ராமநாதபுரத்தில் இன்று புத்தகத் திருவிழா துவக்கம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கம் சார்பில் ராமநாதபுரம் ராஜா பள்ளி மைதானத்தில் இன்று (பிப்.2) துவங்கி 12ம் தேதி வரை புத்தகத் திருவிழா நடக்கிறது.கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் துவக்க விழா நடக்கிறது.இங்கு 110 அரங்குகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற உள்ளன. தினமும் தமிழ் ஆர்வலர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கருத்துரைகள் வழங்கப்படுகின்றன.பாரம்பரிய உணவுகள், கோளரங்கம், மின்னுாலகம், ஓவியம், தொல்லியல், மூலிகை கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்று பயன்பெறலாம்.சந்தா புக் செய்தால் புத்தகம் இலவசம்: அரங்கத்தின் ஸ்டால் எண் 32ல் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்., வெளியீட்டில் ஆன்மிகம், பொது அறிவு, போட்டித்தேர்வு வழிகாட்டி உள்ளிட்ட புத்தகங்களை வாங்கலாம்.இங்கு வாசகர்கள் தினமலர் நாளிதழ் ஆண்டு சந்தா (ரூ.1999) புக்கிங் செய்தால் ரூ.1000 மதிப்புள்ள புத்தகங்களை இலவசமாக பெறலாம்.