உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் சட்டசபை தேர்தலில் பூஜ்யம்; பிரசாந்த் கிஷோருக்கு பெருத்த ஏமாற்றம்!

பீஹார் சட்டசபை தேர்தலில் பூஜ்யம்; பிரசாந்த் கிஷோருக்கு பெருத்த ஏமாற்றம்!

பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலில் 238 இடங்களில் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிக்கு ஒரு இடம் கிடைக்கவில்லை. இது அவரது கட்சியினருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.பீஹார் சட்டசபை தேர்தலில் கருத்துக்கணிப்புகளில் சொன்னதை விட கூடுதல் தொகுதிகளில் தேஜ கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மொத்தம் உள்ள 243 இடங்களில் 202ல் இடங்களில் பாஜ, ஜேடியு கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஆரம்பத்தில் 76 இடங்கள் வரை முன்னிலையில் இருந்த ஆர்ஜேடி தலைமையிலான மஹாகட்பந்தன் கூட்டணி, அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்து, தற்போது 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.இந்தத் தேர்தலில் தேஜ கூட்டணி, மஹாகட்பந்தன் கூட்டணியை கடந்து, பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அவரது கட்சி 238 தொகுதிகளில் தனித்து களம் கண்டது. சட்டசபை தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட இவரது கட்சி, தேஜ கூட்டணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு தகுந்தபடி மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் கிலோமீட்டர் பேரணி சென்று பிரசாரத்தை செய்தார் பிரசாந்த் கிஷோர். செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல கூட்டமும் கூடியது.இதனால் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தார் அவர். ஆனால், இந்தத் தேர்தலில் ஒரு இடத்திலும் ஜன் சுராஜ் கட்சி முன்னிலை பெறாதது, அக்கட்சியின் தொண்டர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் கூட பிரசாந்த் கிஷோரின் கட்சிக்கு 2 முதல் 4 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், அதுவும் கிடைக்காமல் போனது.இந்தத் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஜக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் அரசியலை விட்டு விலகுவேன் என்று பிரசாந்த் கிஷோர் சவால் விடுத்திருந்தார். தற்போது, நிதிஷ் குமாரின் கட்சி 75 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம், பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலத்தை நிதிஷ்குமார் முடித்து விட்டார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

Iniyan
நவ 14, 2025 21:36

இந்த மோசடி பிரசாந்த் கிஷோரை தேர்தல் வியூக நிபுணர் என்று சொல்வது மடமை.


KOVAIKARAN
நவ 14, 2025 21:10

ராஜாவை உருவாக்குபவர் ராஜாவாக விரும்பினார். மக்கள் வேறுவிதமாக யோசித்து பாஜக கூட்டணியைத் தேர்ந்தெடுத்தனர். .


duruvasar
நவ 14, 2025 20:27

திராவிடன் பார்வையில் ஒரு ஆதிக்க சக்தியை மக்கள் வீழ்த்திவிட்டார்கள். நல்லா இருக்குல்லே . எங்களுக்கு இன உணர்வுதான் முக்கியம்.


Modisha
நவ 14, 2025 18:45

ராஜகுரு ராஜாவாக முடியாது . Coach விளையாட்டு வீரராக முடியாது . இது பிரசாந்த்துக்கு தெரியாது .


vee srikanth
நவ 15, 2025 10:54

சரியான கருத்து


Sainathan Veeraraghavan
நவ 14, 2025 18:34

பிரசாந்த் கிஷோர் அரசியலில் இருந்து விலகி விட்டார்கள்


senthilanandsankaran
நவ 14, 2025 17:51

பீகார் மாநில MGR


visu
நவ 14, 2025 16:08

ஹாஹா தேர்தல் ஆலோசகர் தோல்வி எனும்போதே அந்த தொழிலும் முடிந்து விட்டது என்று அர்த்தம் .யார் ஜெயிக்க போறாங்க என்று அறிந்து அவங்களுக்கு வேலை செய்து பொருளும் ஈட்டி விட்டார்


Vasan
நவ 14, 2025 16:00

Some cricketers have incidentally had a bad start to their career and later went on to perform well. For example, Gundappa Vishwanath scored ZERO in his first innings of debut, but went on to become a well renowned player.


Vasan
நவ 14, 2025 15:54

Even Sivaji Ganesan, with so much fame in Cinema, couldnt win a single seat in elections.


S.V.Srinivasan
நவ 14, 2025 15:51

நாட்டுல இருக்கறவனுக்கெல்லாம் கோடி கணக்கா பணத்தை வாங்கிட்டு வெற்றி வியூகம் வகுத்த கொடுத்த உங்களுக்கு உங்கள் சொந்த மாநிலத்தில் ஒரு ஸீட் கிடைக்கலையே. அதுதான் விதி. என்ன இருந்தாலும் பீகார் மக்கள் புத்திசாலிகள்தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை