தொலைதூர கல்வி இயக்கக மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்
விருதுநகர்: சிவகாசி அண்ணாமலை பல்கலை தொலைதூர கல்வி இயக்ககத்தில் படித்த மற்றும் படித்துக்கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் மதுரையில் பிப்.,21ல் நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்புவோர் ஐந்து நாட்களுக்குள் தங்களைப்பற்றிய முழு விபரத்தினையும் சிவகாசி பழனியாண்டவர் தியேட்டர் அருகில் அமைந்துள்ள படிப்பு மையத்தில் அளிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு மையத்தை நேரிலோ அல்லது 04562-220 050 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம், என, படிப்பு மைய பொறுப்பு அலுவலர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.