உள்ளூர் செய்திகள்

பத்தாம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யலாம்

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுடைய விடைத்தாள் நகல்களை இன்று பிற்பகல் 3 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்தி குறிப்பு:மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று பிற்பகல் 3 மணி முதல் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல்-II/மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Application for Retotalling / Revaluation என்ற பக்கத்தை கிளிக் செய்து விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதனை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து உரிய கட்டணத்துடன் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஜூன் 5 (புதன்கிழமை) பிற்பகல் 3 மணி முதல் ஜூன் 10 (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.கட்டண விவரம்:மறுமதிப்பீடு: பாடம் ஒவ்வொன்றிற்கும் ரூ.505 மறுகூட்டல்-IIமற்ற பாடங்கள் ஒவ்வொன்றிற்கும்- ரூ.205இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்