உள்ளூர் செய்திகள்

ஒழுக்கம் தவறும் மாணவர்களால் பாதிப்புக்குள்ளாகும் மக்கள்

சென்னை: மாண­வர்கள் போதையில் பேருந்தில் அட்­ட­காசம் செய்­ததால், பாதி வழியிலேயே பேருந்து நிறுத்­தப்­பட்­டது. இதனால், பய­ணிகள் மிகுந்த சிர­மத்­திற்கு ஆளா­கினர். சென்­னையில் உள்ள, பிர­பல கல்லூரி மாண­வர்­களின் அட்­ட­கா­சங்கள், அத்­துமீ­றல்கள் தொடர்க­தை­யாகி வரு­கின்­றன. இந்த நிலையில், நேற்று பிற்­பகல், பழ­மை­யான கல்லூ­ரியை சேர்ந்த, 20க்கும் மேற்­பட்ட மாண­வர்கள், கோயம்பேடு அண்­ணா­ ச­துக்கம் செல்லும் (தடம் எண் 27பி) பேருந்தில், கண்­ணகி சிலை பேருந்து நிறுத்தத்தில் ஏறினர். அதில், மது அருந்தி விட்டு, போதையில் இருந்த சில மாண­வர்கள், பேருந்தின் கூரை மீதும், சிலர், படிக்­கட்­டுக்­களில் நின்றும், பக்­க­வாட்டு கம்­பியை பிடித்­த ப­டியும் பய­ணித்­தனர். ஓட்­டுனர் மற்றும் நடத்­துனர் கேட்டுக் கொண்டும், மாண­வர்கள், அவர்கள் விருப்பம் போல் பய­ணித்­தனர். பேருந்து, எழி­லகம் அருகே வந்த போது, போதையில் மேற்­கூ­ரையில் ஆட்டம் போட்ட ஒரு மாணவர், தடு­மாறி கீழே விழுந்தார். இதனால், பேருந்து நிறுத்தப்­பட்­டது. சக மாண­வர்கள், கீழே விழுந்த மாண­வனை தூக்கி, ஆசுவாசப்­படுத்­தி­, மீண்டும் அதே பேருந்தில் ஏற்றினர். இதனால், 20 நிமிடம் தாமத­மாக பேருந்து புறப்­பட்­டது. இந்த போதை மாண­வரால், பய­ணிகள் மிகுந்த சிர­மத்திற்கு ஆளா­கினர். இதுகுறித்து, போக்­கு­வ­ரத்து கழக ஊழி­யர்கள் கூறு­கையில், "கல்­லூரி துவங்­கிய நாள் முதல் மாண­வர்­களால் நாங்கள் பல இன்­னல்­க­ளுக்கு ஆளா­கி­யுள்ளோம். இவர்­களால் பேருந்தில் வரும் பய­ணிகள் மட்­டு­மின்றி, எங்­க­ளுக்கும் எவ்­வித பாது­காப்பும் இல்லை" என்­றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்