உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எம்.பி.பி.எஸ்., சீட் எண்ணிக்கையில் நம்பர் ஒன் இடத்தை இழந்தது தமிழகம்!

எம்.பி.பி.எஸ்., சீட் எண்ணிக்கையில் நம்பர் ஒன் இடத்தை இழந்தது தமிழகம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இளங்கலை மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ்., சீட் எண்ணிக்கையில் முதல் இடத்தில் இருந்த தமிழகம், 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. முதல் இடத்தை கர்நாடகா பிடித்துள்ளது.இளங்கலை மருத்துவப் படிப்பு இடங்களை மத்திய அரசு அதிகரித்துள்ளது. அதன்படி 2023-24ம் கல்வி ஆண்டில் 1,08,940 இடங்கள் இருந்த நிலையில், 2024-25ம் கல்வி ஆண்டில் 118,137 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் பார்லிமென்டில் பேசுகையில் தெரிவித்தார்.இதில் 60,422 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 57,715 இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் இடம்பெற்றுள்ளன. அதிக இளங்கலை மருத்துவ படிப்பு இடங்களை கொண்ட மாநிலம் விவரம் பின்வருமாறு:கர்நாடகா- 12,545உத்தரபிரதேசம்- 12,425தமிழகம்- 12,050மஹாராஷ்டிரா- 11,845தெலுங்கானா- 9,040குஜராத்- 7,250ராஜஸ்தான்- 6,475ஆந்திரபிரதேசம்- 6,785மேற்குவங்கம்- 5,475கேரளா- 4,905மருத்துவ படிப்பு சீட் எண்ணிக்கையில் கடந்த 2023-24ம் கல்வி ஆண்டில் முதல் இடத்தில் இருந்த தமிழகம் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையாக பார்த்தால் உத்தரப் பிரதேசம் 86, மகாராஷ்டிரா 80, தமிழகம் 77, கர்நாடகா 73, தெலங்கானா 65 எனப் பெற்றுள்ளன. அந்தமான் நிகோபார், அருணாசலப் பிரதேசம், சண்டிகர், தாத்ரா நாகர் ஹவேலி, கோவா, மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மருத்துவக் கல்லூரி உள்ளது.தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் புதிய கல்லூரிகள் தொடங்க அனுமதி கோரி உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பது அரசின் கொள்கை. மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் கோரிக்கை வைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ்., இடங்கள் எண்ணிக்கை பொறுத்தவரை, 11 மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 எம்.பி.பி.எஸ்., இடங்களை அதிகரிக்க மருத்துவ கவுன்சிலுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கும் பட்சத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் கூடுதலாக 550 இடங்கள் தமிழகத்துக்கு கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

T.sthivinayagam
டிச 16, 2024 00:01

இதை தானே சிலர் எதிர்ப்பார்த்தார்கள்


panneer selvam
டிச 15, 2024 17:38

Do not write non sense without knowing what Swiss government did now . They have withdrawn MFN status from India since they consider India is no longer a developing country but its economy has reached a stage , that is not eligible to be called a developing country like Pakistan. So our products will not have any special concession while importing in Swiss. It is nothing to do with medical college .


தத்வமசி
டிச 15, 2024 16:30

விடியா அரசின் சாதனையை சொன்னவுடன் எந்த உபிசும் இங்கே கருத்து கூற வரவில்லை. ஓடி விட்டனர். இதையே அண்ணாமலை சொல்லியிருக்க வேண்டும். அனைத்து உபிசும் கதறு கதறு என்று கதறுவார்கள். அறிவாலயத்திற்கு நிறைய சிலவும் வைப்பார்கள்.


kantharvan
டிச 16, 2024 17:12

அது நீயே ???


பெரிய குத்தூசி
டிச 15, 2024 13:55

தமிழகத்தில் உள்ள 37 அரசு மருத்துவக்கல்லூரிகளில் இரண்டு அரசு மருத்துவ கல்லூரிகளில் மட்டுமே தலா 250 இடங்கள் உள்ளது. மற்ற அரசு மருத்துவ கல்லூரிகளில் தலா 100 மருத்துவ மாணவர் இடங்கள் மட்டுமே உள்ளது. கடந்த 2021 ம் ஆண்டு வரை இருந்த அதிமுக அரசு மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என மத்திய அரசின் ஒப்புதலோடு 100 மருத்துவ இடங்கள் கொண்ட புதிய மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தது. ஆனால் 2021ல் பதவியேற்ற விடியா மூஞ்சி திமுக அரசு 2021 க்கு பின் புதிய அரசு மருத்துவக்கல்லூரிகளை கொண்டுவர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் திமுக மந்திரிகள் மற்றும் திமுக MP க்கள் நடத்தும் தனியார் மருத்துவக் கல்லுரிகளுக்கு மட்டும் திமுக அரசு மாநில அளவில் அங்கீகாரம் வழங்கிய பின் மத்திய அரசு அங்கீகாரம் ஒவொரு வருடமும் தருகிறது. தமிழகத்தில் உள்ள 37 மருத்துவக்கல்லூரிகளில் 35 அரசு மருத்துவ கல்லூரிகளில் தலா 100 மருத்துவ படிப்பு இடங்கள் உள்ளதை ஏற்கனவே 2023 ல் மத்திய அரசு தமிழக திமுக அரசிடம் தலா 100 முதல் 150 இடங்கள் வரை அதிகரிக்க மருத்துவ கல்லூரி கட்டமைப்பை உருவாக்க உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இதுவரை வீடியா திமுக அரசு தனியார் மருத்துவ கல்லூரிகளையும், தனியார் deemed மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க மட்டுமே திமுக அரசு ஆதரவு தருகிறது.


