தமிழ்ப் புதல்வன் திட்டம்; மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000
சென்னை: 6 முதல் 12-ம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளில் படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் மதம் ரூ.1000 வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.*நடப்பாண்டில் 1,000 கோடி ரூபாயில், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும். 15 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகள், 300 கோடி ரூபாயில் உருவாக்கப்படும்*பொது நுாலகங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 213 கோடி ரூபாயில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். 45 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளை, தொழில் 4.0 தரத்திற்கு *உயர்த்த, 3,014 கோடி ரூபாயில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்*அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட தொழில் படிப்பு மாணவர்களுக்காக, 511 கோடி ரூபாய் செலவிடப்படும்*கோவையில் கருணாநிதி பெயரில் மாபெரும் நுாலகம் அமைக்கப்படும்*அரசு மற்றும் அரசு உதவி பெறும் 100 பொறியியல், கலை அறிவியல் கல்லுாரிகளில், 200 கோடி ரூபாயில், புதிய திறன் பயிற்சி கட்டமைப்புகள் உருவாக்கப்படும்*மத்திய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே மற்றும் வங்கிப் பணித் தேர்வுகளில், தமிழக இளைஞர்கள் அதிகம் வெற்றி பெற, தேர்ந்தெடுக்கப்பட்ட 1,000 மாணவர்களுக்கு சென்னை, கோவை, மதுரை மண்டலங்களில் தங்குமிடம், உணவு வசதியுடன் ஆறு மாத பயிற்சி வழங்க, 6 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்*அரசு பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கவும், உயர்கல்வி சேர்க்கையை உயர்த்தவும், தமிழ்ப் புதல்வன் என்ற மாபெரும் திட்டம் செயல்படுத்தப்படும். இதன்கீழ், 6 முதல் 12-ம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளில் படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு, அவர்களின் வங்கிக் கணக்கில் மாதம் 1,000 ரூபாய் நேரடியாகச் செலுத்தப்படும். மூன்று லட்சம் மாணவர்கள் பயனடையும் இத்திட்டத்திற்கு, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.*ஒரு லட்சம் கல்லுாரி மாணவர்களுக்கு, 2,500 கோடி ரூபாய் அளவுக்கு பல்வேறு வங்கிகள் வாயிலாக கல்விக் கடன் வழங்கிடுவதை, அரசு உறுதி செய்யும்.