உள்ளூர் செய்திகள்

இன்ஜி., கல்லுாரிகளுக்கான கிரிக்கெட் ஆர்.எம்.கே., - லயோலா முன்னேற்றம்

சென்னை: இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், ஆர்.எம்.கே., - லயோலா ஐகாம் அணிகள் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறின.ஆர்.எம்.கே., தொழில்நுட்ப கல்லுாரி சார்பில், 15ம் ஆண்டின் மஞ்சுளா - முனிரத்தினம் நினைவு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள், திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நடக்கின்றன.இன்ஜி., கல்லுாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட்டில், 16 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முதல் காலிறுதியில், ஆர்.எம்.கே., மற்றும் வேலம்மாள் கல்லுாரிகள் எதிர்கொண்டன.'டாஸ்' வென்ற வேலம்மாள் அணி, பேட்டிங்கை தேர்வு செய்து, 19.5 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.எளிதான இலக்கை துரத்திய ஆர்.எம்.கே., அணிக்கு, சில விக்கெட்டுகள் விரைவில் சரிந்தாலும், பதற்றமின்றி விளையாடி, 18 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு, 123 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.மற்றொரு காலிறுதி ஆட்டத்தில், முதலில் விளையாடிய சவீதா அணி, 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு, 105 ரன்கள் எடுத்தது.எதிர்த்து விளையாடிய லயோலா ஐகாம் அணி, துவக்கம் முதலே அதிரடியாக ஆடி, 11.1 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 106 ரன்கள் எடுத்து, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்