உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாதுகாப்பு அனுமதி ரத்து செய்ததை எதிர்த்து துருக்கி நிறுவனம் வழக்கு: ஐகோர்ட்டில் மத்திய அரசு கடும் எதிர்ப்பு

பாதுகாப்பு அனுமதி ரத்து செய்ததை எதிர்த்து துருக்கி நிறுவனம் வழக்கு: ஐகோர்ட்டில் மத்திய அரசு கடும் எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகத்தின் பாதுகாப்பு அனுமதியை, ரத்து செய்த முடிவை எதிர்த்து துருக்கியின் 'ஸெலெபி ஏவியேஷன்' நிறுவனம் டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவிற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு, நம் பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தபோது, பாக்.,குக்கு ஆதரவாக, ட்ரோன்கள் மற்றும் அவற்றை இயக்குவதற்கான ஆட்களை, மேற்கு ஆசிய நாடான துருக்கி வழங்கியது. பாக்., ஆதரவு நிலைப்பாட்டால், அந்த நாட்டுடன் அனைத்து உறவுகளையும் நம் நாடு துண்டித்து வருகிறது.அதன்படி, துருக்கியின் 'ஸெலெபி ஏவியேஷன்' நிறுவனத்துடனான அனைத்து ஒப்பந்தங்களையும், நம் சிவில் விமான போக்குவரத்து துறையின், 'சிவில் விமான பாதுகாப்பு பணியகம்' அதிரடியாக ரத்து செய்தது.இந்தியாவில் ஒன்பது விமான நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் பயணியர் சேவை பணி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை, சட்ட ரீதியாக எதிர்கொள்ளப் போவதாக, துருக்கியின் ஸெலெபி ஏவியேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.பாதுகாப்பு அனுமதியை, ரத்து செய்த முடிவை எதிர்த்து துருக்கியின்'ஸெலெபி ஏவியேஷன்' நிறுவனம் டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவிற்கு, மத்திய அரசு கடும் ஆட்சேபனை தெரிவித்தது. நீதிபதி சச்சின் தத்தா முன் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 'தேசிய பாதுகாப்பு நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது' என்று வாதிட்டார். இதையடுத்து வழக்கு மீதான விசாரணையை மே 21ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Tamilnews
மே 20, 2025 04:31

கபில் சிபல் மற்றும் முகீல் அந்த கம்பெனிக்காக வாதாடினாலும் ஆச்சிரியம் இல்லை ...


Sivakumar
மே 20, 2025 04:20

துருக்கி நிறுவனத்தின் சார்பாக ஆஜரான வக்கீல் Mukul Rohatgi பத்தி யாருமே எதுவுமே பேசலையே ? தப்பி தவறி அபிஷேக் சிங்வி இல்ல கபில் சிபல் இல்ல வில்சன் ஆஜராயிருக்கணும், இன்னிக்கி ஒரு 250 பதிவு போட்டிருப்பாங்க . இப்போ மோடிஜி யின் முன்னாள் அட்டர்னி-General Rohatgi Rohatgi துருக்கி நிறுவனத்திற்கு ஆதரவாக ஆஜர் ஆனதால் பேச்சு மூச்சி இல்ல. ஹ்ம்ம் இது தான் தனிமனித ஊழல் . தனக்கு பிடித்தவர்கள் செய்தால் அது என்னவானாலும் குற்றமே இல்லை .


Kasimani Baskaran
மே 20, 2025 04:01

இதெல்லாம் எப்படி உடனே விசாரிக்கும் மனுவாகும்? பஞ்சாயர்த்தார்கள் மனு விசாரிப்பதில் பாரபட்சம் காட்டுவதாக தெரிகிறது.


RAJ
மே 19, 2025 23:32

எந்த வக்கீலும் இந்த கேஸ்ல ஆஜர் ஆகமாட்டார். அப்படியும் ஆகிட்டா... அவன் பேர் என்னனு மக்கள் சொல்வார்கள்.. .. முதல இந்த கேசை ரெஜிஸ்டர் பண்ணவனை பிதுக்கணும்.. .


M Ramachandran
மே 19, 2025 23:28

நம் முதுகில் குத்தும் துரோகியை அதுவும் துருக்கி பாக்கியஸ்தன் தன சகோதரன் என்று பகிரங்கமாக கூறிய பின் நம் எதிரி நாட்டுடன் நட்பு பாராட்டி ஆயுதங்கள் வழங்கியவனை நட்பு நாடாக எப்படி ஏற்று கொள்ள முடியும் அடித்து விரட்ட வேண்டும். நீதி மன்றம் அவன் தலையில் குட்டி விரட்ட வேண்டும் .ஒட்டு பிச்சை எடுக்கும் நம் நாட்டு துரோகியையும் திரு மா தீய முகா இந்த கும்பலிய்ய மக்கள் அரசிலிருந்து விரட்ட வேண்டும். .


Jothibasu Nagamalai
மே 19, 2025 22:45

நமக்கு உண்மையிலேயே உச்ச நீதிமன்றம் தேவையா, தேசியத்தைப் பாதுகாப்பதற்கான சமீபத்திய தீர்ப்பை அவர்கள் எதிர்க்கிறார்கள், மத்திய அரசின் முடிவை அவர்கள் புறக்கணிக்கிறார்கள்?


Ganapathy
மே 19, 2025 22:18

கோடிகளில் குடிமக்களின் வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. இந்த வழக்குதான் கிடச்சுதா விசாரிக்க? துருக்கியின் முதுகெலுப்பை மீண்டும் எழாவண்ணம் ஒடிக்கவேண்டும். இந்தவழக்கை தள்ளுபடி செய்து வழக்கின் செலவை துருக்கி நிறுவனத்திடமிருந்து வசூலிக்கவும்.


Ganapathy
மே 19, 2025 22:13

கோர்ட் இந்த வழக்கை விசாரிக்க எடுத்ததே நமது ராணுவத்தை இழிவுபடுத்தும் செயலாகும். நீதித்துறை அயல்நாட்டு தேசத்துரோகிகளின் வழக்குகளை எடுத்து வாதாடுவதற்கு நாம் எதற்க்கு நமது வரியை செலவிட வேண்டும்? நீதித்துறை இடதுசாரிகளின் கூடாரமாகி நமது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது.


GMM
மே 19, 2025 21:57

டெல்லி நீதிபதி போன்ற எந்த நீதிபதி அதிகார வரம்பிலும் மத்திய அரசு மற்றும் பிற நாட்டு நிறுவன வழக்கு மனு வருமா ? வராதா? என்று முடிவு செய்த பின் தான் நீதி மன்ற நடவடிக்கை. விதி இல்லாமல் விசாரணைக்கு எடுப்பது, தள்ளி வைத்து தன் அதிகாரத்தை காட்ட நினைப்பது தவறு. மத்திய அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆவது தவறு. நீதிமன்ற அரசு அதிகாரிகளிடம் ஆட்சேபனை தெரிவித்து, நீதிபதியின் அதிகார வரம்பில் வரும் மற்றும் விதி எண் அனுமதிக்கிறது என்ற விவரம் பெற வேண்டும். அதன் பின் வழக்கில் ஆஜர் ஆவது தான் முறை. நிறுவனம் வெற்றி பெற தன் நாட்டு நீதிமன்றம், சர்வதேச நீதிமன்றம் அளவில் மனு செய்யும். விதியின் படி அவைகள் தள்ளுபடிக்கு உட்பட்டவை.


Ravi Manickam
மே 19, 2025 21:43

மிக்க சிறப்பு, இருக்கும் மொத்த கூட்டத்தையும் அடித்து விரட்டுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை