உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெருநாய்க்கடி: தேசிய பாரா விளையாட்டு வீரர் உள்பட இருவர் பலி

தெருநாய்க்கடி: தேசிய பாரா விளையாட்டு வீரர் உள்பட இருவர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்: ஒடிசாவில் தெருநாய் கடித்து பாதிப்புக்குள்ளான தேசிய பாரா விளையாட்டு வீரர் உள்பட இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெருநாய் தொல்லை விவகாரம் தற்போது தேசிய அளவில் பெரிய பிரச்னையாகியுள்ளது. உச்சநீதிமன்றமே இது தொடர்பான வழக்கை எடுத்து விசாரித்து வருகிறது. இப்படியிருக்கையில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், கடந்த ஜூலை 23ம் தேதி ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் 6 பேர் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டனர். இதில், தேசிய ப்லோர் பால் பாரா விளையாட்டு வீரர் ஜோகேந்திரா சத்ரியா,33, என்பவரின் முகத்தில் தெருநாய் கடித்து குதறியது. இதில் பலத்த காயமடைந்த ஜோகேந்திர சத்ரியா மற்றும் 48 வயதான ஹிருகேஷ் ரானா என்பவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது குறித்து மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், 'பாதிக்கப்பட்ட இருவரும் தெருநாய் கடித்த பிறகு தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டனர். இருப்பினும், சத்ரியாவின் காயங்களின் தீவிரம் மற்றும் காயம் ஏற்பட்டுள்ள இடம் காரணமாக தொற்று வேகமாக பரவியது,' எனக் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

தாமரை மலர்கிறது
ஆக 14, 2025 19:20

சமீபத்தில் உலகிலேயே அதிக வயதான இந்திய மாரத்தான் விளையாட்டு வீரர் கார் விபத்தில் இந்தியாவில் இறந்தார். கார் விபத்தில் இருபத்தைந்தாயிரம் பேர் தினந்தோறும் சாகிறார்கள். சரியான ரோடு போடாத ஊழல் அரசியல்வாதிகளிடம் காட்ட முடியாத வீரத்தை, வாயில்லா பைராவாவிடம் காட்ட முயற்சிப்பது ஏன்? அன்பான ஜீவன்களை ஜெயிலில் அடைத்து கொல்ல நினைப்பது, குரூரத்தின் உச்சக்கட்டம். நாய்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்யும் பணத்தை ஆட்டையைபோடும் சக மனிதர்களான நகராட்சி ஊழியர்களை கண்டிக்க முடியாதவர்கள், நாய்களை சித்ரவதை செய்ய நினைக்க கூடாது. மனிதன் செய்யும் தவறுக்கு நாய்கள் பலியாவது கொடூரம்.


Raja
ஆக 14, 2025 21:11

உன்னோட மனைவியையோ, உன் புள்ளைகளையோ இந்த மாதிரி நாய் கடித்தால், இப்படி எழுதுவாயா? வாயில்லா ஜீவன் என்கிறாயே... ஆடு, மாடு, கோழி எல்லாம் கொன்னு தின்கிறாயே அதெல்லாம் வாயில்லா ஜீவன் இல்லையா? எல்லா தெருநாய்களையும் உன்னோட வீட்ல விடனும்


V RAMASWAMY
ஆக 14, 2025 15:28

In countries where stray dogs are increasing in population uncontrollably and are becoming a serious menace causing serious situation to humans, Animal Protection Acts should undergo drastic changes to enable take appropriate action on these wild creatures so that even pet lovers should think twice before keeping pets in their houses flats inclusive.


theruvasagan
ஆக 14, 2025 14:54

பறவைக் காய்ச்சலால் கோழிகளை கொல்லுவதை பற்றி ஒருத்தனும் கேள்வி கேக்கறதில்லை. நாய் மாடு என்றால் மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு வந்துவிடுகிறார்கள். பரிந்து பேசுகிற யோக்கியன்கள் அந்த நாய்களை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.


raja
ஆக 14, 2025 14:16

இப்போ தெரு நாய்க்கு வக்காலத்து வாங்கி அறிக்கை விட்ட ராகுல் காந்தி இதுக்கு என்ன செய்ய போறாரு... பப்புவுக்கு என்ன கொள்ளை அடித்து சேர்த்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு காரில் போயி வந்து கொண்டு இருப்பதால் தெரு நாய் கடி என்னவென்றால் தெரியாது... அப்படியே தெருவில் நடந்தாலும் பப்புவை சுற்றிலும் வாலாட்டும் நாய்கள் பல இருப்பதால் இதுபோன்ற கடிக்கும் நாய்கள் பப்பு பக்கமே போவாது


கனோஜ் ஆங்ரே
ஆக 14, 2025 13:29

வெறிபிடித்து கடிக்கும் தெரு நாய்களை கொல்வதுதான் ஒரே தீர்வு... இதற்கு எதிராக “பீட்டா” வந்தா... அவன்கள இந்த தெருநாய்களை விட்டு கடிச்சு குதறவிடணும்...? தெருநாய்க்கெல்லாம் ஒரு பஞ்சாயத்தா...? இந்திய நாட்டில் சோத்துக்கே மனுஷன் அல்லாடுறப்ப... இதில் நாய்களை பாவம் பார்ப்பது தவறு...? உச்ச நீதிமன்ற அமர்வு உடனடியாக தெருநாய்களை கொல்ல உத்தரவிடணும்... எவன்னா, அந்த உத்தரவுக்கு தடை கேட்டு வந்தா... அவனையும் பிடிச்சு ஜெயில்ல போடணும்...


ரங்ஸ்
ஆக 14, 2025 13:18

கொடுமை. தெருநாய்கள் ஒன்று கூடி பல நாய்கள் துரத்தும்போது துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடி இடறி விழுந்து நாய்க்கடி பட்டு ஊசி போட்டு ரணம் ஆறும் வரை வேலைக்கு செல்ல முடியாமல் இருப்பது நாய் ஆர்வலர்களுக்கு நடந்தால் அதன் பாதிப்பு தெரிய வரும். சிறு குழந்தைகளை கடித்தால் மரணம் நேர வாய்ப்பு அதிகம். விரைவில் தீர்வு காண வேண்டியது அவசியம்.


Rameshmoorthy
ஆக 14, 2025 13:17

Where is Mr Rahul and Ms Menaka Sanjay? And BETA association, this dog issues to be handled quickly.


Ramesh Sargam
ஆக 14, 2025 13:14

தெருநாய்களை பரிந்துபேசும் அந்த குழுவினர் எங்கே? இறந்து போன அந்த வீரர்கள் குடும்பத்துக்கு என்ன பதில் அவர்கள் இடம் இருந்து?