உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்ன சொல்கிறீர்கள்?: எதிர்கட்சியினருக்கு பா.ஜ., கேள்வி

என்ன சொல்கிறீர்கள்?: எதிர்கட்சியினருக்கு பா.ஜ., கேள்வி

பீஹாரில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், 'ஊடுருவல்காரர்களை வாக்காளர் ஆக்க விரும்புகிறீர்களா?' என, பா.ஜ., கேள்வி எழுப்பியுள்ளது. பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதையடுத்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக, 2003ல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்த நிலையில், 22 ஆண்டுகளுக்கு பின் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், 2 கோடிக்கும் அதிகமானோர் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ் சாட்டி வருகின்றன.

போராட்டம்

இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பீஹார் முழுதும் மஹாபந்தன் கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டன. இண்டி கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் பொதுச் செயலர் எம்.ஏ.பேபி உள்ளிட்டோர் தலைநகர் பாட்னாவில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றனர். மாவட்டம் வாரியாக நடந்த போராட்டங்களில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்-.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.பாட்னாவில் வருமான வரித் துறை அலுவலகத்தில் இருந்து தேர்தல் கமிஷன் அலுவலகம் உள்ள பகுதி வரை, எதிர்க்கட்சி தலைவர்கள் திறந்த வாகனத்தில் பேரணியாக சென்றனர். எதிர்க்கட்சிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து சட்டசபை வளாகம், தேர்தல் கமிஷன் வளாகம் மற்றும் பேரணி செல்லும் வழிகளில் உள்ள முக்கிய அலுவலகங்கள் முன் தடுப்புகள் போடப்பட்டன. தேர்தல் கமிஷனை முற்றுகையிட முயன்ற தலைவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு முட்டுக்கட்டை போடும் எதிர்க்கட்சிகளின் செயலை பா.ஜ., வன்மையாக கண்டித்து உள்ளது. இது குறித்து அக்கட்சி எம்.பி.,யும், மூத்த தலைவர்களில் ஒருவருமான ரவிசங்கர் பிரசாத் நேற்று டில்லியில் கூறியதாவது:போராட்டம் நடத்தும் எதிர்க்கட்சியினர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் கமிஷனுக்கு என்று அதிகாரப்பூர்வமான வாக்காளர் பட்டியல் இருக்கிறது. இந்த பட்டியலில் இடம்பெறுவதற்கு யாருக்கெல்லாம் தகுதிகள் இல்லையோ, அவர்களை எல்லாம், வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. இந்தியாவுக்குள் ஊடுருவிய நபர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள், ரோஹிங்யாக்களாக இருக்கலாம் அல்லது வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்கள் எல்லாம், தவறான வழிகளில், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முறைகேடான வழி

இவ்விஷயத்தில், தலைமைத் தேர்தல் கமிஷன் நியாயமான நடவடிக்கை எடுத்தால், எதிர்க்கட்சிகளாகிய உங்களுக்கு என்ன பிரச்னை? முறைகேடான வழிகளில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களின் தோள் மீது ஏறி அரசியல் செய்ய எதிர்க்கட்சிகள் நினைக்கின்றனவா?ஊடுருவல்காரர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் விரும்புகின்றனவா? அங்கீகரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில், ரோஹிங்யாக்களும் இருக்கின்றனர் என்பது, உண்மையா இல்லையா? இது போன்ற, சட்ட விரோத வாக்காளர்களை வைத்து அரசியல் செய்வோம் என எதிர்க்கட்சிகள் முடிவெடுத்தால், அதை எவ்வாறு அனுமதிக்க முடியும்?இவ்வாறு அவர் கூறினார்.சாதாரண மக்களின் உரிமைகள் மீறப்படுகின்றன. அதைத்தான்,காங்கிரசும், எதிர்க்கட்சிகளும் எதிர்க்கின்றன. பீஹாரின் 88 சதவீத மக்கள், வெளிமாநிலங்களுக்கு, தொழில் நிமித்தமாக சென்றுள்ளனர். வீடற்றவர்கள், அடையாள அட்டை ஆதாரங்களை வேண்டுமானால் வைத்திருப்பர். அவர்களது முன்னோர்களின் சான்றிதழ் ஆதாரங்களை எப்படி வைத்திருக்க முடியும். இவ்விஷயத்தில் தலைமைத் தேர்தல் கமிஷன் உத்தரவு போடுகிறதா அல்லது ஜனநாயகத்தை படுகொலை செய்கிறதா. இதன்மூலம், தேர்தல் கமிஷன் என்ற அமைப்பே, முற்றிலுமாக அம்பலப்பட்டு நிற்கிறது. ஏழைகளும், ஒடுக்கப்பட்ட மக்களும்தான், எதிர்க்கட்சிகளோடு போராட்டத்தில் கரம் கோர்த்துள்ளனர்.- பிரமோத் திவாரி, ராஜ்யசபா எம்.பி., காங்.,என் சொந்த தொகுதியிலேயே, நம் அண்டை நாடான வங்கதேசம், மியான்மரில் இருந்து ஏராளமான சட்டவிரோதிகள் தங்கியுள்ளனர். அவர்களை பயன்படுத்தி ஓட்டுகளை திருடும் முயற்சி முன்கெடுக்கப்பட்டுள்ளது. தலித்துகள், சிறுபான்மையினர், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ஓட்டுகளை திருடும் முயற்சி இது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