பாமரன்
டிச 15, 2024 11:40

ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எத்தனை சீட்கள் இருக்குன்னு போட்டிருந்தா மற்ற மாநிலங்களில் உள்ள நிலைமை பல்லிளித்திருக்கும்...


Kumar Kumzi
டிச 15, 2024 14:31

சேற்றில் விழுந்தாலும் மீசையில் சேறு ஒட்டவில்லை அதை தானே சொல்லுற


Barakat Ali
டிச 15, 2024 11:23

உடம்பில் ரத்தத்தில், சதையில் இஞ்சா இருக்கணும்.. கூடவே ஹிந்தி தெரியாது போ என்கிற வாசகம் தாங்கிய பனியன் / டி ஷர்ட் அணிந்தால் மெடிக்கல் சீட் ..... இப்படி ஆரிய மத்திய அரசு அறிவிக்கணும் ....


ஆரூர் ரங்
டிச 15, 2024 11:10

குப்பை சாக்கடை போன்ற பொது சத்தம் சுகாதார வசதிகளை பெருக்காமல் மேலும் மேலும் மருத்துவர்களை உருவாக்குவது வீண். நோய் வரும் முன் தடுக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.


kantharvan
டிச 15, 2024 17:00

நன்று இன்றுதான் உங்க சாதிக்கு உள்ள அறிவோடு பேசி இருக்கீங்க? ஆனா தரமான மருத்துவர்கள் அதிக எண்ணிக்கையில் தேவை என்பது காலத்தின் கட்டாயம் .


GoK
டிச 15, 2024 10:20

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மருத்துவ கல்லூரிக்கு பின்னால், அரசு கல்லூரிகளைதவிர, ஒரு அரசியல்வாதி ...ஏதோ ஒரு கழகம் ...ஒரு ஒரு சீட்டும் ஏலம் ....இதை வைத்து மருத்துவ மனைகள். ஒரு டாக்டரின் பெயருக்கு பின்னால் வரும் படிப்பை காட்டும் எழுத்துகளுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை. இப்போது வேறு வேறு பெயரால் காப்பீட்டு திட்டங்களை வைத்து அந்த கல்லூரிகளை சார்ந்த மருத்துவ மனைகளுக்கு நிரந்தர வருமான வசதி. இப்போது முதியோருக்கு பிரதமர் அறிவித்த காப்பீட்டு திட்டத்திலும் மூக்கை நுழைத்து அதிலும் எப்படி சுருட்டலாம் என்று இங்கிருக்கும் நிதிகள் யோசனை. எங்கே போகிறாய் தமிழா, உனக்கு அறிவே வராதா


தத்வமசி
டிச 15, 2024 10:17

மத்திய அரசை எதிர்த்து செங்கலை தூக்கி அரசியல் செய்தால் அவர்கள் அவியலா செய்வார்கள் ? எடப்பாடி அரசின் போது பல மருத்துவக் கல்லூரிகள் துவக்கப்பட்டன. அதன் பிறகு எத்தனை மருத்துவக் கல்லூரிகள் விடியல் ஆட்சியில் துவக்கப் பட்டன? மக்களுக்கு தேவையானவற்றை பெருவதக்கு மத்திய மந்திரியை சந்திப்பதில்லை, கடிதம் எழுதி அரசியல் செய்ய வேண்டியது. ஆனால் மனைவியை தூது அனுப்பி தங்களின் காரியத்தை சாதித்துக் கொள்வது. இது தான் விடியா அரசு.


Mario
டிச 15, 2024 09:51

விருப்ப நாடுகள் லிஸ்டிலிருந்து இந்தியாவை தூக்கிய சுவிட்சர்லாந்து


nagendhiran
டிச 15, 2024 10:55

அதனால சாமானியனுக்கு ஒரு மன பாதிப்பும் இல்லை?


Pats, Kongunadu, Bharat, Hindustan
டிச 15, 2024 11:27

நெஸ்லே என்ற நெதர்லாந்து நிறுவனம் ஆண்டுதோறும் இந்தியாவில் கிடைக்கும் லாபத்தில் 10 சதவிகிதத்தை வரியின்றி அவர்கள் நாட்டிற்கு கொண்டு செல்ல முயன்றதை உச்ச நீதி மன்றம் தடுத்து, 5 சதவிகிதமாக 2020-ம் ஆண்டு குறைந்துவிட்டது. இதனால் அந்த நாட்டுக்கு கோபம். இதற்கும் பாஜக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வழக்கு நெஸ்லேவிற்கும் இந்திய வருமானவரித் துறைக்கும் இடையே நடந்து வருமானவரித்துறை வெற்றிபெற்றது என்பது செய்தி.


Kumar Kumzi
டிச 15, 2024 14:38

ஐயோ பாவம் சோத்துக்கு மதம் மாறியவன் இனி இந்திய மண்ணில் வெக்கம் இல்லாம இந்தியாவின் சாதத்தை சாப்பிடுவா


ghee
டிச 15, 2024 15:06

அய்யோ ஸ்விஸ் பாங்கில் நீ வசிருகும் திருட்டு பணம் அவ்ளோதான் மணிப்பூர் மரியோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை