பள்ளி மாணவருக்கு விண் ஆய்வாளர் சான்றிதழ்
கடலுார்: சர்வதேச விண்ணியல் தேடல் குழுமத்தின் சான்றிதழ் பெற்ற கடலுார் கிருஷ்ணசாமி பள்ளி மாணவரை, கலெக்டர் பாராட்டினார்.கடலுார் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 8ம் வகுப்பு மாணவர் அனேஷ்வரர். இவர், கடலுார் சில்வர் பீச் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு 56 எரிக்கற்களை தேடி எடுத்து சோதனை செய்ததில், விண்ணில் இருந்து விழுந்தது என, நிருபித்தார்.இதற்காக சர்வதேச விண்ணியல் தேடல் குழுமம், ஹவாயின் பான்-ஸ்டார் வான் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை நாசாவுடன் இணைந்து விண்கற்கள் குறித்த ஆய்வில் மாணவர் அனேஷ்வரரை இணைத்துக் கொண்டு அங்கீகார பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளது.மேலும், ஏழு விண்கற்களையும் கண்டுபிடித்ததற்காக ஹார்டின்-சிமன்ஸ் பல்கலைக் கழகத்தின் விண் ஆய்வாளர் சான்றிதழும் பெற்றுள்ளார். மாணவரை கலெக்டர் அருண் தம்புராஜ் பாராட்டினார். பள்ளி முதல்வர் நடராஜன் உடனிருந்தார்.