ஒரே நாளில் அடுத்தடுத்து 3 முறை குலுங்கிய மணிப்பூர்; மக்கள் அச்சம்
இம்பால்: மணிப்பூரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்.மணிப்பூரில் சுரச்சந்தன்புர் பகுதியில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக நிலநடுக்கம் உணரப்பட்டது. பின்னர் மீண்டும் 2.5 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது. அடுத்தடுத்து 2 முறை நில அதிர்வுகள் உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறி உள்ளனர். நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதி அடைந்த நிலையில் காலை 10 மணி அளவில் நோனி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 3.9 ஆக பதிவானது.ஒரே நாளில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை தேசிய நிலநடுக்கவியல் மையம் உறுதிப்படுத்தி உள்ளது. அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.