உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருச்சூர் ஏடிஎம் கொள்ளை: ஆற்றில் இருந்து ஆதாரங்கள் சேகரிப்பு

திருச்சூர் ஏடிஎம் கொள்ளை: ஆற்றில் இருந்து ஆதாரங்கள் சேகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: திருச்சூரில் ஏ.டி.எம்.,களில் கொள்ளையில் முக்கிய ஆதாரங்களை கொள்ளையர்கள் ஆற்றில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை போலீசார், ஸ்கூபா குழுவினர் உதவியுடன் சேகரித்து வருகின்றனர்.கேரள மாநிலம் திருச்சூரில் செப்., 27 ல் இரண்டு இடங்களில், 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' வங்கிக்கு சொந்தமான மூன்று ஏ.டி.எம்.,களை, 'காஸ் வெல்டிங்' மூலம் உடைத்து, 66 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து, தமிழகத்திற்கு காரில் கொள்ளையர்கள் தப்பினர். இந்த தகவலை கேரள போலீசார், தமிழக போலீசாருக்கு தெரிவித்து உஷார்படுத்தினர்.கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்ட போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்; தடுப்புகள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். கொள்ளையர்கள் ஓட்டிச்சென்ற கன்டெய்னர் லாரி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் செல்வதை கண்டறிந்தனர்.இதையடுத்து, அந்த லாரியை துரத்திச் சென்ற போலீசார், நாமக்கல் வெப்படை அருகே காட்டுப் பகுதியில் கன்டெய்னர் லாரியை மடக்கினர். அப்போது, கொள்ளையர்கள் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்றனர். இதனையடுத்து, போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ஜமாலுதீன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அசார் அலி என்பவர் இரு காலிலும் குண்டு பாய்ந்தது. அவர்களிடம் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கொள்ளையர்கள் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. தமிழக போலீசார் கைது செய்த இர்பான், சபீர்கான், சவுகீன் கான், முகமது இக்ரம், மற்றும் முபாரக் ஆகியோரை கேரள போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். ஆதாரங்களை சேகரிப்பதற்காக கொள்ளையர்களை கேரள போலீசார் குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்றனர். கொள்ளை நடந்த 3 ஏ.டி.எம்.,களில் உள்ள பணம் வைக்கும் 12 டிரேக்கள் உள்ளிட்ட முக்கியமான ஆதாரங்களை தாணிக்குடம் ஆற்றில் வீசியதாக கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதனையடுத்து போலீசாரின் ஸ்கூபா குழுவினர், தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் ஆற்றில் அதனை தேட துவங்கினர். அதில், பணம் வைக்கும் 9 டிரேக்கள், 2 கேஸ் கட்டர்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை அவர்கள் எடுத்தனர். மேலும் கொள்ளை நடந்த இடங்களில் அறிவியல்பூர்வமான விசாரணயையும் போலீசார் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

kalyanasundaram
அக் 07, 2024 16:06

THIEFS ARE VERY SAFE IN THE HANDS OF POLICE. PAPPU AND GROUP WILL SAVE THEM THROUGH POLITICAL TREATMENT BECAUSE THEY ARE MINORITY GROUPS. COURT WILL RELEASE THEM AFTER A PERIOD OF MAY BE AROUND FIVE MONTHS FOR WANT OF EVEDENCE. IN THE MEAN TIME LAYERS .POLICE ETC ETC WILL LOOT LOTS OF MONEY. THESE THIEFS WILL HAVE ROYAL TREATMENT .


Lion Drsekar
அக் 07, 2024 09:10

எல்லா விசாரணைக்குப் பிறகு இவர்கள் வெளியே வரத்தான் போகிறார்கள், மீண்டும் இதைவிட மிகப்பெரிய கொள்ளையினுள் ஈடுபடத்தான் போகிறார்கள் , அடுத்த செய்தி, இவர்கள் இதுபோல் பல கொள்ளைகளில் இருக்கிறார்கள் இவர்கள் மீது பல்வேறு இடங்களில் பல வழக்குகள் இருக்கின்றன என்று, இதுதான் நாம் அன்றாடம் படிக்கும் செய்திகள், காரணம் ஹிரண்யாய நமஹ


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 07, 2024 06:11

அமைதிக்கு என்னகுறை இந்த திருநாட்டில். சோறு போட்ட நாட்டிற்கே எதிராக திருடித்தின்பது தான் உங்க கள்ளமார்கள் போடராசவில் போதனை செய்ததா ? இப்படியே செஞ்சிட்டு இருந்தீங்கன்னா கடுமையான விளைவுகளை சந்திக்கநேரிடும் உங்க ராவுலே வந்தாலும் பியூஸ் புடிங்கினது புடிங்கினதுதான் ... அப்புறம் ஒன்னும் செய்ய முடியாது


karupanasamy
அக் 07, 2024 04:08

இவனுங்க படிக்குற புத்தகத்தை எழுதிய கதையாசிரியரும் இதையேதான் அந்த காலத்துல செஞ்சாரு.


RAMAKRISHNAN NATESAN
அக் 07, 2024 00:06

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போதே மூர்க்க கும்பலை பாகிஸ்தான் அனுப்பி வைக்காதது பெருங்குற்றம் ..... .....


RAMAKRISHNAN NATESAN
அக் 06, 2024 23:52

ஒட்டுமொத்தமாக மூர்க்க கும்பல் ...... இங்கே வேணு கேட்டது நினைவுக்கு வருகிறது ..... வடமாநில கொள்ளையர்கள் என்றால் பாஜக அனுதாபிகள் வேறுவிதமாக கருத்திடுவார்கள் என்றார் ......


Ramesh Sargam
அக் 06, 2024 21:56

கொள்ளையர்கள் பெயரை கூர்ந்து கவனியுங்கள். இவர்கள் எல்லாம் அந்த அமைதி மார்க்கத்தினரை சேர்ந்தவர்கள். பாக்கிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து தப்பித்துவந்தவர்களாக கூட இருக்கலாம். இந்த மார்க்கத்தினர் இந்தியாவில் இருக்கும்வரை இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து நடக்கும். அடித்து விரட்ட வேண்டும். அல்லது என்கவுன்டர்.


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 06, 2024 21:27

திருட்டு தொழிலுக்கும் அமைதிக்கும் அதிசம்பந்தம் . பாருங்க கொசுத்தொல்லை நாராயணுக்கே முத்தாய்ப்பாய் கோவம் வருதுன்னா பாருங்க அடிலெய்டு புகழ் ஆட்கள் எப்படி தில்லாங்கடி வேலைசெஞ்சி அடிலைடுக்கே அல்வா கொடுத்து இருப்பார்கள் .இவிங்களை கொசுத்தொல்லையின் ஆணையின் படி முதுகுல கல்லுப்பு வெச்சு கோணிப்பையை மேல போட்டு உருட்டுக்கட்டயாலேயே மொத்துமொத்தனும் . அப்போதான் அடிலெய்டு புகழ் ஆட்களின் கொட்டம் அடங்கும் .


Raghavan
அக் 06, 2024 21:15

சுட்டதுதான் சுட்டீங்க ஒரேயடியாக எல்லோரையும் சுடவேண்டியதுதானே. இப்போ பாருங்க அனாவசியமா ஒரு 4000 அல்லது 8000 பக்கங்களுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவேண்டும். அதை கோர்ட் எல்லா குற்றவாளிகளுக்கு கொடுக்க பரிந்துரைக்கும். வழக்கு கடைசியில் போலீஸ் தரப்பில் குற்றம் சரியாக நிரூபிக்கப்படாததால் எல்லாரும் விடுதலை ஆவார்கள். இந்த தொல்லையெல்லாம் இல்லமால் ஒரேயடியாக எல்லோரையும் சுட்டு தீர்த்துக்கட்டியிருந்தால் எவ்வளவோ வேலைகள், பணம் எல்லாம் மிச்சமாகியிருக்கும்.


சாண்டில்யன்
அக் 06, 2024 22:35

பணத்தை பறி கொடுத்த SBI வங்கி கப் சிப் ஏனோ? அவர்களையும் கூண்டிலேற்ற வேண்டும்.தேர்தல் நிதி பத்திர ஊழல் விசாரணையில் உச்ச நீதி மன்றத்துக்கே போக்கு காட்டியவர்களாயிற்றே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை