உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛நிதீஷ்குமார் எங்களுக்கு தேவையில்லை: ராகுல்

‛நிதீஷ்குமார் எங்களுக்கு தேவையில்லை: ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: ‛‛ பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் எங்களுக்கு தேவையில்லை. அவர் நெருக்கடி காரணமாக அணி மாறி உள்ளார் '' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார். பீஹார் முதல்வர் நிதீஷ்குமார், காங்கிரஸ் கூட்டணியை முறித்துக் கொண்டு பதவியை ராஜினாமா செய்தார். பிறகு, பா.ஜ., ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையின் ஒரு பகுதியாக பீஹார் வந்துள்ள ராகுல், புரூனியா என்ற இடத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசும் போது நிதீஷ் அணி மாறியது குறித்து முதல்முறையாக கருத்து தெரிவித்தார்.அப்போது ராகுல் கூறியதாவது: நிதீஷ்குமார் அழுத்தம் காரணமாக பல்டி அடித்து கூட்டணி மாறி உள்ளார். ‛ மகாகட்பந்தன் ' கூட்டணி, மாநிலத்தில் சமூக நீதிக்காக போராடும். இந்த காரணத்திற்காக நிதீஷ்குமார் எங்களுக்கு தேவையில்லை. இனி அவர் எங்களுக்கு தேவையில்லை. இவ்வாறு ராகுல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

g.s,rajan
ஜன 31, 2024 11:31

பச்சோந்தி .....


ராஜா
ஜன 31, 2024 06:35

அந்த மக்களுக்கு நிதிஷ் யார் என்று கூட தெரியாது பாவம்.


தாமரை மலர்கிறது
ஜன 31, 2024 02:09

ராகுலின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்து தான், பிஜேபி அணிக்கு நிதிஷ் மீண்டும் வந்தார்.


g.s,rajan
ஜன 31, 2024 00:42

Chameleon....


Ramesh Sargam
ஜன 31, 2024 00:20

அங்கு கூடி இருக்கும் மக்களில் முக்கால்வாசி பேருக்கு ராகுல் என்ன உளறுகிறார், மன்னிக்கவும், என்ன பேசுகிறார் என்று புரிந்திருக்காது. இவன் எப்ப தன் உளறலை நிறுத்துவான், நமக்கு எப்ப பிரியாணி கொடுப்பார்கள் என்றுதான் அங்கு காத்து கிடக்கின்றனர்.


Jay
ஜன 30, 2024 21:58

நிதிஷ் குமார் விசயத்தில் பிஜேபி கவனமாக இருக்க வேண்டும். INDI கூட்டணிக்கு ஆப்பு வைத்தது போல் பிஜேபிக்கு கடைசி நேரத்தில் ஆப்பு வைக்கலாம். நிதிஷ் இதை ஒரு நாடகமாக நடத்தி INDI கூட்டணிக்கு வாய்ப்பு தேடலாம்.


ராஜா
ஜன 31, 2024 06:38

பாஜக வந்தால் அனைத்தையும் இழுத்து மூடிவிட வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். நிதிஷ் கட்சி MLA க்கள் பலர் பஜாக பக்கம் சாய்ந்ததே அவரின் இந்த மன மாற்றத்துக்கு காரணம்.


ஆரூர் ரங்
ஜன 30, 2024 20:07

யாரை நம்பி நான் பொறந்தேன்( எல்லோரும்) போங்கடா போங்க????. நானே நடுத்தெருவில் நின்றாலும் கவலையில்லை.


J.V. Iyer
ஜன 30, 2024 20:03

கொஞ்சமாவது இவருக்கு மண்டையில் ஏதாவது இருக்கிறதா?


vbs manian
ஜன 30, 2024 19:56

இந்த பழம் புளிக்கும்.


kk
ஜன 30, 2024 19:48

அது எல்லாம். ஜெயிக்க நினைக்கிறவங்க கவலை படணும். எங்களுக்கு அப்படி ஒண்ணே. இல்லையே ????????


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி