வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சரி சார் ...படுகஷ்டப்பட்டு கண்டுபிடிச்சுட்டீங்க... அடுத்து உங்க டக்கு?
போலி பல்கலைக்கழகம் போலி மருத்துவர் போலி சிபிஐ அதிகாரி போலி போலீஸ் போலி சுங்க கட்டணம் போலி சாமியார் போலி கஸ்டம்ஸ் போலி வக்கில் அரசும் அரசியல் வியாதிகள் மட்டுமே உண்மை ஏன் என்றால் இந்த ரெண்டும் மக்களை சுரண்டுவதற்கு
செய்தி குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. இவ்வளவு போலி பல்கலைக்கழகங்களா? பட்டியல் வருகின்றது. மூடப்படவில்லை. UGC நெறிமுறைகள் பின்பற்றப் படுவதில்லையா ? என்னதான் நடக்கிறது ? மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விரிவான பதில் அளிப்பது நல்லது.
எழுபதுகளில் டெல்லியில் கமர்ஷியல் யுனிவர்சிட்டி என்ற ஒரு பல்கலைக்கழகம் இருந்தது .அதனிடம் அனுமதி வாங்கி தூத்துக்குடி மாவட்டம் கீழ் அருணாசலபுரம்கிராமத்தில் ஒருவர் டுடோரியல் கல்லூரி நடத்திவந்தார்.அவரிடம் நிறையபேர் பணம் கட்டி அங்கேயே புத்தகம் பார்த்து பரிட்சை எழுதி பட்டம் வாங்கினார்கள்.என் அண்ணாவின் நண்பர் அவர் எங்கள் வீட்டுக்கு வருவார் என்னையும் பிகாம் பரிட்சை எழுத சொன்னார் .ஒரேநாளில் அந்த ஊருக்கு சென்று பரிட்சை எழுதினேன் பல ஊர்களில் இருந்து வந்து தேர்வு எழுதினார்கள் .பறகு தேர்ச்சி யடைந்த தாக சொன்னார் 2000 ரூபாய் கொடுத்தால் பட்டம் நான் வாங்கவில்லை . அவர் 80 நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டார் விளம்பரத்துக்காக .அந்த பட்டம் வைத்து தமிழக அரசு வேலையும் பலர் வாங்கினார்கள்..பிறகு மத்திய அரசு அந்த யுனிவர்சிட்டி அங்கீகாரமற்றது பட்டங்கள் செல்லாது என்று அறிவித்தது
போலி என்று தெரிந்தும், ஏன் அவற்றை இழுத்து மூடவில்லை? பூனைக்கு யார் மணி கட்டுவது என்கிற நிலையா? பல்கலைக்கழக மானியக்குழு யுஜிசி ஏன் அதை செய்யக்கூடாது அல்லது அவர்களுக்கு அதிகாரம் இல்லையென்றால் மத்திய அரசிடம் அல்லது உச்சநீதிமன்றத்திடம் முறையிட்டு அந்த போலி பல்கலைகழகங்களை இழுத்து மூடலாமே எனக்கு தெரிந்து அவைகள் எல்லாம் ஊழல் அரசியல்வாதிகள் அல்லது அரசியல் ஆதரவுடையவர்கள் நடத்தும் பல்கலைக்கழகங்களாக இருக்கும். அவைகளை இழுத்துமூட சம்பந்தப்பட்ட துறையினர் அல்லது அதிகாரிகள் காலம் தாழ்த்தாமல் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும், மாணவர்கள் வாழ்க்கை மேல் அக்கறைகொண்டு.
போலினு பட்டியல் வெளியிட்டால் போதுமா? அந்த நிறுவனைத்தை மூடிவிட்டு, சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டியது தானே. இதற்கு எதற்கு யூஜிசி? இதையும் இழுத்து முட வேண்டும்
இளம் மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள்.
வெட்கமாக இருக்கிறது இந்த மாதிரி செய்திகள் பார்க்க! எல்லாம் போலி இந்த நாட்டில்! கேட்க நாதியில்லை!