சீமானை கைது செய்ய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
கடலுார் : கடலுார் பெரியார் அரசு கலைக்கல்லுாரி முன்பு புரட் சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் ஈ.வே.ரா.,வை இழிவுபடுத்தும் சீமானை கைது செய்யக்கோரி போராட்டம் நடந்தது.புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கிளை செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் சஞ்சய், மாவட்ட இணைசெயலாளர் வெற்றித்தமிழ் மற்றும் நிர்வாகிகள், மாணவர்கள் பங்கேற்றனர்.