உள்ளூர் செய்திகள்

பேஷன் கம்யூனிகேஷன் - திறமையும் உழைப்பும் தேவை

பேஷன் கம்யூனிகேஷன் என்பது, இன்றைய நிலையில் வளர்ந்து வரும் ஒரு தொழிலாக உள்ளது. குறிப்பிட்ட பார்வையாளர்கள் மத்தியில் பேஷன் டிரெண்டுகளை மேம்படுத்துவதற்கான கம்யூனிகேஷன் தீர்வுகளை, இத்துறை சார்ந்த தொழில் நிபுணர் வழங்குகிறார். ஒருவரின் தனித்திறன்களைப் பொறுத்து, இத்துறையில் அவரவர் சாதனையும், வெற்றியும் அமைகிறது. பேஷன் கம்யூனிகேஷன் படிப்பில் சேருதல் இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க, பள்ளி மேல்நிலைப் படிப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். மாணவர்களை சேர்ப்பதில், பல கல்வி நிறுவனங்கள், வெவ்வேறு வழிமுறைகளைப் பின்பற்றுகின்றன. எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு போன்றவை சில பொதுவான வழிமுறைகள். மக்களை கவரும் விதத்தில், ரம்மியமான பேஷன் ரசனை உங்களுக்கு இருத்தல் வேண்டும். இப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள் National institute of fashion designInstitute of apparel management(Gurgaon)IGNOUNational institute of fashion technology(NIFT)National institute of design(NID)Symbiosis institute of designPearl academy of fashionWLC IndiaAmity school of fashion technologyIndian institute of fashion technology(IIFT) போன்ற கல்வி நிறுவனங்கள் முக்கியமானவை. செலவினம் சிம்பயோசிஸ் - ரூ.2,20,000தேசிய டிசைன் கல்வி நிறுவனம் - ரூ.2,10,800பியர்ல் அகடமி ஆப் பேஷன் - ரூ.2,50,000 பணி வாய்ப்புகள் பேஷன் கம்யூனிகேஷன் நிபுணர்களுக்கான பணி வாய்ப்புகள் இன்றைய நிலையில் அதிகம். Visual merchandising, exhibition & display design, graphic design, fashion journalism, styling, photography, advertising and public relations போன்ற பல அம்சங்களை உள்ளடக்கிய, ஸ்டைல் மற்றும் பேஷன் துறைகளில் ஒருவர் பலவிதமான பணி வாய்ப்புகளைப் பெறலாம். மேலும், visual imagery, text, information and experiential design போன்ற படைப்பாக்கத் துறைகளிலும் சேர்ந்து பணியாற்றலாம். சம்பளம் புதிதாக இத்துறையில் நுழையும் ஒருவர், வருடம் ரூ.2 லட்சம் மற்றும் அதற்கு மேலும் சம்பாதிக்கலாம். அனுபவமும், திறமையும் உள்ள ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஓர் அலசல் பேஷன் கம்யூனிகேஷன் என்பது Journalism, visual merchandising, advertising and public public relations ஆகியவற்றை உள்ளடக்கிய ஒன்றாகும். இத்துறை ஒரு கவர்ச்சிகரமான துறையாகும். இத்துறையில் நுழைந்த புதிதில், ஒருவர் ஒரு நாளைக்கு 14 மணிநேரம் உழைக்க வேண்டியிருக்கும். உழைப்பும், சுய திறமையும் ஒன்று சேர்கையில், இத்துறையில் ஒருவர் பெறும் வெற்றி அலாதியானது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !