உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார்

பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார்

மும்பை: வயது மூப்பு காரணமாக பழம்பெரும் ஹிந்தி நடிகரும், இயக்குநருமான மனோஜ் குமார் மும்பையில் இன்று காலமானார்.ஹிந்தி சினிமாவின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் மனோஜ் குமார், 87. இவர் கடந்த 1937ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி பிறந்தார். இவர் பெரும்பாலும் நாட்டுப்பற்று மிக்க படங்களில் நடித்தும், இயக்கியும் பிரபலமானவர். இவரை பரத் குமார் என்றும் அழைத்து வருகின்றனர். புராப் அவுர் பஸ்ஜிம், கிரான்டி, ரொட்டி, காபாடா அவுர் மாகான் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். 1992ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2015ல் சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் மத்திய அரசு வழங்கி கவுரவித்துள்ளது. பா.ஜ.,வில் இணைந்து அரசியலில் ஈடுபாடு காட்டி வந்த மனோஜ் குமார், வயது மூப்பு காரணமாக, பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை சந்தித்து வந்தார். இந்த நிலையில், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

vbs manian
ஏப் 04, 2025 10:39

வன்முறையும் ஆபாசமும் நிறைந்த பொலிவுட்டில் இந்தியா கலாச்சாரம் நாட்டுப்பற்று மனித நேயம் ஆகியவற்றுக்கு முதலிடம் கொடுத்து படங்கள் தயாரித்த அற்புத மனிதர்.