உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு வங்கியில் அப்ரென்டிஸ் வாய்ப்பு; பட்டதாரிகள் 500 பேருக்கு சான்ஸ்!

அரசு வங்கியில் அப்ரென்டிஸ் வாய்ப்பு; பட்டதாரிகள் 500 பேருக்கு சான்ஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் 500 அப்ரன்டிஸ் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க செப்டம்பர் 17ம் தேதி கடைசி நாள்.யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில், தொழில் பயிற்சி சட்டம் 1961ன் கீழ், 500 அப்ரன்டிஸ் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணியிடங்கள் எங்கே?

மொத்தம் உள்ள 500 அப்ரன்டிஸ் காலியிடங்களில் தமிழகத்தில் மட்டும் 55 பணியிடங்கள் உள்ளன. ஆந்திராவில் 50 இடங்களும், கேரளாவில் 22 இடங்களும், கர்நாடகாவில் 40 இடங்களும் உள்ளன.

கல்வி தகுதி என்ன?

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பிக்க, 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PwBD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

கட்டணம்

விண்ணப்ப கட்டணம் ரூ.944. எஸ்.சி., எஸ்.டி, பிரிவினருக்கு ரூ.708. PwBD பிரிவினருக்கு ரூ.472 விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படுவது எப்படி?

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். https://www.unionbankofindia.co.in/english/home.aspx என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை