அரசு கல்லுாரி மைதானத்தில் வீசப்படும் மருத்துவ கழிவுகள்
ஹொஸ்கோட்: அரசு கல்லூரி மைதானத்தில் வீசப்படும் மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.பெங்களூரு ரூரல் ஹொஸ்கோட் டவுனில் அரசு பி.யு.சி., கல்லுாரி உள்ளது. கல்லுாரி அருகில் விளையாட்டு மைதானமும் உள்ளது. கடந்த சில தினங்களாக மைதானத்தில் மருத்துவ கழிவுகள் வீசப்படுகின்றன.மேலும் இரவு நேரத்தில் மைதானத்தில் அமர்ந்து, சிலர் மது குடித்துவிட்டு, மது பாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால், மைதானத்திற்கு சென்று விளையாடும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.மைதானத்தை சுற்றி தடுப்பு சுவர் இல்லாததால், மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகின்றன. தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுப்பதுடன், மருத்துவ கழிவுகளை வீசுவோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரியுள்ளனர்.