உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூருவில் நடுரோட்டில் அப்படியே கவிழ்ந்த தண்ணீர் லாரி; பகீர் கிளப்பிய வீடியோ

பெங்களூருவில் நடுரோட்டில் அப்படியே கவிழ்ந்த தண்ணீர் லாரி; பகீர் கிளப்பிய வீடியோ

பெங்களூரு: பெங்களூரு அருகே முந்திச் செல்ல முயன்ற போது நடுரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான வீடியோ வெளியாகி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு; வர்தூர் பகுதியில் இருந்து தொம்மசந்திராவுக்கு தண்ணீர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. தொம்மசந்திராவை அடைய இன்னும் 8 கிலோ மீட்டர் மட்டுமே இருந்தது. பரபரப்பான சாலையில் சென்று கொண்டிருந்த லாரி, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்தது. அசுர வேகத்தில் நிலைதடுமாறி முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு லாரியை இடது பக்கம் முந்திச் செல்ல முயன்றது. அடுத்த விநாடி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் தண்ணீர் நிரம்பி இருந்ததால், சாலையில் கொட்டி அந்த இடமே வெள்ளக்காடானது. விபத்தில் லாரி ஓட்டுநரும், உள்ளே இருந்த ஒருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்தின் காட்சிகள் முன்னால் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்றின் பின்னால் பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் தெளிவாக பதிவாகி இணையத்திலும் வைரலாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

நிக்கோல்தாம்சன்
ஏப் 15, 2025 21:56

டிகேசி அனுப்பிய நீர் லாரி போல


எம். ஆர்
ஏப் 15, 2025 17:24

தண்ணீர் லோடு டேங்க் முழுவதும் உள்ள வண்டி அவ்வளவு சீக்கிரம் குப்புற கவிழாது அதையும் மீறி கவிழ்ந்திருக்கிறதென்றால் அவன் எவ்வளவு வேகத்தில் வாகனத்தை ஓட்டியிருப்பான் பணத்தாசை யாரை விட்டது?? நான் 2014 வரை பெங்களூரில் வேலையில் இருந்தேன் நான் தங்கியிருந்த வீட்டின் எதிரில் ஒருவர் கையில் 3 தங்க பிரேஸ்லெட் கழுத்தில் 5 தங்க செயின் 10 விரலுக்கும் மோதிரம் அணிந்திருப்பார் தொப்பை அடுத்த வீட்டையே தொடும் வீட்டு வாடகை வருமானம் வேறு வாடகைக்கு 12 பேச்சிலர் ரூம்கள் மற்றும் 3 வீடுகள் இருந்தது வீட்டின் அருகிலேயே ஆழமான போர் போட்டு 5 வண்டிகளில் தண்ணீர் சப்ளை செய்யும் தொழில் பனியன் அரை டிரவுசருடன்தான் இருப்பார் வீட்டிலேயேதான் எப்போதும் இருப்பார் செம தொழில்


Ramesh Sargam
ஏப் 15, 2025 12:48

பெங்களூருவில் வெய்யிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், தண்ணீர் வேண்டி மக்கள் தண்ணீர் லாரிகளை வரவழைக்கின்றனர். தண்ணீர் லாரி ஓட்டுனர்கள் போட்டாபோட்டியில் இப்படி ஒருவரை ஒருவர் முந்தி சென்று பணம் சம்பாதிக்கப்பார்க்கின்றனர். விபத்து ஏற்படுகிறது.


சமீபத்திய செய்தி