உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எகிப்து நாட்டு தீ விபத்தை கும்பமேளா விபத்தாக காட்டுவதா? உ.பி., - டி.ஜி.பி., எச்சரிக்கை

எகிப்து நாட்டு தீ விபத்தை கும்பமேளா விபத்தாக காட்டுவதா? உ.பி., - டி.ஜி.பி., எச்சரிக்கை

லக்னோ, பிப். 15-உத்தர பிரதேசத்தில் நடந்து வரும் மஹா கும்பமேளா பற்றி தவறான செய்திகளை வெளியிட்டதாக, 53 சமூக ஊடகங்கள் மீது அம்மாநில போலீசார் நடவடிக்கை எடுத்துஉள்ளனர்.மஹா கும்பமேளாவில் இதுவரை, 50 கோடி பேர் புனித நீராடியுள்ளனர். இந்த நிகழ்வு குறித்து, பல ஆயிரம் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் சிறப்பாக செய்தி வெளியிட்டு வருகின்றன.

நடவடிக்கை

அதே நேரத்தில், தினமும் லட்சக்கணக்கான மக்கள் கூடும் இந்த நிகழ்வில், அசம்பாவிதங்கள் நிகழ்ந்ததாக, சமூக ஊடகங்களில் தவறான செய்திகள் வந்த வண்ணமாக உள்ளன.இதையடுத்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுரையின்படி, உ.பி., மாநில டி.ஜி.பி., பிரஷாந்த்குமார் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:கும்பமேளா நிகழ்வை வேண்டுமென்றே தவறாக சித்தரித்த, 53 சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், வேண்டுமென்றே தவறான செய்திகளை வெளியிட்ட அந்நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. எகிப்து நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தை, கும்பமேளா அரங்கில் நடந்தது போல காட்டிய சில சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நேபாள நாட்டில் நடந்த நெரிசலில் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச்செல்ல முடியாமல், ஆற்றில் வீசி செல்வது போன்ற காட்சிகளை காட்டி, கும்பமேளா பக்தர்களை அச்சமூட்டியுள்ளனர்.

விசாரணை

பீஹாரின் பாட்னா நகரில் நடந்த திரைப்பட விழாவில் அரங்கேறிய செருப்பு வீச்சு சம்பவத்தை, கும்பமேளாவில், ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்டது போல காட்டிய சமூக ஊடகங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இறந்தவர்களின் உடல்களில் இருந்த முக்கிய உறுப்புகள் அகற்றப்பட்டு, அந்த உடல்கள் ஆற்றில் வீசப்படுவது போன்ற காட்சிகளை வேண்டுமென்றே காட்டிய சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம்.எனவே, அந்த ஊடகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; சட்டப்படி தொடர்ந்து விசாரணையும் நடைபெறுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Thiyagarajan S
பிப் 19, 2025 07:01

இது போன்ற கேவலமான விஷயங்களை பைத்தியக்கார பப்பு வின் காங்கிரஸ் காரர்களும் சமாஜ்வாதி கட்சியினரும் தான் செய்வார்கள்..... அவர்களுக்கு சனாதன தர்மத்தின் மீதும் இந்த தேசத்தின் மீதும் எந்த விதமான அக்கறையும் இல்லை...


Tetra
பிப் 17, 2025 21:47

அமைதி மார்க்கத்தவன்கள்.


Rajasekar Jayaraman
பிப் 15, 2025 13:22

தமிழகத்திலும் நடைமுறை படுத்த கவர்னர் முயற்ச்சி செய்ய வேண்டும்.


veeramani
பிப் 15, 2025 09:33

அந்த ஊடகங்களை நிரந்தரமாக தடை செய்யிங்கள்


Sivaraman
பிப் 15, 2025 06:44

This confirms the earlier statement by a Central Minister calling them as p.titute is true.


Nandakumar Naidu.
பிப் 15, 2025 05:34

அவர்களுக்கு கடுமையான மரண தண்டனை விதிக்க வேண்டும். அப்போதுதான் திருந்துவார்கள்.


J.V. Iyer
பிப் 15, 2025 04:04

கேடுகெட்ட சமூகவிரோத ஊடகங்கள். இவர்கள்மீது மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை