உள்ளூர் செய்திகள்

பாரதியார் பல்கலையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வடவள்ளி: பாரதியார் பல்கலைக்கழக தொழிலாளர்கள் சங்கம் சார்பில், மாணவிக்கு பாலியல் சீண்டல் கொடுத்த புகார் மீது முறையான நடவடிக்கை எடுக்காத திருவள்ளுவர் பல்கலை நிர்வாகத்தை கண்டித்து, மூன்று நாள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் சிந்தாமணி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில், போக்சோ வழக்கில் கைது செய்த குற்றவாளி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவி அளித்த புகாரை, மோசடியாக முடித்து வைத்த தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொ) பாபு ஜனார்த்தனன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத திருவள்ளுவர் பல்கலை., நிர்வாகத்தை கண்டிக்கிறோம் என, கோஷங்கள் எழுப்பினர். ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்