சுகள் வெறும் பேச்சுக்களாகவே இருக்கும்.எல்லையை தாண்டி இந்தியா ஒரு உண்மையான உற்பத்தி மையமாக மாறுவதற்கும், சீனாவுடன் சமமாக போட்டியிடுவதற்கும் அடிமட்ட அளவில் மாற்றம் தேவை. இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

V Venkatachalam
ஜூலை 19, 2025 20:52

சிறு தொழில் புரிவோர் லிஸ்டில் ராபர்ட் வாத்ராவின் பெயர் இருக்கு. அவரை 10 வருஷமா இ டி துரத்துவது மற்றும் சொத்து முடக்குவது ராகுல் கானுக்கு பிடிக்கலை.நான் சப்போர்ட் பண்றேன்னு சொல்லி வச்சுட்டான் மனுஷன்.அது போறாதுன்னு இதையும் சொல்லி வச்சுட்டா பின்னாடி உதவுமே..அதான்...


பேசும் தமிழன்
ஜூலை 19, 2025 17:56

உங்கள் கட்சி ஆட்சி செய்த 50 ஆண்டு காலத்தில்.... சிறு தொழில்களுக்காக என்ன செய்தீர்கள் ???


என்றும் இந்தியன்
ஜூலை 19, 2025 17:27

ராகுல் சொல்வதில் தப்பில்லை பசுவிற்கு புல் பிடிக்கும் பன்றிக்கு ம..ம் பிடிக்கும் பன்றியிடம் போய் புல் சாப்பிட்டால் நல்லது என்று சொன்னால் எப்படி அந்த பன்றிக்கு பிடிக்கும் முஸ்லீம் நேரு காங்கிரஸ் என்றால் இப்படித்தானிருக்கும். இத்தாலி பிரஜை இங்கிலாந்து பிரஜை ஆனால் இந்தியாவின் எம்பி பின் எப்படி பேச்சு இருக்கும்.


VSMani
ஜூலை 19, 2025 17:21

ராகுல் சொல்வது முற்றிலும் உண்மை. நாம் எலக்ட்ரானிக் பொருட்களை தயாரிக்கவில்லை Making மாறாக அவற்றை ஒன்றாக இணைக்கிறோம் Assembling . சீனாவிடமிருந்து உதிரி பாகங்கள் வாங்காமல் நாமாகவே தயாரிக்க வேண்டும். தொழில் புரட்சித்தேவை அதற்கான அரசிடமிருந்து ஆதரவான கொள்கை வேண்டும். அப்பு கொஞ்சம் நல்ல விசயம்களை அப்பப்ப சொல்லுகிறார்.


Nava
ஜூலை 19, 2025 16:50

பப்புக்கு சிறுதொழில் பற்றி என்ன தெரியும் பேச வந்துட்டது மேலும் இந்த உதவாக்கரையின் மைத்துனன் செய்த முறைகேடுகளுக்கு நீதிமன்றம் விதித்த தீர்ப்பை ஏற்க மாட்டேன் என்று பொதுவெளியில் சொல்கிறது இந்த பப்பு


Subburamu Krishnasamy
ஜூலை 19, 2025 15:36

He is a typical Chinese agent. Always he praise Chinese and talk against our nation. He is not a true Indian, Italy blood is running in his body. He made an secret agreement with China. But now he could not implement his agreement. All his talks are desperate in nature. His activities are 100 percent antinationals in nature. Number one trais our opposition party leader It is a great shame on INC


பாரத புதல்வன்
ஜூலை 19, 2025 15:24

நீயே ஓர் இத்தாலி தயாரிப்பு தான் பப்புகான்....சீனவோட அடியாள் நீ அதுக்கு ஆதரவா பேசுவ நீ....


Shankar
ஜூலை 19, 2025 15:15

பப்புவுக்கு அதானி மற்றும் அம்பானி பெயரை சொல்லலைன்னா தூக்கமே வராது போலிருக்கு. காங்கிரஸ் ஆட்சி காலத்தை விட இப்போ நாடு ரொம்பவே அமைதியா நல்ல வளர்ச்சியோடு இருக்கு.


vadivelu
ஜூலை 19, 2025 15:10

ஏன் உங்களுக்கு நீங்கள் ஆட்சியில் இருந்த பொது இதெல்லாம் தோன்றவில்லை. காய்கறிகள் வெளியில் இருந்து வாங்கி வந்து வீட்டில் சமையல் எய்தாள் அது மேக் இன் ஹவுஸ் தானே., வீடு அமையல்தானெ .அப்படிதான் தேவையானவரை வெளி நாடுகளில் ருந்து பெற்று இறுதி உருவம் கொடுத்து சந்தைக்கு இந்திய தொழிற்சாலை கொண்டு வந்தால் , மேக் இன் இந்தியா ஹான்.தானே .


சமீபத்திய செய்தி