உள்ளூர் செய்திகள்

பள்ளி அளவிலான சதுரங்க போட்டியில் பங்கேற்க அழைப்பு

அண்ணாநகர்: பள்ளி அளவிலான சதுரங்க போட்டியில் பங்கேற்க மாணவ, மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ கிருஷ்ணசுவாமி மெட்ரிக் பள்ளி சார்பில், பள்ளி அளவிலான, சதுரங்க போட்டி இருபாலருக்கும், ஆகஸ்ட் 30ல் துவங்கி, இரண்டு நாட்களுக்கு நடக்கிறது. அதில், எட்டு, 10, 12, 14 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். விண்ணப்பிக்க வரும் 28ம் தேதி கடைசி நாளாகும். மேலும், விவரங்களுக்கு 90952 35224 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்