உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் எப்போது; பியூஷ் கோயல் தகவல்

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் எப்போது; பியூஷ் கோயல் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''அமெரிக்காவுடனான எங்கள் பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாக முன்னேறி வருகின்றன. 2025ம் ஆண்டு அக்டோபர்- நவம்பர் காலக்கெடுவிற்குள் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்'' என மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.இந்தியா-பிரிட்டன் உடன் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. இந்த, உத்வேகத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா மற்றும் பிற முக்கிய நாடுகளுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=33s64cya&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தியா எதிர்கால வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்று இந்தியா வலிமையானதாக இருக்கிறது. விவசாயம் மற்றும் எத்தனால் போன்ற முக்கியமான துறைகளில் கவனம் செலுத்தப்படுகிறது. இந்தியா விதிமுறைகள் படியே, பிரிட்டன் உடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.எதிர்காலத்திலும் நியூசிலாந்து, ஓமன், அமெரிக்கா அல்லது 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியமாக இருந்தாலும் இந்தியாவின் ஒப்பந்தங்கள் நன்கு சிந்தித்து உத்தியுடன் செய்யப்படும். அமெரிக்காவுடனான எங்கள் பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாக முன்னேறி வருகின்றன.2025ம் ஆண்டு அக்டோபர்-நவம்பர் காலக்கெடுவிற்குள், பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்காக முடிவு செய்து, ஒரு நல்ல ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
ஜூலை 28, 2025 10:53

முரசொலி மாறன் கையெழுத்திடப்பட்ட GATT ஒப்பந்தத்துக்கு பிறகு தான் உலக வர்த்தகத்தில் பாரதத்தின் வலு குறைந்து தேவையற்ற பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்றைய சூழ்நிலையில் மக்களே தாமாக அன்னிய உற்பத்திப் பொருட்களை வாங்காமல் இயன்றவரை உள்ளூர் வணிகர்களுக்கு ஊக்கம் கொடுத்தால் மட்டுமே நாடு உருப்படும்.


raju
ஜூலை 28, 2025 09:53

இங்கிலாந்து உடன் உள்ள அக்ரீமெண்ட் .. சில நமது உற்பத்தியாளர்களை உற்பத்தியாளர்களா பாதிக்கும் . .இதற்க்கு முந்தைய இந்தியா அரசுகள் நமது உள்நாட்டு வாணிபத்தை எந்த அளவிலும் பாதிப்பு இல்லாமல் கொள்கை உருவாக்கினார்கள்


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 28, 2025 10:21

அவர்களின் பொருட்களை இங்கும், நம் பொருட்களை அங்கும் விற்க அனுமதிப்பது என்பதுதான் ஒப்பந்தம். முடிந்த அளவு நமக்கு தேவையான பொருட்களை வாங்குவதும், நம் உற்பத்தி துறைக்கு குறைந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மற்ற பொருளை வாங்குவதும் நேர்மையான ஒப்பந்தத்திற்கு அடையாளம். அவர்களிடம் இருந்து நாம் பொருட்களை வாங்கினால்தான் நம்மால் அவர்களிடம் வியாபாரம் செய்ய முடியும் என்பது அடிப்படை அறிவு. ஒப்பந்தம் என்பது இருவழிப்பாதை. வின் வின் - இருவருக்கும் வெற்றி, இருவரும் முன்னேறுவோம் என்பதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். விட்டுக்கொடுத்தவன் கெட்டுப்போவதில்லை என்பது முதுமொழி.


ஆரூர் ரங்
ஜூலை 28, 2025 10:41

கோக் , பெப்சி கொண்டு வந்தபோது யாருக்கும் பாதிப்பு வரவில்லையல்லவா?. அவை வந்ததால் உள்நாட்டு பானங்கள் காணாமல் போயின. வாஜ்பாய் ஆலோசனையின் பேரில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அமெரிக்க கணினி நிறுவனத்தை இங்கிருந்து விரட்டிய பின்னரே இங்கு பல உள்ளூர் கணினி நிறுவனங்கள் வளர்ந்தன.


Jack
ஜூலை 28, 2025 08:47

அமெரிக்காவில் இந்திய பொருட்கள் கிடையாது ..குஜராத்தி கடைகளில் அப்பளம் ஊறுகா தான் கிடைக்கும் ..ஒரு கார் ..ஒரு டூ வீலர் ஒரு டீவி இந்த மாதிரி சமாச்சாரம் தேடினாலும் கிடைக்காது


SANKAR
ஜூலை 28, 2025 10:41

agree.but we export 80 billion dollars worth other goods .of this auto parts worth 2.3 billions.these will be taxed by Trump


subramanian
ஜூலை 28, 2025 08:45

பாராட்டுகள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை