உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி.,யில் ரயி்ல் விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

உ.பி.,யில் ரயி்ல் விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

ஷாஜஹான்பூர்: உ.பி.,யில் ரயில் மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியாயினர்.இச்சம்பவம் குறித்து லக்கிம்பூர் மாவட்ட எஸ்.பி.திவேதி கூறியதாவது:லக்கிம்பூர் மாவட்டம் வங்கா கிராமத்தை சேர்ந்த தம்பதி சேத்பால் மற்றும் பூஜா. இவர்களது 4 மற்றும் 6 வயது குழந்தைகளுடன் அருகில் உள்ள நிகோஹி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் வங்கா கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தனர் . அப்போது லக்னோவில் இருந்து வந்து கொண்டிருந்த பயணிகள் ரயில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இச்சம்பவத்தில் சேத்பால் குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர் என மொத்தம் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இவ்வாறு எஸ்.பி.,கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