உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கரூரிலிருந்து விஜய் வெளியேறியது ஏன் ? உச்ச நீதிமன்றத்தில் வாதம்

கரூரிலிருந்து விஜய் வெளியேறியது ஏன் ? உச்ச நீதிமன்றத்தில் வாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'கரூர் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பின், மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக, உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி போலீசார் அறிவுறுத்தியதால் தான் விஜய் புறப்பட்டு சென்றார்' என, உச்ச நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது. கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் தொடர்பாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட ஐந்து மனுக்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சார்யா அமர்வில் நேற்று விசாரணைக்கு https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e6rl5sdk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வந்தன.

விசாரணை குழு

குறிப்பாக, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும் என, த.வெ.க., தாக்கல் செய்த மனு, சி.பி.ஐ., விசாரணை கோரி பா.ஜ., வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.அது தவிர, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த சந்திரா என்பவரின் கணவர் செல்வராஜ் தாக்கல் செய்த மனு, உயிரிழந்த 13 வயது சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் சி.பி.ஐ., விசாரணை கோரிய மனு, பிரபாகரன் என்பவர் தாக்கல் செய்த மனு ஆகியவையும் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.முதலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதம்:கரூர் பிரசாரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவை அனைத்தையும் கட்சியின் தலைவர் மற்றும் பிற நிர்வாகிகள் முறையாக பின்பற்றினர். ஆனால், இந்த விவகாரத்தில் எதிர்மனுதாரராக இல்லாத விஜய் பற்றி, உயர் நீதிமன்றம் நேரடியாக விமர்சனம் செய்து கருத்து தெரிவித்துஉள்ளது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் விசாரணை வரம்பிற்கு உட்பட்டது. அப்படி இருக்கையில், சென்னையில் இருக்கக்கூடிய பிரதான கிளையில் எப்படி இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது என்பதை விளக்க வேண்டும். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதி பெற்றே விசாரணை வரம்புக்குள் வராத வழக்கை விசாரணைக்கு எடுக்க முடியும். ஆனால், அவ்வாறு எந்த அனுமதியும் பெற்றதாக தகவல் இல்லை.

அவதுாறு கருத்து

மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் நடந்த உடன், த.வெ.க., தலைவர் விஜய் அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றதாக அரசு தரப்பு வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது முற்றிலும் தவறானது. போலீஸ் பாதுகாப்புடன் தான் விஜய், அந்த இடத்தில் இருந்து வெளியேறினார். மேற்கொண்டு அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்க, உடனடியாக வெளியேறும்படி போலீசார் அறிவுறுத்தியதால் தான், கரூரில் இருந்து விஜய் புறப்பட்டு சென்றார்.அங்கிருந்த த.வெ.க., நிர்வாகிகள், பாதிக்கப்பட்டவர்களை சென்று பார்க்க போலீசார் அனுமதிக்கவில்லை. விஜயை எதிர்மனுதாரராக சேர்க்காமல் அவதுாறு கருத்துக்களை சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உண்மை நிலையை வெளிக்கொண்டு வர கண்டிப்பாக விசாரணை தேவை. அந்த விசாரணை, உச்ச நீதிமன்றம் அமைக்கும் சிறப்பு விசாரணை குழு மூலம் நடக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் வாதிட்டனர். இதை தொடர்ந்து, உயிரிழந்த சிறுவனின் தந்தை பன்னீர் செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இந்த விவகாரத்தில், தமிழக அரசு ஒரு விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. உயர் நீதிமன்றமும் ஒரு சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது; இரண்டின் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்தால் மட்டுமே முழு உண்மையும் வெளிவரும்' என, வாதிட்டார். இதன் பின், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி முன் வைத்த வாதம்:இந்த விவகாரத்தை பொறுத்தவரை, தமிழக அரசு சிறப்பு விசாரணை குழுவை நியமிக்கவில்லை. உயர் நீதிமன்றம் தான் நியமித்துள்ளது. கள நிலவரங்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் தமிழக அதிகாரிகள். எனவே, ஒரு சிறந்த அதிகாரியின் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழுவில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர வேண்டும். அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கூடாது. இவ்வாறு அவர் வாதிட்டார்.

வழக்கு ஒத்தி வைப்பு

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சென்று பார்த்தாரா, இல்லையா என்பது எதற்குமே தொடர்பில்லாத விஷயம். உயர் நீதிமன்றத்தின் விசாரணை முறையில் இரண்டு விபரங்கள் தெளிவாகின்றன.உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கை விசாரித்த அதே சமயம், சென்னை உயர் நீதிமன்றமும் மற்றொரு வழக்கை விசாரித்துள்ளது. மதுரை, சென்னை நீதிமன்றங்கள் ஒரே நாளில் வேறு வேறு உத்தரவுகளை எப்படி பிறப்பித்தன? சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டது எப்படி?வழிகாட்டுதல்கள் கோரி மதுரையிலும், சென்னையிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மதுரையில் டிவிஷன் பெஞ்சும், சென்னையில் தனி நீதிபதியும் விசாரித்துள்ளனர். உயர் நீதிமன்ற மதுரை கிளை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பிறகு சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி விசாரணை செய்ய வேண்டிய அவசியம் என்ன?வழக்கில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டுமென்று தமிழக அரசு கோரிக்கை வைத்ததால், அதற்கு அனுமதி அளிக்கிறோம். அனைத்து மனுக்கள், பிரமாண பத்திரங்களை பார்த்த பின் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்.இவ்வாறு கூறிய நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர். - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

Natchimuthu Chithiraisamy
அக் 12, 2025 17:29

அதிமுக த வெ க பிஜேபி ஒன்று சேருவது உறுதி பழனிசாமி முதல்வர். வரும் காலங்களில் அரசுக்கு பல லட்சம் கோடி காணாமல் போகாது . உறுதியாக நம்பலாம். லட்சம் கோடிக்கும் வெறும் கோடிக்கும் வித்தியாசம் உள்ளது.


தாமரை மலர்கிறது
அக் 11, 2025 23:26

ஆடு தானே கசாப்பு கடைக்கு வந்து சிபிஐ விசாரணை வேண்டுமென்கிறது. விஜய்யை முதல்வர் ஆக்க, பிஜேபி தமிழகத்தில் கட்சி நடத்தவில்லை. பிஜேபி தலைமையிலான கூட்டணிக்கு முறையாக விஜய் வருவது நல்லது. இல்லையெனில், விஜய் கட்சியில் உள்ளவர்களை ஸ்டாலின் கம்பியெண்ண வைத்துவிடுவார். கட்சி சின்னபின்னமாகிவிடும்.


Anonymous
அக் 11, 2025 22:39

என்ன.......... உண்மை வெளி வந்துருக்கு?


T.sthivinayagam
அக் 11, 2025 19:00

போலீஸ் சார் சொன்ன அறிவுரையை கேட்கும் நிலைமையில்லா அவர்கள் இருந்தார்கள், மக்களை வைத்தே மக்கள் செல்வாக்கை காட்ட நினைத்தனர்


vivek
அக் 11, 2025 22:04

நீலி கண்ணீர் வடிக்காதே சிவநாயகம் என்று மக்கள் கூறுகின்றனர்


spr
அக் 11, 2025 18:56

இரு கொலை செய்து மரண தண்டனை பெற்ற குற்றவாளி தப்பியது தொடங்கி அன்று முதல் இன்றுவரை தொடரும் அநியாயமே. நியாயம் என்றொரு நிலை என்றுமே இருந்ததில்லை"


ஆசாமி
அக் 11, 2025 18:53

போலீஸ் போகசொன்னார்களாம் இவரும் ஓடிப்போய் வீட்டில் 2 நாள் ஒளிஞ்சிட்டிருந்தாராம். இன்னும் என்னவெல்லாம் சொல்லி சாமாளிப்பானுங்களோ