ஓட்டு திருட்டை தடுப்போம்: ராகுல்

பீஹாரில் நேற்று நடந்த போராட்டத்தில் பங்கேற்ற லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசியதாவது:லோக்சபா தேர்தலை தொடர்ந்து, மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் சட்டசபை தேர்தல் நடந்தது. மஹாராஷ்டிராவில் லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்ற இண்டி கூட்டணி, அடுத்து நடந்த சட்டசபை தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதற்கு நாங்கள் எந்த கருத்தும் சொல்லவில்லை. மாறாக, வாக்காளர் பட்டியல் தரவுகளை ஆராய்ந்தோம்-. ஒரு கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதை அறிந்தோம். வாக்காளர்கள் அதிகம் சேர்க்கப்பட்ட பகுதிகளில் பா.ஜ., வென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. தேர்தல் கமிஷனிடம் வாக்காளர் பட்டியலை கேட்டால், அமைதியாக இருக்கிறது. மஹாராஷ்டிராவில் நடந்தது போல், பீஹாரிலும் ஓட்டுத் திருட்டுக்கு பா.ஜ., முயற்சிக்கிறது. ஆனால், பீஹார் மக்கள் இதை நடத்தவிடமாட்டார்கள். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி என்பது, ஓட்டுகளை திருடும் முயற்சி. அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டிய தேர்தல் கமிஷன், பா.ஜ.,வின் அறிவுறுத்தல்படி செயல்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

'ஆதாரை அடையாளமாக காட்ட முடியாது'

பீஹாரில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியில், பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் ஆவணங்களை சமர்ப்பித்து பெயரை சேர்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான 11 ஆவணங்கள் பட்டியலையும் தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதில், அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியர் என்றால் அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, பிறப்பு சான்று, பாஸ்போர்ட், பள்ளி அல்லது பல்கலையால் வழங்கப்பட்ட கல்வி சான்று உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.இதில், பொது மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆதார் அட்டை இடம்பெறவில்லை. இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், இது குறித்து தனியார் செய்தி சேனலுக்கு, ஆதார் அட்டை வழங்கும் தேசிய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை நிர்வாகி அளித்த பேட்டியில் கூறியதாவது: ஆதார் எப்போதும் முதல் அடையாள அட்டை கிடையாது. போலி ஆதார் அட்டைகளை கண்டறிவதற்கான பணிகளை எங்கள் ஆணையம் எடுத்து வருகிறது. புதிதாக பதிப்பிக்கப்படும் அனைத்து அட்டைகளிலும் க்யூஆர் கோடுகள் இருக்கும். யாரேனும் போலி ஆதார் அட்டைகளை சமர்ப் பித்தால், யு.ஐ.டி.ஏ.ஐ., உருவாக்கியுள்ள ஸ்கேனர் செயலி மூலம் கண்டறிந்துவிடலாம். இதன் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. ஆதார் அட்டைகளை டிஜிட்டல் முறையில் பகிரவும் இது பயன்படும். இவ்வாறு அவர் கூறினார்.தேஜஸ்வி யாதவ், தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்

'

-நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

M Ramachandran
ஜூலை 10, 2025 22:21

ராகுலு காங்கிரஸிற்கு பின்னால் சென்றால் அதோகதி தான். ராகுல் ஒரு சுய நல வாதி. நாட்டை தன் பதவி ஆசைக்கு காட்டி கொடுக்க தயங்க மாட்டார். இது இப்போது எல்லோருக்கும் தெரிந்து விட்டது. மம்தா வும் அதே கொள்கையுடன் தான் இருக்கிறார். தன் பதவிய தக்க வைத்து கொள்ள வங்கிகளா தேச மற்றும் ரோங்யா முஸ்லீம் களை ஆதரிக்கிறார்


Iyer
ஜூலை 10, 2025 20:06

 . 5 கோடி பங்களாதேஷிகளும் ரொஹிங்யாக்களும் சட்டவிரோதமாக இந்தியாவில் புகுந்துள்ளனர்.  இவர்களை அடையாளம் கண்டு விரட்டுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.  EMERGENCY கொண்டு வந்து - 10 வருடங்களுக்கு தேர்தல்களை தள்ளிப்போட்டு -எல்லா சட்டவிரோதிகளையும் நாட்டில் இருந்து விரட்டவேண்டும்  அதன் பின் தேர்தல் பற்றி யோசிக்கலாம்.


