அமெரிக்காவில் ஐதராபாத் மாணவர் மர்ம மரணம்
நியூயார்க்: அமெரிக்காவில் ஐதராபாத் மாணவர் மர்ம முறையில் மரணம் அடைந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஓஹியோவில் உள்ள கிளவ்லேண்ட் பகுதியில் மர்ம முறையில் பிணமாக கிடந்தார். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இவரது மரணம் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனை நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. அமெரிக்கா, கனடாவில் இந்தியர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.