அரசு கல்லுாரியில் ரயில்வே தேர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லுாரியில், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் மத்திய ரயில்வே பணி போட்டி தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்வது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரி முதல்வர் தர்மராஜா தலைமை தாங்கினார். கல்லுாரி வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் முருகானந்தன் வரவேற்றார். இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர்கள் மனோகரன், தினேஷ்குமார் ஆகியோர் பங்கேற்று மத்திய ரயில்வே பணி போட்டி தேர்வுகளுக்கு தயாராவது குறித்து எடுத்துரைத்தனர்.மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்பில் மாணவர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதில் கல்லுாரியின் அனைத்து துறை பேராசிரியர்கள் கருணை வேலன், ராஜ்குமார், மோகனா, தனபால், பெலிக்ஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.தமிழ் துறை தலைவர் மோட்சஆனந்தன் நன்றி கூறினார்.