sankaranarayanan
ஜூலை 10, 2025 19:31

இந்தியாவுக்குள் ஊடுருவிய நபர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள், ரோஹிங்யாக்களாக இருக்கலாம் அல்லது வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்கள் எல்லாம், தவறான வழிகளில், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கு ஏனிப்படி எல்லா எதிர்க்கட்சிகளும் உடந்தையாக இருக்க வேண்டும்.நம் நாடு, நமது பிரஜைகள்,நமது வாக்காளர்கள், என்ற எண்ணம் எப்போது இவர்களுக்கு தோன்றுகிறதோ ,அப்போதுதான் இவர்கள் திருந்துவார்கள். நாட்டுப்பற்று இவர்களுக்கு வரும்.


venugopal s
ஜூலை 10, 2025 15:33

ஆடத் தெரியாத நாட்டியக்காரி தெரு கோணல் என்றாளாம் என்பது போல் உள்ளது எல்லையைப் பாதுகாக்கத் தெரியாத மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சித் தலைவர்களையும் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை குறை கூறுவதும் என்பது!


நிக்கோல்தாம்சன்
ஜூலை 10, 2025 21:35

பூனை கண்ணை மூடிக்கொண்டாள் உலகமே இருண்டு விட்டது என்று நினைக்குமாம் அப்படி இருக்கு செல்பிஷ் உடன்பிறப்புகளின் எண்ணம்


Muralidharan S
ஜூலை 10, 2025 12:57

கள்ளத்தனமாக குடிபுகுந்தவர்களுக்கு எதிர் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எல்லாம் ஆதார் மற்றும் ரேஷன் கார்டு கொடுக்கப்பட்டு, ஒரு பெரிய ஒட்டு வங்கி எதிரி கட்சிகளுக்கு சாதகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று தேர்தல் கமிஷன் கருதுவதால், ஆதார் முதலான ஆதாரங்களை ஏற்க மறுத்து வாக்காளர் பட்டியலை சீரமைக்க ஆரம்பித்து இருக்கிறது.. நல்ல விஷயம்.. இதை கண்டு எதிரி கட்சிகள் அலறுகிறது என்றால், தேள்கொட்டுகிறது என்று அர்த்தம். மமதை எவ்வளவு அராஜகம் செய்தாலும் தொடர்ந்து வெற்றி பெற்று வருவது இப்படித்தான்.. முக்கியமாக தமிழகத்திலும், கேரளாவிலும், தெலுங்கானாவில் மற்றும் கர்நாடகாவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.


ஆரூர் ரங்
ஜூலை 10, 2025 12:14

சட்டத்தை மீறி ஊடுருவி வந்த குடும்பத்துக்கு உள்ளூர் சமூகமே உதவும் சமீபத்திய படத்தை தமிழக ரசிகர்கள் ஆஹா ஒகோ என வரவேற்றார்கள். ஆனா சட்டபூர்வமான வடஇந்திய உழைப்பாளிகள் இங்கு உழைத்துப் பிழைக்க வந்தால் வந்தேறி என எதிர்க்கிறார்கள். நம்மூரில் பல மாநிலக் கட்சிகள் ஆபத்தான ரோகிங்யாக்கள் ஊடுருவ வசதியாகவே நடந்து கொள்கிறார்கள்.


Mettai* Tamil
ஜூலை 10, 2025 09:54

மிகச் சரியான நடவடிக்கை .கள்ளக் குடியேறிகளை கண்டறிந்து களை எடுப்பது காலத்தின் கட்டாயம். மேற்கு வங்கத்திலும் இந்த நடவடிக்கை கண்டிப்பாக தேவை ...


lana
ஜூலை 10, 2025 08:20

ஆதார் அட்டை இல் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இது வசிப்பிடம் சான்று. குடியுரிமை க்கு அல்ல என்று.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 10, 2025 07:53

கார்கே மகன் வேலை பார்க்கும் பெண்களுக்கு எதிராக கூறிய வார்த்தைகள் அப்படியே இந்த காங்கிரஸ் காரர்களுக்கு பொருந்தி போவது கண்கூடு, சசிகாந்த் செந்தில் இப்போ உங்களுக்கும் அது பொருந்துகிறது


பேசும் தமிழன்
ஜூலை 10, 2025 07:33

கான் கிராஸ் கட்சி உள்ளிட்ட புள்ளி வைத்த இந்தி கூட்டணி ஆட்கள் வேலையே அது தான்.. வங்க தேசம்... பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து அபிமானிகளை ஊடுருவ செய்து.. அவர்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்தி வருகின்றனர்.. பெரும்பாலான இந்தியர்கள் அவர்களுக்கு ஓட்டு போடுவதில்லை.


சமீபத்திய செய்தி