உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கிகளில் கோரப்படாத வைப்புத்தொகை ரூ.67,003 கோடி

வங்கிகளில் கோரப்படாத வைப்புத்தொகை ரூ.67,003 கோடி

புதுடில்லி: ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, வங்கிகளில் கோரப்படாத வைப்புத்தொகை 67,003 கோடி ரூபாய் உள்ளது என லோக்சபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து லோக்சபாவில், மத்திய நிதி இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியதாவது: ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, கடந்த ஜூன் 30 நிலவரப்படி, பொதுத் துறை வங்கிகளில், 58,330.26 கோடி ரூபாய் உரிமை கோரப்படாத வைப்புத்தொகை உள்ளது. தனியார் வங்கிகளில், 8,673.72 கோடி ரூபாய் உள்ளது. பொதுத் துறை வங்கிகளில், எஸ்.பி.ஐ.,யில் அதிகபட்சமாக, 19,329.92 கோடி ரூபாய் உரிமை கோரப்படாத வைப்புத்தொகை உள்ளது. இதற்கான அணுகலை மேம்படுத்தவும், தேடல் செயல்முறையை எளிதாக்கவும், பிரத்யேக இணையதளத்தை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Anand
ஜூலை 29, 2025 22:41

67000 divided by 144, every citizen will get 465 crores, India will become richest country


Tiruchanur
ஜூலை 29, 2025 17:44

பத்திரிகை, முக்கிய டிவி களில் யார் பெயரில் அந்த வைப்பு தொகைகள் உள்ளனவோ அவர்களின் பெயர்களை விளம்பர படுத்தினால் அவர்களின் வாரிசுகள் யாராவது பார்த்து பயன் பெறலாம்


A.Gomathinayagam
ஜூலை 29, 2025 14:10

வாரிசுகளுக்குள் ஒற்றுமை இல்லாது ஒரு காரணம் . தற்பொழுது மகளிருக்கும் சொத்து உரிமை மேலும் சிக்கலாகிவிட்டது


Ramesh Sargam
ஜூலை 29, 2025 12:56

தற்சமயம் அந்த தொகையை நாட்டு நலனுக்கு பயன்படுத்தலாம்.


திகழ்ஓவியன்
ஜூலை 29, 2025 11:15

மோடியிடம் தெரிவித்தால் வாராக்கடனுக்கு உபயோகித்து கொள்ளுவார்


Chan
ஜூலை 29, 2025 16:49

ஸ்டாலினிடம் சொன்னால் தன் குடும்பத்தின் பணமாக எடுத்துக்கொள்வார்


தத்வமசி
ஜூலை 29, 2025 10:12

லோன் வழங்கும் போது இரண்டாவது நபரையும் கட்டாயம் மறக்காமல் அவர்களிடம் இருந்து ஆதார் கார்டு முதல் அவர்களிடம் உள்ள வீடு, நிலம், நகைகள், இன்சுரன்ஸ் போன்ற விபரங்களை கட்டாயம் சேர்த்து, பக்கத்திலேயே அமர்ந்து, ஒவ்வொரு பக்கமாக புரட்டி புரட்டி கையெழுத்து வாங்கும் வங்கி அதிகாரிகள், டிபாசிட் செய்யும் போது பணத்தை முதலீடு செய்பவர்களிடம் நாமினேஷன் கூட வாங்குவார்களா என்று கேளுங்கள். கேட்க மாட்டார்கள். மறந்தும் கூறவும் மாட்டார்கள். அப்போது தான் அவர்களுக்கு வேறு வேலை வந்து விடும். விண்ணப்ப படிவத்தை கையில் திணித்து விட்டு நிரப்புங்கள் என்று கூறி விட்டு எழுந்து போய் விடுவார்கள். நாமினேஷன் பற்றி எதுவும் பேச மாட்டார்கள். அப்படியே நாமினேஷன் போட்டிருந்தால் அது சில மாதங்களில் மறைந்து விடும். இதற்கெல்லாம் அவர்கள் சம்பளம் வாங்க வில்லை. வேலை தெரியாது. வாய் மட்டும் நீளும். டெபாசிட் செய்யும் போதே நாமிநேஷன் கட்டாயம் என்று ஏன் ரிசர்வ் வங்கி இன்னும் கூறாமல் இருக்கிறது ? நாமினேஷன் இல்லாத டிபாசிட்டுக்களை ரிசர்வ் வங்கிகள் அங்கீகரிக்கக் கூடாது.


ஆரூர் ரங்
ஜூலை 29, 2025 11:56

வாரிசுதாரர் நியமனம் இப்போது கட்டாயம். அப்படி நியமிக்க மனமில்லை என்றால் அதையாவது குறிப்பிட வேண்டியது கட்டாயம். விண்ணப்பப் படிவங்களை படிக்காமல் டெபாஸிட் போட்டேன் என யாரும் கூற முடியாது.


தத்வமசி
ஜூலை 29, 2025 09:37

ஒருவர் கடன் வாங்கி அந்த தேதியில் கட்டாமல் போனால் வங்கிகள் என்னென்ன நடவடிக்கை எடுக்கும் ? இப்போது வாங்கி முடிந்து கொண்டு அப்படியே அமைதியாக இருப்பதன் காரணம் என்ன ? இவ்வளவு ரூபாய் கடன் இருந்தால் வங்கிகள் இப்படித்தான் அமைதியாக செய்தி போடுவார்களா ? இல்லை வழக்கு தொடருவார்களா ?? இல்லை ஆள் அனுப்பி வசூல் செய்வார்கள் ? திரும்ப செலுத்தும் போது மட்டும் அரசு சார்ந்த மற்றும் தனியார் நிறுவனங்கள் ஓடி ஒளிந்து கொள்வதேன் ? இதை கேட்பதற்கு நீதிமன்றத்திற்கு நேரம் இல்லை.


ஆரூர் ரங்
ஜூலை 29, 2025 11:37

வைப்புத் தொகையை திரும்ப பெற முயற்சிக்காமல் விட்டது வாடிக்கையாளர்கள் தவறு.1. பல சந்தர்ப்பங்களில் நாமினி வாரிசு சான்றிதழ் உயில் போன்றவற்றை சமர்ப்பிக்க தவறுகிறார்கள். 2.பாகப்பிரிவினையில் வங்கிக் கணக்குகள் சிக்கிக் கொள்கின்றன. 3. சிலர் உறவினர்களுக்கு தெரியாமல் டெபாஸிட் போட்டுவிட்டு இறந்து விடுகின்றனர். 4 மேலும் சிலர் சிறிய அளவு சேவிங் கணக்குகளை சோம்பல்பட்டு அப்படியே விட்டு விடுகின்றனர். இதற்கெல்லாம் வங்கி ஒன்றும் செய்ய முடியாது.


Ramanujadasan
ஜூலை 29, 2025 09:20

அய்யயோ , திராவிடனுங்க இதை படிச்சாங்க அவ்வளவு தான் , அதையும் ஆட்டையை போட்டுடுவானுங்க


SANKAR
ஜூலை 29, 2025 10:05

nobody can touch it.it is transferred to respective Central offices under heading UNCLAIMED BALANCES.Not kept at Branch level.Only Central office can release on case to case basis after verification if a claim is made.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 29, 2025 08:50

ஆக வங்கிகளை மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் ...... மன்னர் அறிக்கை .....


புதிய வீடியோ