Palanivelu Kandasamy
அக் 11, 2025 15:15

விஜயின் தவறுகள்: 1. அவர் கண்முன்னே சிலர் தண்ணீர் இல்லாமல் மயங்குவதைக் கண்டும் தண்ணீர் குப்பிகளை வீசி எறிந்து விட்டு பேச்சை தொடர்ந்தது. 2. அவருடைய கட்சிக் கொடியுடன் ஆம்புலன்ஸ் வந்தும் இளக்காரமாக என்னப்பா ஆம்புலன்ஸ் நம்ம கொடியுடன் வருது என்று சொல்லி விட்டு , காரணம் என்ன என்று கேட்காது பேச்சைத் தொடர்ந்தது. 3.என்ன தான் உயரமான வண்டியில் இருந்தாலும் மக்கள் முண்டியடித்து நிற்பதைக் கண்டும் கொஞ்சம் கூட கவலைப்படாமல் இருந்தது. - உடனே பேச்சை நிறுத்தி மக்களை கலைந்து போகச் சொல்லியிருக்க வேண்டும், அல்லது கூட்டத்தை ஒழுங்குபடுத்த தொண்டர்களை கேட்டிருக்கவேண்டும். 4. ஓரு குழந்தை காணவில்லை என்று திருவிழாவில் அறிவிப்பதைப் போல சொல்லிவிட்டு அதைப்பற்றி ஒன்றும் கேட்காது போயது, அந்தக் குழந்தையின் நிலை ஏதாவது செய்தியில் வந்ததாக தெரியவில்லை. 5. வரும்போது வண்டியின் கேபின் விளக்கை அணைத்து அணைத்து விளையாடியது. 6.ஒரு நேரத்தில் வந்த ஒரு வீடியோ வில் அவர் காண்பிக்கும் சைகை [கழுத்தை அறுப்பது போல - இது உண்மையாக இருக்கும் பட்சத்தில்] மிகவும் கண்டிக்கத் தக்கது, வன்முறையானது. 7.அவருடைய காவலர் It is a crowd burst என்று சொன்ன பின்னும் ஒரு கவலையுமில்லாமல் பேசியது. 8. எல்லாம் கை விட்டு போன பின் உடனே சென்னைக்கு ஓடியது - நாமக்கல்லில் / திருச்சியில் தங்கி இருந்திருக்கலாம். இவர் ஓடியவுடன் அனைத்து கீழ்மட்ட தலைவர்களும்-செயலாளர் ஆனந்த் உள்பட - ஓடிவிட்டனர். இது ஒரு வகையிலும் ஏற்புடையதல்ல. மிக முக்கியமானது - நேரம் தவறாமை. இது அவருடைய ரசிகர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய குணங்கள் இவை - அன்றும் இன்றும் அவரிடம் காணப்படவில்லை.


Ravi
அக் 11, 2025 15:56

You mirrored my opinion. Fantastic


Rajah
அக் 11, 2025 13:19

விஜய் மீது குற்றம் சுமத்தும் அனைவரும் புள்ளிக் கூட்டணி ஆதரவாளர்கள். அவர்கள் அப்படிதான் எழுதுவார்கள்.காவல்துறை, இந்த அரசு மற்றும் கரூர் குண்டர்கள் அனைவரும் குற்றவாளிகளே. விஜய்யை மட்டும் குற்றவாளி என்பது ஏற்புடையதல்ல. கம்யூனிஸ்ட்களுக்கும், சிறுத்தைகளுக்கும் விஜய் அதிமுகவில் இணைந்து விடுவாரோ என்ற பயத்தில் செய்வதறியாது தினமும் உளறிக்கொண்டே இருக்கின்றார்கள். அப்படி இணைந்தால் அவர்கள் அனைவரும் தோல்வியைத் தழுவுவார்கள். இதுதான் அவர்களுக்கு இருக்கும் பயமும் தலைவலியும்.


pakalavan
அக் 11, 2025 16:09

இந்தமாதிரி பித்தலாட்ட பிராடு ரசிகனுங்க எல்லாம் ஒரே ஜா்்்ல தான் இருப்பானுங்க, புள்ளிங்கோ பசங்க எந்த ஜா்்்ன்னு ஊருக்கே தெரியுமே, அவனுங்கதான் சோசப்பு விசயோட ரசிகனுங்க,


vivek
அக் 11, 2025 22:05

நீலி கண்ணீர் வடிக்காதே பகலவா


Venugopal S
அக் 11, 2025 13:18

தங்கள் தரப்பில் எந்தத் தவறும் இல்லை, மற்றவர்கள் மீது தான் எல்லா தவறுகளும் என்று சொல்வது தவறு செய்த எல்லோரும் பொதுவாக சொல்வது தான்!


Against traitors
அக் 11, 2025 14:12

தி மு க பற்றி ஒப்புக்கொண்டதற்க்கு நன்றி


vivek
அக் 11, 2025 15:53

வீணா போன உனக்கு எவளோ அறிவா


ஆரூர் ரங்
அக் 11, 2025 13:14

அரசியல் தலைவர்கள் தாமதமாக வருவது புதிதல்ல. சினிமா வெறி பிடித்த ரசிகர்கள் நடிகரைப் பார்க்க முண்டியடித்தனர். அளவுக்கு மீறிய கூட்டம் சேருவதை நுழைவு பகுதிகளிலேயே போலீஸ் தடுத்திருக்க முடியாதா என்பதுதான் கேள்வி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை