உள்ளூர் செய்திகள்

திறனாய்வு தேர்வு: மாணவர்கள் பங்கேற்பு

வால்பாறை: முதலமைச்சரின் திறனாய்வு தேர்வில், 73 மாணவர்கள் பங்கேற்றனர்.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, தமிழக முதல்வரின் திறனாய்வு தேர்வு, வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, மாதம் தோறும், ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த திறனாய்வு தேர்வில், மொத்தம், 74 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில், ஒரு மாணவர் ஆப்சென்ட் ஆன நிலையில், 73 மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வுக்கான ஏற்பாடுகளை, கண்காணிப்பாளர் ராஜ்குமார் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்