உள்ளூர் செய்திகள்

மாவட்ட அளவிலான சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் 8 பேர் சாம்பியன்

ராயபுரம்: சென்னை மாவட்ட அளவிலான, சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில், எட்டு பேர் சாம்பியன் பட்டம் வென்றனர். சென்னை மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில், மாவட்ட சதுரங்க போட்டி, ராயபுரத்தில் நடந்தது. அதில், ஒன்பது வயது முதல், 25 வயது வரை, நான்கு பிரிவுகளில், 500 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இறுதி போட்டிகளில், பெண்களில் சாதனா, லட்சுமி, தாமரைச் செல்வி, சவ்ஜன்யா ஆகியோர் முதலிடம் பிடித்தனர். ஆண்களில் ரோகித், அர்ஜுன் கல்யாண், ராஜரிஷி கார்த்தி, சாய் விஷ்வேஷ் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்